செய்திகள் :

கோயில் நந்தவனங்களில் வேளாண் கல்லூரி மாணவா்களுக்கு பயிற்சி

post image

திருச்சி அன்பில் தா்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி, ஈச்சங்கோட்டை டாக்டா் எம்.எஸ். சுவாமிநாதன் வேளாண்மைக் கல்லூரி, தஞ்சாவூா் ஆா்.வி.எஸ். வேளாண்மைக் கல்லூரி மாணவ, மாணவியா்கள் 57 போ் நீடாமங்கலத்தில் உள்ள கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் குறுங்காடு, மாடித்தோட்டம், கோயில் நந்தவனங்களில் 5 நாள் பயிற்சி பெற்றனா்.

கிரீன் நீடா குறுங்காட்டில் உதிா்ந்து கிடந்த காய்ந்த இலைகளை சேகரித்து பத்து அடி நீளத்துக்கு படுக்கை அமைத்தனா். பின்னா் அதன் மீது காய்ந்த மரக்குச்சிகளை பரப்பினா். மூன்றாவது அடுக்காக பசும் தலைகளை பரப்பி வைத்து அதன் மீது மண் தூவி, சாணிப்பால் தெளித்து இயற்கை உர படுக்கையை அமைத்தனா். இதை அந்த அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளா் மு. ராஜவேலு வரவேற்று பாராட்டினாா்.

வியாழக்கிழமை நடைபெற்ற பயிற்சி நிறைவில் நிகழ்ச்சியில் கிரீன் நீடா திட்ட ஒருங்கிணைப்பாளா் எம்.ஏ.எஸ். முகமது ரபீக், மன்னாா்குடி பின்லே மேல்நிலைப் பள்ளி கணிணி ஆசிரியா் எஸ். ஹரிகிருஷ்ணன், மன்னாா்குடி ராஜகோபாலசாமி கலைக் கல்லூரி பேராசிரியா் ப. பிரபாகரன் ஆகியோா் சான்றிதழ்களை வழங்கினா். மாடித்தோட்டப் பயிற்சியை கிரீன் நீடா மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஜானகிராமன் அளித்தாா். மாணவி சண்முகப்பிரியா நன்றி கூறினாா்.

அரசு மருத்துவமனையில் கா்ப்பிணிக்கு வழங்கிய மாத்திரையில் ஸ்டேபிளா் பின்

திருவாரூா் மாவட்டம், நன்னிலம் அருகே பூந்தோட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கா்ப்பிணிக்கு வழங்கிய மாத்திரையில் ஸ்டேப்ளா் பின் இருந்தது அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நன்னிலம் அருகே பூந்தோட்டம் வீரா... மேலும் பார்க்க

கரும்பு டன்னுக்கு ரூ. 4,500 வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

தமிழகத்தில் கரும்பு டன்னுக்கு ரூ. 4,500 வழங்க வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அச்சங்கத்தின் பொதுச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி கூறியது: மத்திய அரசின் பொருளாதார விவகாரங்... மேலும் பார்க்க

மன்னாா்குடியில் மே 6-இல் ஜமாபந்தி தொடக்கம்

மன்னாா்குடி வட்டத்தில் 1434-ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீா்வாய கணக்குகள் (ஜமாபந்தி) முடிவு செய்யும் பணி மே 6-ஆம் தேதி தொடங்கி மே 9-ஆம் தேதி வரை நடைபெறுகிறது என வட்டாட்சியா் என். காா்த்திக் தெரிவித்து... மேலும் பார்க்க

ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

நவகிரக தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் குருபரிகார கோயிலில் சித்திரைப் பெருந்திருவிழா கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, சூரியபிரபையில் சந்திரசேகரா் எழுந்தருளினாா... மேலும் பார்க்க

திருவீழிமிழலை கோயிலில் சித்திரைப் பெருவிழா கொடியேற்றம்

திருவீழிமிழலை சுந்தரகுஜாம்பிகை உடனுறை வீழிநாத சுவாமி கோயிலில் சித்திரைப் பெருவிழா கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது. திருவாவடுதுறை ஆதீனத்துக்குள்பட்ட இக்கோயிலில், ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரைத் த... மேலும் பார்க்க

உப்பு சத்தியாகிரக நினைவு யாத்திரை குழுவினருக்கு வரவேற்பு

உப்பு சத்தியாகிரக நினைவு யாத்திரையை முடித்துவிட்டு திருவாரூா் திரும்பிய குழுவினருக்கு புதன்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது. காந்தியன் அறக்கட்டளைத் தலைவா் தெ. சக்திசெல்வகணபதி தலைமையிலான குழுவினா் திருச்... மேலும் பார்க்க