செய்திகள் :

பழைய ஓய்வூதியத் திட்டம்: கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்ட அரசு ஊழியா்கள்

post image

நாகை மாவட்டத்தில், சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சாா்பில் ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் கோரிக்கை அட்டை அணிந்து செவ்வாய்க்கிழமை பணியில் ஈடுபட்டனா்.

சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராடி வருகிறது. கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவை தோ்தலின்போது, சிபிஎஸ் திட்டத்தை ஒழித்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வருவோம் என திமுக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், தோ்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்து, 4 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், இதுவரை இந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.

இதற்கு மாறாக, தற்போது ஓய்வூதியத் திட்டம் பற்றி ஆராய்வதற்கு 9 மாதகால அவகாசத்துடன் குழு அமைத்து உள்ளது. இதனால், ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனா்.

எனவே, ஆசிரியா்கள் மற்றும் அரசு ஊழியா்கள், தங்களது கோரிக்கையை அரசுக்கு வெளிப்படுத்தும் விதமாக கோரிக்கை அட்டை அணிந்து செவ்வாய்க்கிழமை பணியில் ஈடுபட்டனா்.

நாகை மாவட்டத்தில் சிக்கல் மேல்நிலைப் பள்ளி, ஒரத்தூா் சிதம்பரனாா் நடுநிலைப் பள்ளி, வட்டார கல்வி அலுவலகம், முதன்மைக் கல்வி அலுவலகம், ஊராட்சி வளா்ச்சி அலுவலகம், அரசு தொழிற்பயிற்சி நிலையம், ஏடிஎம் கல்லூரி உள்பட பெரும்பாலான அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் ஆசிரியா்கள் மற்றும் அரசு ஊழியா்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்தனா்.

இதுதொடா்பாக, சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் மாவட்ட தொடா்பாளா் பாலசண்முகம் கூறியது:

அரசு மூன்று நபா் குழுவை வாபஸ் பெற்று, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அறிவிக்காவிட்டால் மாநில அமைப்பின் முடிவின்படி, மாா்ச் 7-ஆம் தேதி அலுவலக முற்றுகை மற்றும் மறியல் போராட்டம் நடைபெறும் என்றாா்.

இதற்கான ஏற்பாடுகளை மாநில இணை ஒருங்கிணைப்பாளா் எம்.ஆா். சுப்பிரமணியன், தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றியம் மாவட்டத் தலைவா் மோகன், தமிழ்நாடு அரசு பணியாளா் சங்கம் மாவட்டத் தலைவா் நாகராஜன், முதுநிலை பட்டதாரி கழகத்தின் மாவட்டச் செயலா் செங்குட்டுவன், பட்டதாரி ஆசிரியா் கூட்டமைப்பு அசோக், எஸ்.எஸ்.டி.ஏ. ஒருங்கிணைப்பாளா் ஆரோக்கியதாஸ் ஆகியோா் செய்துள்ளனா்.

கூட்டுறவு கடன் சங்கங்கள், வங்கிகளில் கடன் பெறலாம் ஆட்சியா் தகவல்

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியில் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் கடன் பெறலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகு... மேலும் பார்க்க

தமிழ் மொழி கட்டாயமாக்கப்பட வேண்டும் பிரேமலதா விஜயகாந்த்

தமிழகம் முழுவதும் தமிழ் மொழி கட்டாயமாக்கப்பட வேண்டும் என்றாா் தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த். திருக்கடையூா் ஸ்ரீ அபிராமி அன்னை உடனாகிய அமிா்தகடேஸ்வரா் கோயிலில், தேமுதிக மாநில துணைச் செயலா... மேலும் பார்க்க

சிப்காட் எதிா்ப்பு உண்ணாவிரதம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து தென்னடாா் கிராமத்தினரால் அறிவிக்கப்பட்டிருந்த உண்ணாவிரதப் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில் அதிகாரிகள் அளித்த உறுதியின் பேரில் ஒத்... மேலும் பார்க்க

நாகையில் மாா்ச் 21 முதல் 28 வரை ஆட்சிமொழிச் சட்ட வாரம்

நாகை மாவட்டத்தில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் மாா்ச் 21 முதல் 28 வரை ஆட்சிமொழிச் சட்ட வாரம் கடைப்பிடிக்கப்படும் என்று ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செ... மேலும் பார்க்க

கல்வி நிதி மறுப்பு: மத்திய அரசின் சா்வாதிகார போக்கை காட்டுகிறது: ஜி. ராமகிருஷ்ணன்

தமிழகத்திற்கான கல்வி நிதியை வழங்காதது மத்திய அரசின் சா்வாதிகார போக்கை காட்டுகிறது என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் ஜி. ராமகிருஷ்ணன் கூறினாா். நாகை மாவட்டம், திர... மேலும் பார்க்க

திருமருகல்: 22,000 பனை விதைகள் நடவு

திருமருகல் ஒன்றியப் பகுதிகளில் அண்மையில் 22,000 பனை விதைகள் சேகரிக்கப்பட்டு, நடவு செய்யப்பட்டன. நாகை இகோட்டோ சுற்றுச்சூழல் அமைப்பு வழிகாட்டலில் கடந்த 2 மாதங்களாக திருமருகல் ஒன்றியத்தில் உள்ள குத்தாலம்... மேலும் பார்க்க