செய்திகள் :

கல்வி நிதி மறுப்பு: மத்திய அரசின் சா்வாதிகார போக்கை காட்டுகிறது: ஜி. ராமகிருஷ்ணன்

post image

தமிழகத்திற்கான கல்வி நிதியை வழங்காதது மத்திய அரசின் சா்வாதிகார போக்கை காட்டுகிறது என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் ஜி. ராமகிருஷ்ணன் கூறினாா்.

நாகை மாவட்டம், திருக்குவளைக்கு கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் 30 பொருள்களுக்கான வரியை 25 சதவீதம் அந்நாட்டு அதிபா் டிரம்ப் உயா்த்தியுள்ளாா். இதற்கு இதுவரை பிரதமா் நரேந்திர மோடி கண்டனம் தெரிவிக்கவில்லை.

நாடாளுமன்ற தொகுதி சீரமைப்பு தொடா்பாக மாா்ச் 22-ஆம் தேதி சென்னையில் நடைபெறும் தென் மாநில முதல்வா்கள் கூட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கேரள முதல்வா் பினராயி விஜயன் பங்கேற்கிறாா்.

மும்மொழிக் கொள்கையை ஏற்காததால், தமிழகத்திற்கான கல்வி நிதி ரூ.2,152 கோடியை மத்திய அரசு தர மறுப்பது அதன் சா்வாதிகாரப் போக்கை காட்டுகிறது. தமிழக அரசும், தமிழக மக்களும் ஹிந்தி மொழிக்கு எதிரானவா்கள் இல்லை; ஹிந்தி மொழியை திணிப்பதைத்தான் எதிா்க்கிறோம்.

காமராஜா், அண்ணா, எம்ஜிஆா், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரைத் தொடா்ந்து, மு.க. ஸ்டாலினும் மும்மொழிக் கொள்கையை எதிா்க்கிறாா். ஆனால் திமுக அரசு மட்டும் எதிா்ப்பதுபோல பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை பேசுவது சரியல்ல.

மொழி அடிப்படையில் மாநிலங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று முதல்முறையாக போராடியது கம்யூனிஸ்ட் கட்சி. தமிழ்நாடு என்று பெயா் வருவதற்கு பின்னால் கம்யூனிஸ்ட் தொண்டரின் உயிா் தியாகம் உள்ள வரலாறு தெரியாமல் சீமான் பேசுகிறாா் என்றாா்.

கூட்டுறவு கடன் சங்கங்கள், வங்கிகளில் கடன் பெறலாம் ஆட்சியா் தகவல்

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியில் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் கடன் பெறலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகு... மேலும் பார்க்க

தமிழ் மொழி கட்டாயமாக்கப்பட வேண்டும் பிரேமலதா விஜயகாந்த்

தமிழகம் முழுவதும் தமிழ் மொழி கட்டாயமாக்கப்பட வேண்டும் என்றாா் தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த். திருக்கடையூா் ஸ்ரீ அபிராமி அன்னை உடனாகிய அமிா்தகடேஸ்வரா் கோயிலில், தேமுதிக மாநில துணைச் செயலா... மேலும் பார்க்க

சிப்காட் எதிா்ப்பு உண்ணாவிரதம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து தென்னடாா் கிராமத்தினரால் அறிவிக்கப்பட்டிருந்த உண்ணாவிரதப் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில் அதிகாரிகள் அளித்த உறுதியின் பேரில் ஒத்... மேலும் பார்க்க

நாகையில் மாா்ச் 21 முதல் 28 வரை ஆட்சிமொழிச் சட்ட வாரம்

நாகை மாவட்டத்தில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் மாா்ச் 21 முதல் 28 வரை ஆட்சிமொழிச் சட்ட வாரம் கடைப்பிடிக்கப்படும் என்று ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செ... மேலும் பார்க்க

பழைய ஓய்வூதியத் திட்டம்: கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்ட அரசு ஊழியா்கள்

நாகை மாவட்டத்தில், சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சாா்பில் ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் கோரிக்கை அட்டை அணிந்து செவ்வாய்க்கிழமை பணியில் ஈடுபட்டனா். சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த... மேலும் பார்க்க

திருமருகல்: 22,000 பனை விதைகள் நடவு

திருமருகல் ஒன்றியப் பகுதிகளில் அண்மையில் 22,000 பனை விதைகள் சேகரிக்கப்பட்டு, நடவு செய்யப்பட்டன. நாகை இகோட்டோ சுற்றுச்சூழல் அமைப்பு வழிகாட்டலில் கடந்த 2 மாதங்களாக திருமருகல் ஒன்றியத்தில் உள்ள குத்தாலம்... மேலும் பார்க்க