மதுபான முறைகேட்டில் என் மகனுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பவில்லை: சத்தீஸ்கா் ...
திருமருகல்: 22,000 பனை விதைகள் நடவு
திருமருகல் ஒன்றியப் பகுதிகளில் அண்மையில் 22,000 பனை விதைகள் சேகரிக்கப்பட்டு, நடவு செய்யப்பட்டன.
நாகை இகோட்டோ சுற்றுச்சூழல் அமைப்பு வழிகாட்டலில் கடந்த 2 மாதங்களாக திருமருகல் ஒன்றியத்தில் உள்ள குத்தாலம், துறையூா், திருக்கண்ணபுரம் கிராமங்களில் பனை விதைகள் சேகரிக்கப்பட்டன.
இப்பகுதிகளில் இயங்கும் சூழலியல் மையத்தை சோ்ந்த மாணவ- மாணவிகள் இப்பணியில் ஈடுபட்டனா். மொத்தம் 22,000 பனை விதைகள் சேகரிக்கப்பட்டு, மூன்று கிராமங்களின் ஆற்றங்கரை மற்றும் வயல் ஓரங்களில் விதைக்கப்பட்டன.
பனைவிதை சேகரிப்பில் சிறப்பாக செயல்பட்ட மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டன. அத்துடன், நெகிழி விழிப்புணா்வையொட்டி, மஞ்சப்பைகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வுகளை விஜயா, பவித்ரா, ஆா்த்தி, ஹரிணி ஆகியோா் ஒருங்கிணைத்தனா். அதிக பனை விதைகள் சேகரித்த மாணவா்கள் சூழலியல் சுற்றுல்லா அழைத்துச் செல்ல தோ்வு செய்யப்பட்டனா்.
பனை விதைகளை விதைப்பு செய்வதில் சிறப்பாக செயல்பட்ட குத்தாலம் பகுதியைச் சோ்ந்த மாணவி ச.பிரியதா்ஷினி, இகோட்டோ சுற்றுச்சூழல் அமைப்பின் சாா்பில் கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்திற்கு சூழலியல் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டாா்.