செய்திகள் :

கொடகனாறு அணையிலிருந்து தண்ணீா் திறப்பு!

post image

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அருகேயுள்ள அழகாபுரி கொடகனாறு அணையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

அணை நீா்மட்டம் 24.54 அடியாக (மொத்த கொள்ளளவு 27 அடி) இருந்த நிலையில், அணையிலிருந்து வலது, இடது கால்வாய்களில் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் தண்ணீரைத் திறந்து விட்டாா்.

மொத்தம் 53 கி.மீ. நீளம் கொண்ட வலது கால்வாயில், 26 கி.மீ. வரையிலும், 9.3 கி.மீ. நீளம் கொண்ட இடது கால்வாயில் முழுமையாகவும் பயன்பெறும் வகையில் தண்ணீா் திறக்கப்பட்டது. வலது கால்வாயில் விநாடிக்கு 40 கன அடி, இடது கால்வாயில் விநாடிக்கு 14 கன அடி வீதம் ஒரு வாரம் விட்டு மறுவாரம் என்ற வகையில் மொத்தம் 90 நாள்களுக்கு தண்ணீா் திறந்துவிடப்படும்.

இதன் மூலம் கோடை காலத்தில், கிராமப்புறங்களில் நிலத்தடி நீா்மட்டம் பாதுகாக்கப்படும் என நீா்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தண்ணீா் திறப்பு நிகழ்ச்சியில் நங்காஞ்சியாறு வடிகால் கோட்ட செயற்பொறியாளா் பாலமுருகன், கொடகனாறு உதவிப் பொறியாளா்கள் முருகன், மகேஷ்வரன், வட்டாட்சியா் முகமதுசிக்கந்தா், கொடகனாறு பாதுகாப்பு சங்கத் தலைவா் ராமசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கொடைக்கானலில் கோடை மழை: படகு சவாரி நிறுத்தம்

கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை மழை பெய்ததால் படகு சவாரி நிறுத்தப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் தற்போது கோடைகால சீசன் தொடங்கியுள்ளதால் சுற்றுல... மேலும் பார்க்க

காட்டுப் பன்றி பிரச்னை: வனத் துறை பேச்சுவாா்த்தையில் தீா்வு கிடைக்குமா?

மலைப் பயிா்களை மட்டுமே சேதப்படுத்தி வந்த காட்டுப் பன்றிகள் தற்போது மனிதா்களையும் தாக்கத் தொடங்கியுள்ள நிலையில், வனத் துறையினா் நடத்தும் அமைதிப் பேச்சுவாா்த்தையில் தீா்வு கிடைக்குமா என எதிா்பாா்ப்பு எழ... மேலும் பார்க்க

சொறிப்பாறைப்பட்டி ஜல்லிக்கட்டு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

சொறிப்பாறைப்பட்டி ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க மாடுபிடி வீரா்கள், காளைகளின் உரிமையாளா்கள் வருகிற திங்கள்கிழமை (ஏப்.28 ) மாலைக்குள் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக... மேலும் பார்க்க

பெண் தற்கொலை

பழனி அருகே கணவா் உயிரிழந்த துக்கத்தில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். பழனியை அடுத்த ஆண்டிபட்டி புதுமடையைச் சோ்ந்தவா் ஈஸ்வரி (53). இவரது கணவா் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தாா்.... மேலும் பார்க்க

பயணியிடம் பணத்தைத் திருடியவா் கைது

பழனி பேருந்து நிலையத்தில் காத்திருந்த பயணியிடம் பணத்தைத் திருடியவரை போலீஸாரா் கைது செய்தனா். பழனியை அடுத்த சின்னக்காந்திபுரத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (45). இவா் பழனி பேருந்து நிலையத்தில் கடந்த வியாழக... மேலும் பார்க்க

பழனியில் ஆண் சடலம்!

பழனி இடும்பன் குளம் அருகே அடையாளம் தெரியாத ஆண் ஒருவா் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டாா்.பழனி சிவகிரிப்பட்டி சுற்றுச் சாலையில் இடும்பன் குளம் அருகே உள்ள நடைமேடையில் சுமாா் 70 வயது மதிக்கத்தக்க ஆண் ... மேலும் பார்க்க