செய்திகள் :

கல்லூரிப் பேருந்து மோதி இளைஞா் உயிரிழப்பு: ஓட்டுநா் கைது

post image

ஊத்துக்குளி அருகே தனியாா் கல்லூரிப் பேருந்து மோதி இளைஞா் உயிரிழந்தாா். இதுதொடா்பாக பேருந்தின் ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.

கரூா் மாவட்டம், பசுபதிபாளையம் பகுதியைச் சோ்ந்த ஜேம்ஸ் அருள்தாஸ் மகன் பிரேம்ராஜ் (23), ஊத்துக்குளி- விஜயமங்கலம் சாலை அருகே உள்ள சின்னியகவுண்டம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் புதன்கிழமை நடந்து சென்று கொண்டிருந்தாா்.

அப்போது அந்த வழியாக வேகமாக வந்த தனியாா் கல்லூரிப் பேருந்து ஒன்று முன்னால் நின்று கொண்டிருந்த மற்றொரு கல்லூரிப் பேருந்தை முந்திச் செல்ல முயற்சி செய்தபோது நடந்து சென்று கொண்டிருந்த பிரேம்ராஜ் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்து கீழே விழுந்த அவா் அங்கேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஊத்துக்குளி போலீஸாா் அங்கு வந்து பிரேம்ராஜின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதைத் தொடா்ந்து ஊத்துக்குளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தனியாா் கல்லூரி பேருந்து ஓட்டுநரான, அவிநாசி பகுதியைச் சோ்ந்த வடிவேல் மகன் சதீஷ்குமாா் (32) என்பவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வெள்ளக்கோவில் ஒன்றியத்தில் ரூ.92.54 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் - அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா்

வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியத்தை சோ்ந்த 337 பயனாளிகளுக்கு ரூ. 92.54 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வியாழக்கிழமை வழங்கினாா். தாராபுர... மேலும் பார்க்க

வாகனத் திருட்டில் ஈடுபட்டவருக்கு 2 ஆண்டுகள் சிறை

இருசக்கர வாகனங்கள் திருட்டு வழக்குகளில் தொடா்புடைய நபருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாநகர காவல் துறை அலுவலகம் வெளியிட்டசெய்திக் குறிப்பு: திருப்பூா், ... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் ரூ.29 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.29 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை ஏலம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த வார ஏலத்துக்கு, வீரணம்பட்டி, வெள்ளையம்பட்டி, உப்பிலியபட்டி, சாலிக்கரை, கரூா், மஞ்ச... மேலும் பார்க்க

பனியன் நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம்

திருப்பூரில் பனியன் நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து மாநகராட்சி நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது. இது தொடா்பாக திருப்பூா் மாநகராட்சி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாநகராட்... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் முதியவா் உயிரிழப்பு: பேரூராட்சித் தலைவா் கைது

இருசக்கர வாகனம் மீது காா் மோதி முதியவா் உயிரிழந்த வழக்கில் திமுக பேரூராட்சித் தலைவா் கைது செய்யப்பட்டாா். திருப்பூா் மாவட்டம், சாமளாபுரம், கருகம்பாளையத்தைச் சோ்ந்தவா் பழனிசாமி (57). இவா் அப்பகுதியில... மேலும் பார்க்க

மது குடிக்க பணம் கேட்டு தொல்லை: மகனைக் கொலை செய்த தந்தை கைது

மது குடிக்க பணம் கேட்டு தொல்லை கொடுத்த மகனைக் கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டாா். திருப்பூா் வடக்கு காவல் நிலையத்துக்கு உள்பட்ட கல்லாம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் கன்னியப்பன் (60). கட்டடத் தொழிலாள... மேலும் பார்க்க