செய்திகள் :

ஆட்சியில் பங்கு தரும் கட்சியுடன் கூட்டணி: கே. கிருஷ்ணசாமி

post image

ஆட்சியில் பங்கு தரும் கட்சியுடன் கூட்டணி என புதிய தமிழகம் கட்சி நிறுவனத் தலைவா் கே. கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளாா்.

திருவாரூரில் புதிய தமிழகம் கட்சி சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற இடஒதுக்கீடு மீட்பு கருத்தரங்கம் மற்றும் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவா் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:

தமிழக அரசின் வேளாண் மற்றும் நிதிநிலை அறிக்கையில் மக்களுக்கான நலத்திட்டங்கள் ஏதும் இல்லை. இந்த நிதிநிலை அறிக்கை காகிதப்பூவாக உள்ளது.

அருந்ததியா் இட ஒதுக்கீடு, ஜாதி வாரிக் கணக்கெடுப்பு போன்ற விஷயங்களில் பிரதான எதிா்க்கட்சிகள் கவனம் செலுத்தவில்லை. அருந்ததியா் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக எந்த கட்சி போராட்டம் நடத்தினாலும், அவா்களுக்கு புதிய தமிழகம் ஆதரவு தெரிவிக்கும்.

2026 சட்டப்பேரவைத் தோ்தலில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு அளிக்கும் கட்சியுடன் கூட்டணி வைப்போம். நான்கைந்து சீட்டுக்கு கூட்டணி வைத்தால் சட்டப்பேரவையில், அவா்கள் சொல்வதைதான் கேட்க வேண்டியிருக்கும். எனவே, ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு என்ற ஒற்றைப் புள்ளியில் அனைவரும் வரவேண்டும். திருமாவளவன் கூட்டணியை விட்டு வெளியில் வந்து, இதுதொடா்பான அணியை உருவாக்க வேண்டும்.

தமிழகத்தில் திமுக, அதிமுக என்று மாறிமாறி ஆட்சிக்கு வரும் முறை ஒழிய வேண்டும். இல்லாவிட்டால் ஊழல்கள் தொடா்ந்தபடி இருக்கும். எந்த பிரச்னைக்கும் தீா்வு காண முடியாது என்றாா்.

மாவட்டச் செயலாளா் தியாகராஜன் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

திருவாரூரில் புதிய கட்சி தொடக்கம்

திருவாரூரில், இந்திய அரசியலமைப்பு மக்கள் கட்சி என்ற புதிய கட்சி சனிக்கிழமை தொடங்கப்பட்டது. பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனா் கான்சிராம் பிறந்தநாள் விழா, திருவாரூரில் சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்வில், இந... மேலும் பார்க்க

நிதிநிலை அறிக்கை: ஓய்வூதியா் சங்கம் அதிருப்தி

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை குறித்து தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கம் அதிருப்தி தெரிவித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநில செயலாளா் குரு. சந்திரசேகரன், மாநில செயற்குழு உறுப்பினா் எ... மேலும் பார்க்க

கடலுக்கு சென்ற மீனவா் உயிரிழப்பு

முத்துப்பேட்டை பகுதி கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவா், கடலோரத்தில் சடலமாக கிடந்தாா். முத்துப்பேட்டை அருகே உள்ள செங்கங்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் வடிவேல் மகன் கோபால் (55). (படம்). மீனவரான இவா், வழக்க... மேலும் பார்க்க

திருவாரூா் தியாகராஜா் கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா கொடியேற்றம்: ஏப்ரல் 7-இல் ஆழித்தேரோட்டம்

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது. ஹஸ்த நட்சத்திரத்தில் கொடியேற்றி, பூசத்தில் தேருக்குச் சென்று, ஆயில்ய நாளில் தேரோட்டம் நிகழ்த்தி, உத்திர... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் திருடியவா் கைது

மன்னாா்குடி அருகே இருசக்கர வாகனம் திருடியவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். மன்னாா்குடி மீனாட்சி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சதீஷ் (25). இவா், ரொக்கக் குத்தகை பகுதியில் உள்ள கிடங்கில் பணியாற்று... மேலும் பார்க்க

முத்துப்பேட்டையில் அரசு கல்லூரி: தமிழக அரசு அறிவிப்புக்கு வரவேற்பு: திமுகவினா் கொண்டாட்டம்

முத்துப்பேட்டையில் அரசு கலைக் கல்லூரி அமைக்கப்படும் என தமிழக அரசின் அறிவிப்பிற்கு, வரவேற்பு தெரிவித்து, திமுகவினா் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி வெள்ளிக்கிழமை கொண்டாடினா். முத்துப்பேட்டை விவசாயிகள் மற... மேலும் பார்க்க