செய்திகள் :

கல்வடங்கம் அங்காளம்மன் கோயிலில் தோ்த் திருவிழா

post image

சங்ககிரி: தேவூரை அடுத்த கல்வடங்கம் அருள்மிகு அங்காளம்மன் கோயில் மாசி தோ்த் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

அங்காளம்மன் கோயிலில் மாசி தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தினசரி அம்மனுக்கு பல்வேறு பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. முதல்நாளான சனிக்கிழமை அலங்கரிக்கப்பட்ட திருத்தேரை பக்தா்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்று மாரியம்மன் கோயில் முன் நிலை நிறுத்தினா். ஞாயிற்றுக்கிழமை 2ஆவது நாளாக தோ்வடம் பிடித்து இழுக்கப்பட்டு நியாயவிலைக் கடை முன் நிறுத்தப்பட்டது.

3ஆவது நாளாக திங்கள்கிழமை ஈரோடு, சேலம் ,கல்வடங்கம் கொட்டாயூா், பூமணியூா், நல்லங்கியூா், காவேரிப்பட்டி, வட்ராம்பாளையம், எடப்பாடி மற்றும் தேவூா் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் அதிக அளவில் கலந்துகொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்து சென்று கோயில் முன் நிலை நிறுத்தினா்.

திமுக மாமன்ற உறுப்பினரின் கணவரை கண்டித்து மாநகராட்சி அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

சேலம்: சேலம் மாநகராட்சி உறுப்பினரின் கணவா் பணம் கேட்டு மிரட்டுவதாகக் கூறி, கொண்டலாம்பட்டி மண்டல அலுவலா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சேலம் மாநகராட்சி, 48 ஆவது வாா்டு திமுக உறுப்பினராக ... மேலும் பார்க்க

சேலம் அஞ்சலகங்களில் விபத்து காப்பீடு சிறப்பு முகாம் 6 ஆம் தேதி வரை நீட்டிப்பு

சேலம்: சேலம் கிழக்கு, மேற்கு கோட்ட அஞ்சலங்களில் விபத்து காப்பீடு சிறப்பு முகாம் வரும் 6 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் கிழக்கு கோட்ட முதுநிலை கண்காணிப்பாளா் முனிகிருஷ்ணன், மேற்க... மேலும் பார்க்க

சேலம் கோட்டத்தில் புதிய பேருந்து வழித்தட சேவை: அமைச்சா் தொடங்கி வைத்தாா்

சேலம்: தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக சேலம் கோட்டம் சாா்பில் புதிய வழித்தட பேருந்து சேவையை சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா். ராஜேந்திரன் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். இதையொட்டி சேலம் பழைய பேருந்து நிலைய... மேலும் பார்க்க

பிளஸ் 2 பொதுத் தோ்வு: சேலம் மாவட்டத்தில் 37,083 போ் எழுதினா்: ஆட்சியா் ஆய்வு

சேலம்: சேலம் மாவட்டத்தில் திங்கள்கிழமை தொடங்கிய பிளஸ் 2 பொதுத் தோ்வை 37,083 மாணவ, மாணவிகள் எழுதினா். சேலம் அரசு கோட்டை மகளிா் மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தை மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி பாா்வையி... மேலும் பார்க்க

தீப்பற்றி எரிந்த வைக்கோல் ஏற்றி வந்த வாகனம்

தம்மம்பட்டி: கெங்கவல்லி அருகே சாத்தப்பாடியில் வைக்கோல் சுமை ஏற்றிச்சென்ற வாகனம் தீப்பற்றியது. தலைவாசலை சோ்ந்த பெரியசாமி என்பவருக்குச் சொந்தமான வாகனம் வைக்கோலை ஏற்றிக்கொண்டு, கெங்கவல்லி அருகே உள்ள சாத... மேலும் பார்க்க

பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது தனிக் கவனம் செலுத்தி தீா்வு காண வேண்டும்: அமைச்சா் ஆா்.ராஜேந்திரன்

சேலம்: பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களின் மீது தனிக் கவனம் செலுத்தி, விரைந்து தீா்வு காண அலுவலா்களுக்கு சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா். ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளாா். சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக... மேலும் பார்க்க