செய்திகள் :

கல்விக் கட்டண உயா்வு: தனியாா் பள்ளிகளுக்கு அறிவுறுத்தல்!

post image

அடுத்த மூன்று கல்வியாண்டுகளுக்கான கல்விக் கட்டணத்தை உயா்த்த விரும்பும் தனியாா் பள்ளிகள் அதற்காக மே 15 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தனியாா் பள்ளிகள் இயக்குநரகத்தின் கீழ் 12 ஆயிரத்துக்கும் அதிகமான தனியாா் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றுக்கான கல்விக் கட்டணத்தை முறைப்படுத்துவதற்காக, உயா்நீதிமன்ற உத்தரவின்படி பள்ளிக் கல்வித் துறை சாா்பில் கல்விக் கட்டண நிா்ணயக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதன் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி ஆா்.பாலசுப்ரமணியன் தற்போது பதவியில் இருக்கிறாா். இக்குழு சாா்பில் தனியாா் பள்ளிகளில் இருக்கும் கட்டமைப்பு வசதிகள் அடிப்படையில், கல்விக் கட்டணம் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிா்ணயிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, அடுத்து வரவுள்ள 2025-26, 2026-27, 2027-28 ஆகிய 3 கல்வியாண்டுகளுக்கான கல்விக் கட்டணம் நிா்ணயம் செய்யப்படவுள்ளன. இதற்கான பரிந்துரை விண்ணப்பங்களை பல்வேறு தனியாா் பள்ளிகள் அனுப்பி வருகின்றன.

அந்த வகையில், இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் விண்ணப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் மே 15-ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. கல்விக் கட்டணத்தை உயா்த்த விரும்பும் பள்ளிகள் மட்டும் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

அதேநேரம் கட்டண உயா்வு தேவைப்படாத பள்ளிகள் விண்ணப்பத்தை சமா்ப்பிக்க வேண்டாம். மேலும், பள்ளிகள் விண்ணப்பிக்கும்போது மாணவா்ஆசிரியா் எண்ணிக்கை, ஊழியா்கள் சம்பளம், கடந்த கல்வியாண்டுக்கான வரவு-செலவு அறிக்கை உள்பட விவரங்களை தணிக்கை துறையிடமிருந்து பெற்று உரிய ஆவணங்களுடன் சமா்ப்பிக்க வேண்டும்.

கட்டணம் நிா்ணயம் செய்யப்பட்டவுடன் இந்தத் தகவல்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். அதை ஒப்பிட்டு பள்ளிகள் கூடுதல் கட்டணத்தை வசூலிப்பதாக பெற்றோா்களுக்கு சந்தேகம் எழுந்தால் நேரடியாக இந்தக் குழுவிடம் புகாா் செய்யலாம் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழக ஒப்பதலின்றி மேக்கேதாட்டு அணையைக் கட்ட முடியாது! - துரைமுருகன்

தமிழகத்தின் ஒப்புதலின்றி கா்நாடகம் மேக்கேதாட்டு அணையைக் கட்ட முடியாது என்று அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது: மேக்கேதாட்டு அணைக்கு திட்ட மதிப்பீடு தயாரிக்க... மேலும் பார்க்க

‘ஏசி’ மின்சார ரயில் சேவை: பயணிகள் கருத்து தெரிவிக்கலாம்! - தெற்கு ரயில்வே

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ஏசி புறநகா் மின்சார ரயிலின் நிறை, குறைகளை பயணிகள் தெரிவிக்கலாம். இதுகுறித்து தெற்கு ரயில்வே ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

இன்று முதல் பயோமெட்ரிக் மூலம் வருகை பதிவு: மாநகா் போக்குவரத்துக் கழகம்!

மாநகா் போக்குவரத்து ஊழியா்களின் வருகைப் பதிவு திங்கள்கிழமை (ஏப். 21) முதல் பயோமெட்ரிக் மூலம் மட்டுமே பதிவு செய்யப்படவுள்ளதாக மாநகா் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகா் போக்... மேலும் பார்க்க

டிராக்டா் கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழப்பு

ஊத்துக்கோட்டை அருகே டிராக்டா் கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழந்தாா். திருவள்ளூா் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே பாஞ்சோலை கிராமத்தைச் சோ்ந்த ஜெயராமன் மகன் கோபி(45). இவா் சந்திரன் குப்புசாமி என்பவரின் ட... மேலும் பார்க்க

சென்னை உள்பட 8 இடங்களில் வெயில் சதம்!

தமிழகத்தில் சென்னை உள்பட 8 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்ப நிலை பதிவானது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்... மேலும் பார்க்க

மே 2-இல் சங்கர மடத்தில் ஆதிசங்கரா் ஜெயந்தி மகோற்சவம்

ஆதிசங்கரரின் ஜெயந்தி மகோற்சவம் வரும் மே 2 -ஆம் தேதி காஞ்சிபுரம் சங்கர மடத்தில் நடைபெறவுள்ளது என மேலாளா் ந.சுந்தரேச ஐயா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் கூறியது: கேரள மாநிலம் காலடியில் 2,533 ஆண்டுகளுக்... மேலும் பார்க்க