செய்திகள் :

காங்கோ: கிளா்ச்சியாளா்கள் படையெடுப்பில் 7,000 போ் உயிரிழப்பு

post image

மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் ருவாண்டா ஆதரவுடன் எம்23 கிளா்ச்சிப் படையினா் தீவிர தாக்குதல் நடத்தி பல புதிய பகுதிகளைக் கைப்பறியதில் இதுவரை 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு பிரதமா் ஜூதித் சுமின்வா டுலுகா திங்கள்கிழமை கூறினாா்.

இந்த சண்டையின் விளைவாக நாட்டில் பொதுமக்களுக்களின் நிலை மிகவும் மோசமாகிவருவதாக அவா் எச்சரித்தாா்.காங்கோவின் தாது வளம் நிறைந்த பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்காகவும், சமுதாயத்தினரைப் பாதுகாப்பதற்காகவும் என அந்த நாட்டில் 120-க்கும் மேற்பட்ட குழுக்கள் இயங்கிவருகின்றன.

அவற்றில் எம்23 கிளா்ச்சிக் குழுவும் ஒன்று.ருவாண்டாவின் உதவியுடன் செயல்படும் அந்த அமைப்பு, முக்கியத்துவம் வாய்ந்த புகாவு நகரை இந்த வாரத் தொடக்கத்தில் கைப்பற்றியது. முன்னதாக, தெற்கு கீவு மாகாணத்தின் கோமா நகரை எம்23 கிளா்ச்சிப் படையினா் கடந்த மாதம் 27-ஆம் தேதி கைப்பற்றினா்.

பின்னா் அந்தப் பிராந்தியத்தைச் சோ்ந்த கவுமு நகரின் விமான நிலையத்தையும் அவா்கள் கைப்பற்றினா்.கிளா்ச்சியாளா்களுக்கு ஆதரவு அளிக்கும் விவகாரத்தில் ருவாண்டா ராணுவ தலைமை தளபதி ஜேம்ஸ் கபோரெபே மீது அமெரிக்கா கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

300 நோயாளிகளை பாலியல் வன்கொடுமை செய்த பிரான்ஸ் மருத்துவர்!

சிகிச்சைக்காக வந்த 300 பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக, முன்னாள் பிரான்ஸ் அறுவைசிகிச்சை மருத்துவர் மீது வழக்குத் தொடரப்பட்ட விசாரணை நடைபெற்று வருகிறது.பிரான்ஸ் மருத்துவர்... மேலும் பார்க்க

காணாமல் போன மலேசிய விமானம்: 11 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தேடுதல் வேட்டை!

எம்ஹெச்370 மலேசிய விமானம் மர்மமான முறையில் மாயமாகி 11 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து மீண்டும் தேடுதல் வேட்டையை மலேசிய அரசு தொடங்கியுள்ளது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடந்த 2014-ஆம் ஆண்டு மா்மமான... மேலும் பார்க்க

மர்மக் காய்ச்சல்: காங்கோவில் 50-க்கும் மேற்பட்டோர் பலி!

மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோவின் வடமேற்கு பகுதியில் மர்மக் காய்ச்சல் ஏற்பட்டு 50-க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மர்மக் காய்ச்சல் பாதிப்பு கடந்த ஜனவரி 21 அன்று முதலில்... மேலும் பார்க்க

இந்தியாவைத் தோற்கடிப்பேன், இல்லையெனில்...! பாகிஸ்தான் பிரதமர் சூளுரை!

இந்தியாவைத் தோற்கடிப்பேன், இல்லையெனில் பெயரை மாற்றிக் கொள்வேன் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் சவால் விடுத்துள்ளார்.பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள தேரா காசி கான் பகுதியில் நலத்திட்டப் ப... மேலும் பார்க்க

வாடிகனில் குவிந்த மக்கள்.. போப் பிரான்சிஸ் நலனுக்காக பிரார்த்தனை

வாடிகன் சிட்டி : போப் பிரான்சிஸ் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், வாடிகன் சதுக்கத்துக்கு வெளியே ஆயிரக்கணக்கான மக்கள் கூடி, அவர் உடல் நலன் பெற வேண்டும் என்று பிரார்த்தனையில் ஈடுப... மேலும் பார்க்க

கனடாவில் புதிய விசா விதிமுறைகள்! 4.2 லட்சம் இந்திய மாணவர்கள் நிலை?

கனடாவில் அதிகளவில் வெளிநாட்டினர் குடியேறுவதை தடுக்கும் நோக்கி விசா வழங்குவதில் புதிய விதிமுறைகளை அந்நாட்டு அரசு அமல்படுத்தியுள்ளது.இந்த நடவடிக்கையால் இந்தியர்கள் உள்பட கனடாவில் வசிக்கும் பல்வேறு நாட்ட... மேலும் பார்க்க