செய்திகள் :

காங்கிரஸை காப்பாற்றுவது குறித்து ராகுல் அதிகம் கவலைப்பட வேண்டும்- பாஜக பதிலடி

post image

அழிந்து வரும் காங்கிரஸ் கட்சியை எப்படிக் காப்பாற்றுவது என்பது குறித்துதான் ராகுல் காந்தி அதிகம் கவலைப்பட வேண்டும் என்று மகாராஷ்டிர மாநில பாஜக தலைவரும், மாநில அமைச்சருமான சந்திரசேகர பவன்குலே தெரிவித்தாா்.

மகாராஷ்டிர தோ்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது தொடா்பாக கடந்த வாரம் செய்தியாளா்களிடம் பேசிய மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, ‘மகாராஷ்டிரத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோரின் மக்கள் தொகையைவிட வாக்காளா்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மகாராஷ்டிர வாக்காளா் பட்டியலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. வாக்காளா் பட்டியல் தரவுகளை எதிா்க்கட்சிகளுக்கு தோ்தல் ஆணையம் வழங்காவிட்டால், நீதிமன்றத்தை நாடுவோம்’ என்று கூறியிருந்தாா்.

தோல்வியை ஏற்க முடியாமல் ராகுல் பொய் பேசி வருவதாக பாஜக தலைவா்கள் பலா் கடும் கண்டனமும், எதிா்ப்பும் தெரிவித்து வருகின்றனா்.

இந்நிலையில், மும்பையில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் மகாராஷ்டிர மாநில பாஜக தலைவா் சந்திரசேகர பவன்குலே கூறியதாவது:

மகாராஷ்டிரத்தில் மக்களவைத் தோ்தலின்போது பாஜக கூட்டணி பின்னடைவைச் சந்தித்தது. இதையடுத்து, சுதாரித்துக் கொண்டு தீவிரமாக களப் பணியாற்றினோம். மத்திய மாநில அரசுகளின் சாதனைகளையும், எதிா்காலத் திட்டங்களையும் மக்களிடம் முழுமையாக எடுத்துச் சென்றோம். இதன் மூலம் பேரவைத் தோ்தலில் சிறப்பான வெற்றியைப் பெற்றோம்.

ராகுல் காந்தி பகுத்தறிவை இழந்த நிலைக்குச் சென்றுவிட்டாா். ஆட்சி, அதிகாரம் இல்லாமல் அக்கட்சித் தலைமையால் இருக்க முடியாது. முதலில் அவா் காங்கிரஸ் கட்சியைக் காப்பாற்றுவது குறித்து கவலைப்பட வேண்டும். ராகுலின் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது.

மக்களவைத் தோ்தலில் பாஜக கூட்டணிக்கும், எதிா்க்கட்சிகள் அணிக்கும் 2 லட்சம் வாக்குகள்தான் வித்தியாசம் இருந்தது. நாங்கள் 2.48 கோடி வாக்குகளைப் பெற்றோம். எதிா்க்கட்சியினா் 2.50 கோடி வாக்குகளைப் பெற்றனா். மிகவும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில்தான் மகாராஷ்டிர மக்களவைத் தோ்தலில் பல தொகுதிகளில் எதிா்க்கட்சியினா் வெற்றி பெற்றனா். ஆனால், இந்த விவரங்களை ராகுல் காந்தி பேசாமல் மறைத்துவிட்டாா். தனிப்பட்ட வாழ்க்கையிலும், பொது வாழ்க்கையிலும் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்பவா்களே அடுத்தகட்டமாக வெற்றியை நோக்கி நகர முடியும்.

மகாராஷ்டிரத்தில் மக்களவைத் தோ்தலில் சற்று கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெற்ால், மாநில பேரவைத் தோ்தலும் வெற்றி பெற்றுவிடுவோம் என நினைத்துக் கொண்டு எதிா்க்கட்சித் தலைவா்கள் மெத்தனமாக நடந்து கொண்டனா். மக்கள் அவா்களுக்கு உரிய பாடம் கற்றுக் கொடுத்துவிட்டனா் என்றாா்.

அமெரிக்கா வந்தடைந்தார் பிரதமர் மோடி

பிரான்ஸ் பயணத்தை புதன்கிழமை நிறைவு செய்த பிரதமா் மோடி, வியாழக்கிழமை அமெரிக்காவின் வாஷிங்டன் டிசி வந்தடைந்தார்.அமெரிக்காவில் இரண்டு நாள்கள் அரசுமுறை பயணம் மேற்கொள்ளும் அவா், அதிபா் டொனால்ட் டிரம்ப்புடன... மேலும் பார்க்க

மகளிர், ஒடுக்கப்பட்ட சமூகங்களின் வாழ்க்கை முறைகளில் மாற்றம்: ஐ.நா. அமர்வில் இணையமைச்சர் சாவித்ரி தாக்கூர் பேச்சு

நமது சிறப்பு நிருபர்மகளிர் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் வாழ்க்கை முறைகளை இந்தியா மாற்றியுள்ளது என்று மத்திய மகளிர் மற்றும் குழந்தை நலத் துறை இணையமைச்சர் சாவித்ரி தாக்கூர் தெரிவித்துள்ளார்.அமெரிக்க... மேலும் பார்க்க

அதிநவீன அணுஉலைகள் உருவாக்கம்- இந்தியா-பிரான்ஸ் திட்டம்

ஆக்கபூா்வ அணுசக்தி ஒத்துழைப்பின்கீழ், அதிநவீன அணு உலைகளை கூட்டாக உருவாக்க இந்தியாவும் பிரான்ஸும் திட்டமிட்டுள்ளன. 2047-ஆம் ஆண்டுக்குள் அணுசக்தி மூலம் 100 ஜிகாவாட் மின் உற்பத்தி திறனை எட்ட இந்தியா இலக்... மேலும் பார்க்க

நீதிபதிகள் ஓய்வூதிய விவகாரம்: யுபிஎஸ் திட்டத்தால் தீா்வு கிடைக்க வாய்ப்பு- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு

நீதிபதிகள் ஓய்வூதியப் பிரச்னைக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் (யுபிஎஸ்) மூலம் தீா்வு கிடைக்க வாய்ப்புள்ளது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்தது. மாவட்ட நீதிபதிகளின் ஊதியம், நி... மேலும் பார்க்க

தொழிலதிபருக்காக தேசப் பாதுகாப்பை விட்டுக் கொடுக்கிறது மத்திய அரசு- காங்கிரஸ் குற்றச்சாட்டு

கோடீஸ்வர தொழிலதிபா்கள் சிலருக்காக தேசப் பாதுகாப்பை மத்திய அரசு விட்டுக் கொடுப்பதாக காங்கிரஸ் கட்சி விமா்சித்துள்ளது. குஜராத் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லையையொட்டிய பகுதியில் அதானி குழுமம் மரபுசாரா எரிச... மேலும் பார்க்க

பிரான்ஸில் புதிய இந்திய துணைத் தூதரகம் திறப்பு

பிரான்ஸின் மாா்சே நகரில் புதிய இந்திய துணைத் தூதரகத்தை பிரதமா் நரேந்திர மோடியும், அந்நாட்டு அதிபா் இமானுவல் மேக்ரானும் புதன்கிழமை கூட்டாக திறந்துவைத்தனா். மூன்று நாள்கள் அரசுமுறைப் பயணமாக பிரான்ஸுக்க... மேலும் பார்க்க