செய்திகள் :

"கற்பை நிரூபிக்கக் கொதிக்கும் எண்ணெய்யில் விரலை விடு" - குஜராத்தில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

post image

குஜராத் மாநிலம் மெஹ்சானா மாவட்டத்தில் 30 வயது பெண் தனது கற்பை நிரூபிக்கக் கொதிக்கும் எண்ணெய்க்குள் விரலை விட வேண்டும் என அவரது நாத்தனாருடன் இன்னும் மூவர் இணைந்து வற்புறுத்தியதால் அவருக்குப் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன.

Hot Oil
Hot Oil

கடந்த செவ்வாய் (செப் 16) விஜாப்பூர் தாலுகாவில் உள்ள கெரிட்டா என்ற கிராமத்தில் இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது. இது குறித்து வெள்ளிக்கிழமை (செப் 19) காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவருடைய சகோதரி ஜமுனா தாக்கூர், அவரது கணவர் மனுபாய் தாக்கூர் உடன் மேலும் இருவர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர் எனத் துணை காவல் கண்காணிப்பாளர் தினேஷ்சிங் சவுகான் தெரிவித்திருக்கிறார்.

குற்றவாளிகள் நால்வரும் தலைமறைவாகியிருக்கின்றனர் என்கிறது என்.டி.டி.வி-யின் செய்தி. பாதிக்கப்பட்டவர் விஜாப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். அவர் கையை எண்ணெய்யில் வைக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியிருக்கிறது. அதுவே காவலர்கள் நடவடிக்கை எடுக்கக் காரணமாக இருந்துள்ளது.

இதுகுறித்து பேசிய காவல் கண்காணிப்பாளர் தினேஷ்சிங் சவுகான், "பாதிக்கப்பட்ட பெண்ணான ஜமுனா தாக்கூர் அவரது கணவருக்கு உண்மையாக இல்லை எனச் சந்தேகித்துள்ளார். இதனால் மனுபாய் மற்றும் வேறு இருவருடன் இணைந்து அவரை எண்ணெய்யில் விரல் வைக்கும் சடங்கைச் செய்ய வைத்துள்ளார்" என்றார்.

பாதிக்கப்பட்ட பெண் கற்புடன் இருந்தால் அவரது விரலுக்கு எதுவும் ஆகாது என்றும் கூறியுள்ளார். இந்த மூட நம்பிக்கை சமூக வலைத்தளங்களில் விவாதத்தை எழுப்பியிருக்கிறது. இது குறித்த உங்களது கருத்தை கமெண்டில் தெரிவியுங்கள்!

'பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னை; தனியார் மது பாரில் ஒருவர் குத்திக் கொலை!' - புதுக்கோட்டை அதிர்ச்சி

புதுக்கோட்டை எஸ்.எஸ் நகரைச் சேர்ந்தவர் நித்தியராஜ் (வயது: 40). இவர் புதுக்கோட்டை நகரத்தில் உள்ள டி.வி.எஸ் கார்னர் அருகில் உள்ள எஃப்.எல்.டு மதுபானக் கடையில் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது, காரைக... மேலும் பார்க்க

அரசு விடுதியில் மாணவரை நிர்வாணப்படுத்தி தாக்குதல்; வைரலான வீடியோவால் பரபரப்பு

அரசு விடுதியில் தங்கிப் படித்த மாணவனை சக மாணவர்கள் தாக்கி நிர்வாணப்படுத்தி ராக்கிங் செய்து வீடியோ எடுத்த சம்பவம் மதுரை மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.செக்கானூரணி காவல் நிலையம்மதுரை மாவட்டம... மேலும் பார்க்க

நெல்லை: காதல் மனைவியைக் கழுத்தறுத்துக் கொடூரமாகக் கொலை செய்த இளைஞர்; பகீர் வாக்குமூலம்

நெல்லை, கங்கைகொண்டான் அருகிலுள்ள ஆலடிப்பட்டியைச் சேர்ந்தவர் பிரித்திகா. இவரும் அதே பகுதியைச் சேர்ந்த பெயிண்டரான அன்புராஜ் என்பவரும் காதலித்து வந்தனர். இருவரும் ஒரே சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்றாலும், ... மேலும் பார்க்க

கரூர்: அரசு நிலத்தை ஆக்கிரமித்து திருமண மண்டபங்கள்; போலீஸார் பாதுகாப்புடன் இடிப்பு

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள மாயனூர் மதுக்கரை செல்லாண்டியம்மன் கோயில், அம்மா பூங்கா அருகில் மாயனூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் கற்பகவல்லி ரகுபதி கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாகச் சுமார் 50 சென்ட... மேலும் பார்க்க

தூத்துக்குடி: திருமணம் மீறிய உறவு; காவல் நிலையம் முன்பு விஷமருந்தி ஜோடி தற்கொலை செய்த பரிதாபம்!

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு சாலைப்புதூரைச் சேர்ந்தவர் தங்கவேல்சாமி. கார் டிரைவரான இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். தங்கவேல்சாமி, கடந்த சில மாதங்களாக நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள உறவினரின... மேலும் பார்க்க

திருச்செந்தூர்: சிறுமியுடன் பழகிய இளைஞர்; ஓட ஓட விரட்டி கொன்ற சகோதரன்; பின்னணி என்ன?

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் கிருஷ்ணன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன். எலக்ட்ரிஷினான இவர், தற்போது திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலை சுனாமி காலனியில் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறா... மேலும் பார்க்க