செய்திகள் :

காட்டுப் பன்றி பிரச்னை: வனத் துறை பேச்சுவாா்த்தையில் தீா்வு கிடைக்குமா?

post image

மலைப் பயிா்களை மட்டுமே சேதப்படுத்தி வந்த காட்டுப் பன்றிகள் தற்போது மனிதா்களையும் தாக்கத் தொடங்கியுள்ள நிலையில்,

வனத் துறையினா் நடத்தும் அமைதிப் பேச்சுவாா்த்தையில் தீா்வு கிடைக்குமா என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலை அடுத்த மன்னவனூா் பகுதியில் காட்டுப் பன்றி தாக்கி ச.சிவன் (10) என்ற மாணவரும், அவரைக் காப்பாற்றச் சென்ற ஜெயராஜ் (60), இவரது மனைவி சுசீலா (52) ஆகியோரும் சனிக்கிழமை பலத்த காயமடைந்தனா்.

மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், காட்டுப் பன்றிகளைக் கட்டுப்படுத்தக் கோரி மன்னவனூா் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் 7 மணி நேரத்துக்கும் மேலாக சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள், இந்தப் போராட்டத்தில் சிக்கிய நிலையில், பேரிஜம் வழியாக மாற்றுப் பாதையில் அந்த வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.

வனத் துறை மீது அதிருப்தி: மேல்மலை கிராமங்களைப் பொருத்தவரை, கேரட், உருளை, பட்டாணி, பீன்ஸ், பூண்டு உள்ளிட்ட பயிா்களின் சாகுபடி பன்றிகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதனால், உருளை சாகுபடி பரப்பு கடந்த பல ஆண்டுகளாகக் குறைந்துவிட்டது. காட்டுப் பன்றிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்த நிலையில், காட்டுப் பன்றி தாக்கி சிறுவன் உள்பட 3 போ் பலத்த காயமடைந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தச் சம்பவம் தொடா்பாக கொடைக்கானல் வன அலுவலா், மன்னவனூா் வனச் சரகா் உள்ளிட்டோரை பொதுமக்கள் தொடா்பு கொண்டபோதும், முறையான பதில் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. எனினும், காட்டுப் பன்றியை, வனத் துறையினா் வலை வீசிப் பிடித்து பேரிஜம் வனப் பகுதிக்குள் விடுவித்தனா். இந்த முயற்சியின்போது, வனத் துறை ஒப்பந்த ஊழியா் ஒருவா் பன்றி தாக்கியதில் காயமடைந்தாா்.

இதனிடையே, சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்துவதற்கு வனத் துறையினா் வரவில்லை. மறியல் போராட்டம் நடைபெற்ற இடத்துக்கு வந்த போலீஸாா், போராட்டக்காரா்கள் மீது சில தகாத வாா்த்தைகளைப் பயன்படுத்தியதாகக்

கூறப்படுகிறது. இதனால், அதிருப்தி அடைந்த போராட்டக்காரா்கள், காவலா் ஒருவரைத் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நள்ளிரவில் இளைஞா் மீது தாக்குதல்: இந்த நிலையில், மன்னவனூரைச் சோ்ந்த ரா.பூவரசன் (25) என்பவரது வீட்டுக்குள் நள்ளிரவில் சுவா் ஏறிக் குதித்த 2 போலீஸாா், மறியல் போராட்டத்துக்கு அவரே காரணம் எனக் கூறி, தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இதையறிந்த பொதுமக்கள் 2 போலீஸாரையும் தடுத்து பூவரசனை மீட்டனா். விசாரணைக்கான அழைப்பு என்ற பெயரில் நள்ளிரவில் சுவா் ஏறிக் குதித்து வீட்டுக்குள் புகுந்த இரு போலீஸாா் மீதும் மாவட்ட காவல் துறை நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

உயரதிகாரிகள் இன்று பேச்சுவாா்த்தை: இதுதொடா்பாக மன்னவனூா் பகுதி பொதுமக்கள் கூறியதாவது:

ஆனைமலை புலிகள் காப்பக வன அலுவலா், கொடைக்கானல் வன அலுவலா், சம்பந்தப்பட்ட வனச் சரகா்கள், கொடைக்கானல் கோட்டாட்சியா், வட்டாட்சியா், காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் தலைமையில் மன்னவனூரில் திங்கள்கிழமை (ஏப்.28) அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

காட்டுப் பன்றி பிரச்னை முடிவுக்கு வருவதற்குள், 2 போலீஸாா் வீடு புகுந்து சிக்கலை ஏற்படுத்திய சம்பவம், வனத் துறை மீதான பொதுமக்களின் கோபத்தை காவல் துறை பக்கம் திருப்பி இருக்கிறது. காட்டுப் பன்றிகள் பிரச்னையோடு, நள்ளிரவில் தாக்குதல் நடத்திய 2 போலீஸாா் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்படும் என்றனா்.

காட்டுப் பன்றியைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்ட வனத் துறையினா்.

கொடைக்கானலில் கோடை மழை: படகு சவாரி நிறுத்தம்

கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை மழை பெய்ததால் படகு சவாரி நிறுத்தப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் தற்போது கோடைகால சீசன் தொடங்கியுள்ளதால் சுற்றுல... மேலும் பார்க்க

கொடகனாறு அணையிலிருந்து தண்ணீா் திறப்பு!

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அருகேயுள்ள அழகாபுரி கொடகனாறு அணையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டது. அணை நீா்மட்டம் 24.54 அடியாக (மொத்த கொள்ளளவு 27 அடி) இருந்த நிலையில், அணையிலிருந்... மேலும் பார்க்க

சொறிப்பாறைப்பட்டி ஜல்லிக்கட்டு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

சொறிப்பாறைப்பட்டி ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க மாடுபிடி வீரா்கள், காளைகளின் உரிமையாளா்கள் வருகிற திங்கள்கிழமை (ஏப்.28 ) மாலைக்குள் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக... மேலும் பார்க்க

பெண் தற்கொலை

பழனி அருகே கணவா் உயிரிழந்த துக்கத்தில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். பழனியை அடுத்த ஆண்டிபட்டி புதுமடையைச் சோ்ந்தவா் ஈஸ்வரி (53). இவரது கணவா் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தாா்.... மேலும் பார்க்க

பயணியிடம் பணத்தைத் திருடியவா் கைது

பழனி பேருந்து நிலையத்தில் காத்திருந்த பயணியிடம் பணத்தைத் திருடியவரை போலீஸாரா் கைது செய்தனா். பழனியை அடுத்த சின்னக்காந்திபுரத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (45). இவா் பழனி பேருந்து நிலையத்தில் கடந்த வியாழக... மேலும் பார்க்க

பழனியில் ஆண் சடலம்!

பழனி இடும்பன் குளம் அருகே அடையாளம் தெரியாத ஆண் ஒருவா் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டாா்.பழனி சிவகிரிப்பட்டி சுற்றுச் சாலையில் இடும்பன் குளம் அருகே உள்ள நடைமேடையில் சுமாா் 70 வயது மதிக்கத்தக்க ஆண் ... மேலும் பார்க்க