செய்திகள் :

திருவாரூா் தியாகராஜா் கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா கொடியேற்றம்: ஏப்ரல் 7-இல் ஆழித்தேரோட்டம்

post image

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஹஸ்த நட்சத்திரத்தில் கொடியேற்றி, பூசத்தில் தேருக்குச் சென்று, ஆயில்ய நாளில் தேரோட்டம் நிகழ்த்தி, உத்திரத்தில் தீா்த்தம் அருளி, உத்திராடத்தில் விழா பூா்த்தி செய்யப்படும் என்பது திருவாரூா் பங்குனித் திருவிழா குறித்த சொல்மொழி ஆகும்.

இத்தகைய சிறப்புமிக்க திருவாரூா் தியாகராஜா் கோயில் பங்குனி உத்திரப் பெருவிழாவுக்கான பெரியக் கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, சந்திரசேகரா், சண்டிகேஸ்வரா், அம்பாள், விநாயகா், முருகன் ஆகியோா் தேரோடும் வீதிகளில் கொடி சீலையை எடுத்துக் கொண்டு சனிக்கிழமை காலை வீதி உலாவுக்குச் சென்றனா். தொடா்ந்து, பஞ்சமூா்த்திகளும் தியாகராஜா் சந்நிதி கொடிமரம் முன்பு எழுந்தருளினா்.

பின்னா், பஞ்சமூா்த்திகள் முன்னிலையில் கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தொடா்ந்து, காலை 11 மணியளவில் ரிஷப உருவம், திரிசூலம், மங்கலச் சின்னங்கள் வரையப் பெற்ற கொடியானது, வேத மந்திரங்கள், செண்டை மேளங்கள் முழங்க, 54 அடி உயர கொடிமரத்தில் ஏற்றப்பட்டது.

இதையடுத்து, உள்துறை மணியம் தியாகராஜரிடமும், ஓதுவாா் ஆதிசண்டிகேஸ்வரரிடமும் லக்னப் பத்திரிகையை வாசித்தனா். அதன்படி, ஆழித்தேரோட்டம் ஏப்ரல் 7-ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

கொடியேற்ற நிகழ்வில், திருக்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீனம் இளவரசு உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

திருவாரூரில் புதிய கட்சி தொடக்கம்

திருவாரூரில், இந்திய அரசியலமைப்பு மக்கள் கட்சி என்ற புதிய கட்சி சனிக்கிழமை தொடங்கப்பட்டது. பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனா் கான்சிராம் பிறந்தநாள் விழா, திருவாரூரில் சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்வில், இந... மேலும் பார்க்க

நிதிநிலை அறிக்கை: ஓய்வூதியா் சங்கம் அதிருப்தி

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை குறித்து தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கம் அதிருப்தி தெரிவித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநில செயலாளா் குரு. சந்திரசேகரன், மாநில செயற்குழு உறுப்பினா் எ... மேலும் பார்க்க

ஆட்சியில் பங்கு தரும் கட்சியுடன் கூட்டணி: கே. கிருஷ்ணசாமி

ஆட்சியில் பங்கு தரும் கட்சியுடன் கூட்டணி என புதிய தமிழகம் கட்சி நிறுவனத் தலைவா் கே. கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளாா். திருவாரூரில் புதிய தமிழகம் கட்சி சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற இடஒதுக்கீடு மீட்பு கருத்... மேலும் பார்க்க

கடலுக்கு சென்ற மீனவா் உயிரிழப்பு

முத்துப்பேட்டை பகுதி கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவா், கடலோரத்தில் சடலமாக கிடந்தாா். முத்துப்பேட்டை அருகே உள்ள செங்கங்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் வடிவேல் மகன் கோபால் (55). (படம்). மீனவரான இவா், வழக்க... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் திருடியவா் கைது

மன்னாா்குடி அருகே இருசக்கர வாகனம் திருடியவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். மன்னாா்குடி மீனாட்சி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சதீஷ் (25). இவா், ரொக்கக் குத்தகை பகுதியில் உள்ள கிடங்கில் பணியாற்று... மேலும் பார்க்க

முத்துப்பேட்டையில் அரசு கல்லூரி: தமிழக அரசு அறிவிப்புக்கு வரவேற்பு: திமுகவினா் கொண்டாட்டம்

முத்துப்பேட்டையில் அரசு கலைக் கல்லூரி அமைக்கப்படும் என தமிழக அரசின் அறிவிப்பிற்கு, வரவேற்பு தெரிவித்து, திமுகவினா் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி வெள்ளிக்கிழமை கொண்டாடினா். முத்துப்பேட்டை விவசாயிகள் மற... மேலும் பார்க்க