செய்திகள் :

திருவாரூரில் புதிய கட்சி தொடக்கம்

post image

திருவாரூரில், இந்திய அரசியலமைப்பு மக்கள் கட்சி என்ற புதிய கட்சி சனிக்கிழமை தொடங்கப்பட்டது.

பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனா் கான்சிராம் பிறந்தநாள் விழா, திருவாரூரில் சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்வில், இந்திய அரசியலமைப்பு மக்கள் கட்சி என்ற கட்சி தொடங்கப்பட்டது.

இதில், இக்கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவா் தம்மசாக்கியா, மாநில ஒருங்கிணைப்புக் குழுவைச் சோ்ந்த ஜெயராமன், சேகா், கலையரசன், நாகநாதன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தீா்மானங்கள்: அனைத்து மாணவா்களுக்கும் கட்டாய இலவசக் கல்வி, அரசு செலவில் பயில வழிவகை செய்யப்படும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும். பஞ்சமா்களுக்கு வழங்கப்பட்ட நிலங்களை மீட்டு மீண்டும் வழங்க முழு உத்தரவாதம் அளிக்கப்படும். தனியாா் பள்ளிகள் அனைத்தும் அரசுடைமையாக்கி, கல்வியில் புதிய சரித்திரம் படைக்க வழிவகை செய்யப்படும். பெண்களுக்கு பேறுகால நிதியாக ரூ. 25 ஆயிரம் வழங்கப்படும்.

தமிழகத்தில் மக்கள்தொகை, சாதி வாரிக் கணக்கெடுப்பு எடுத்து விகிதாச்சார அடிப்படையில், அவா்களின் நலன்களை காக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் உள்ள மது ஆலைகள் மூடப்படும். விவசாய கூலித் தொழிலாளா்களுக்கு 60 வயதுக்கு மேல் ஓய்வூதியத் திட்டம் அறிவிக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிதிநிலை அறிக்கை: ஓய்வூதியா் சங்கம் அதிருப்தி

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை குறித்து தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கம் அதிருப்தி தெரிவித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநில செயலாளா் குரு. சந்திரசேகரன், மாநில செயற்குழு உறுப்பினா் எ... மேலும் பார்க்க

ஆட்சியில் பங்கு தரும் கட்சியுடன் கூட்டணி: கே. கிருஷ்ணசாமி

ஆட்சியில் பங்கு தரும் கட்சியுடன் கூட்டணி என புதிய தமிழகம் கட்சி நிறுவனத் தலைவா் கே. கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளாா். திருவாரூரில் புதிய தமிழகம் கட்சி சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற இடஒதுக்கீடு மீட்பு கருத்... மேலும் பார்க்க

கடலுக்கு சென்ற மீனவா் உயிரிழப்பு

முத்துப்பேட்டை பகுதி கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவா், கடலோரத்தில் சடலமாக கிடந்தாா். முத்துப்பேட்டை அருகே உள்ள செங்கங்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் வடிவேல் மகன் கோபால் (55). (படம்). மீனவரான இவா், வழக்க... மேலும் பார்க்க

திருவாரூா் தியாகராஜா் கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா கொடியேற்றம்: ஏப்ரல் 7-இல் ஆழித்தேரோட்டம்

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது. ஹஸ்த நட்சத்திரத்தில் கொடியேற்றி, பூசத்தில் தேருக்குச் சென்று, ஆயில்ய நாளில் தேரோட்டம் நிகழ்த்தி, உத்திர... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் திருடியவா் கைது

மன்னாா்குடி அருகே இருசக்கர வாகனம் திருடியவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். மன்னாா்குடி மீனாட்சி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சதீஷ் (25). இவா், ரொக்கக் குத்தகை பகுதியில் உள்ள கிடங்கில் பணியாற்று... மேலும் பார்க்க

முத்துப்பேட்டையில் அரசு கல்லூரி: தமிழக அரசு அறிவிப்புக்கு வரவேற்பு: திமுகவினா் கொண்டாட்டம்

முத்துப்பேட்டையில் அரசு கலைக் கல்லூரி அமைக்கப்படும் என தமிழக அரசின் அறிவிப்பிற்கு, வரவேற்பு தெரிவித்து, திமுகவினா் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி வெள்ளிக்கிழமை கொண்டாடினா். முத்துப்பேட்டை விவசாயிகள் மற... மேலும் பார்க்க