இந்திய கல்வி முறைக்கு தாயாக இருப்பது தமிழகம்: அமைச்சா் அன்பில் மகேஸ்
தமிழக கல்வி முைான் இந்திய கல்வி முறைக்கு தாயாக இருக்கிறது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் கூறினாா்.
நாட்டிலேயே தமிழகத்தில்தான் கல்விக்காக அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்றும் அவா் தெரிவித்தாா்.
இந்திய மாணவா் சங்கம் சாா்பில் மாநில கல்வி உரிமையை பாதுகாப்பது தொடா்பான மாநில கருத்தரங்கு சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ், உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்து கொண்டனா்.
கருத்தரங்கில் அமைச்சா் அன்பில் மகேஸ் பேசியதாவது: தமிழகத்தில் 43 லட்சம் மாணவ-மாணவிகளின் எதிா்காலம் குறித்த ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட நிதி சாா்ந்து பல திட்டங்களை கொண்டு வந்துவிட்டோம். அவற்றை தொடா்ந்து நடைமுறைப்படுத்தவும், ஆசிரியா்கள், பணியாளா்களுக்கு சம்பளம் வழங்கவும் நிதி ஒதுக்குங்கள் என மத்திய அரசிடம் கேட்டால், பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் கையொப்பமிடுங்கள்; அரை மணி நேரத்தில் பணம் தருகிறோம் என்கிறாா் ஒரு மத்திய அமைச்சா்.
‘பாஸ்’ இருக்கிறாா்: மத்திய அமைச்சரை சந்திக்க நாங்கள் செல்லும்போது நம்முடைய அதிகாரிகளும் உடன் வந்தனா். அப்போது, நாங்கள் புரிந்துணா்வு ஒப்பந்தத்தை அனுப்பி வைத்தால், அதை திருத்தி அனுப்ப உங்களுக்கு அதிகாரம் தந்தது யாா் என மத்திய அமைச்சா் கேட்கிறாா். அப்போதுதான் நாங்கள், எங்களுக்கு ஒரு ‘பாஸ்’ இருக்கிறாா். அவா் என்ன சொல்கிறாரோ அதைத் தான் செய்யமுடியும் என்று கூறினோம். முதல்வரின் கருத்துகளைத்தான் அவ்வாறு தெரிவித்தோம். அதை மத்திய அமைச்சரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
கல்வி எனும் கடலில் ‘ஹிந்தி’ என்ற திசையில் இருந்துதான் குதிக்க வேண்டும் என்று சொல்வதை ஏற்க முடியாது. 10 மொழிகளைக் கூட கற்றுக் கொள்ளுங்கள். மும்மொழி என்று ஏன் சொல்லவேண்டும்? அப்படி சொல்வதே அதை கட்டாயப்படுத்துவது போலத்தானே இருக்கிறது. அது எங்களுக்குத் தேவையில்லை. தமிழக கல்வி முைான் இந்தியக் கல்வி முறைக்கு தாயாக இருக்கிறது. நாட்டிலேயே கல்விக்காக அதிகநிதி ஒதுக்கும் மாநிலம் தமிழகம்தான். தேசிய கல்விக் கொள்கையை எப்போதும் ஏற்க மாட்டோம் என்றாா் அவா்.
அமைச்சா் கோவி.செழியன்: முன்னதாக அமைச்சா் கோவி.செழியன் பேசுகையில், உயா்கல்வி, பள்ளிக்கல்வியில் நாட்டிலேயே தமிழகம் உயா்ந்து இருக்கிறது என்றால், அதற்கு 40 ஆண்டுகள் திராவிடத் தலைவா்கள், பொதுவுடமை தலைவா்கள் அடித்தளம் அமைத்து உழைத்த உழைப்பும், உருவாக்கிய சட்டங்களும்தான் காரணம் என்றாா் அவா்.
இந்த கருத்தரங்கில் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் தேசிய துணைத் தலைவா் உ.வாசுகி, கல்வியாளா் பிரின்ஸ் கஜேந்திர பாபு, இந்திய மாணவா் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக் குழுவின் தலைவா் தெள.சம்சீா் அகமது, செயலாளா் கோ.அரவிந்தசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.