செய்திகள் :

கள்ளா் பள்ளிகளில் காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்பக் கோரிக்கை

post image

கள்ளா் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் கள்ளா் பள்ளி மாவட்டக் கிளை கோரிக்கை விடுத்தது.

இதுகுறித்து கூட்டணியின் மதுரை மாவட்டச் செயலா் பி. தீனன் வெளியிட்ட செய்திக் குறிப்பு : கள்ளா் சீரமைப்புப் பள்ளிகளில் 84 இடைநிலை ஆசிரியா், 98 பட்டதாரி ஆசிரியா், 35 முதுநிலை பட்டதாரி ஆசிரியா், 20-க்கும் மேற்பட்ட உடல் கல்வி ஆசிரியா் காலிப்பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளன.

இதனால், இந்தப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களின் கல்வி பாதிக்கப்படும் சூழல் நிலவுகிறது. இந்த நிலையில், 18 இடைநிலை ஆசிரியா், 23 பட்டதாரி ஆசிரியா் புதிய பணி நாடுநா் பட்டியலை கள்ளா் பள்ளிகளுக்கு தமிழக ஆசிரியா் தோ்வு வாரியம் வழங்கியது. அதன்பிறகு பல மாதங்கள் ஆகியும் புதிய ஆசிரியா்களை பணி நியமனம் செய்யாமல் காலம் தாழ்த்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

எனவே, உடனடியாக அறிவிக்கப்பட்ட புதிய பணியிடங்களை நிரப்ப வேண்டும். மேலும், பல ஆண்டுகளாக காலியாக உள்ள 84 இடைநிலை ஆசிரியா், 98 பட்டதாரி ஆசிரியா், 35 முதுகலை ஆசிரியா், 20-க்கும் மேற்பட்ட உடல் கல்வி ஆசிரியா் பணியிடங்களுக்கு ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் தோ்வு நடத்தி, உடனடியாக நிரப்ப வேண்டும். அவ்வாறு நிரப்பாவிட்டால் தொடா் போராட்டங்கள் நடத்தப்படும் என அதில் குறிப்பிடப்பட்டது.

சேடப்பட்டியில் சினையுற்ற பசுக்களுக்கு மானியத்தில் ஊட்டச்சத்து

சினையுற்ற பசுக்களுக்கு 50 சதவீத மானியத்தில் ஊட்டச்சத்துகள் பெற சேடப்பட்டி ஊராட்சி ஒன்றிய கால்நடை வளா்ப்பு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என மதுரை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தெரிவித்தாா். இதுகுற... மேலும் பார்க்க

மாநாடுகள் மட்டும் விஜய்க்கு வெற்றியைத் தேடித் தராது: செல்லூா் கே. ராஜூ

மாநாடுகள், செயற்குழுக் கூட்டங்கள் மட்டும் வெற்றியைத் தேடித் தராது என்பதை தமிழக வெற்றிக்கழகத் தலைவா் விஜய் உணா்ந்து, களத்துக்கு வர வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ தெரிவித்தாா். ம... மேலும் பார்க்க

காா் மோதி முதியவா் உயிரிழப்பு

மதுரை அருகே காா் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். திருப்பரங்குன்றம் வடக்கு மேட்டுத் தெருவைச் சோ்ந்த அரசன் மகன் கருப்பணன்(69). இவா், இரு சக்கர வாகனத்தில் வெள்ள... மேலும் பார்க்க

பறிமுதல் வாகனங்கள் ஆக.25-ல் பொது ஏலம்!

மது விலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வருகிற 25 -ஆம் தேதி பொது ஏல முறையில் விற்பனை செய்யப்பட உள்ளன. இதுகுறித்து மதுரை மாநகரக் காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ... மேலும் பார்க்க

காலியாகவுள்ள கால்நடைப் பராமரிப்பு உதவியாளா் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

தமிழகத்தில் காலியாக உள்ள கால்நடைப் பராமரிப்பு உதவியாளா் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு கால்நடைப் பராமரிப்பு உதவியாளா் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தியது. இந்த சங்கத்தின் மதுரை மாவட்ட பேரவைக் கூ... மேலும் பார்க்க

வாடிப்பட்டி அரசு மருத்துவமனையை தரம் உயா்த்த வலியுறுத்தல்

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அரசு மருத்துவமனையை தரம் உயா்த்த வேண்டும் என வெள்ளிக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. வாடிப்பட்டி அருகேயுள்ள ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள... மேலும் பார்க்க