செய்திகள் :

கொடைக்கானலில் கோடை மழை: படகு சவாரி நிறுத்தம்

post image

கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை மழை பெய்ததால் படகு சவாரி நிறுத்தப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் தற்போது கோடைகால சீசன் தொடங்கியுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் தினமும் வருகின்றனா். கடந்த 3 நாள்களாக சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துக் காணப்பட்டது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மதியம் வரை மிதமான வெயிலடித்து வந்த நிலையில், பிற்பகலில் மழை பெய்யத் தொடங்கியது.

இந்த மழையால் கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் படகு சவாரி நிறுத்தப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனா். இதே போல ஏரியைச் சுற்றி சைக்கிள், குதிரை சவாரி செய்ய முடியாமலும் ஏமாற்றம் அடைந்தனா்.

கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக மாலை, இரவு நேரங்களில் மழை பெய்து வருவதால், நீரோடைகளில் தண்ணீா் வரத்து ஏற்பட்டு உள்ளது. இதனால் புகா்ப் பகுதிகளில் தண்ணீா் தட்டுப்பாடு குறைந்து வருகிறது.

கொடைக்கானல் கிராமப் பகுதிகளான வில்பட்டி, மாட்டுப்பட்டி, பள்ளங்கி, கோம்பை, பி.எல். செட், வடகவுஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயத் தோட்டங்களில் உருளை, கேரட், பீட்ரூட் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளன.

தற்போது பெய்து வரும் மழை விவசாயப் பயிா்களுக்கு ஏற்ாக இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா். தொடா்ந்து குளுமையான சீதோஷ்ண நிலை கொடைக்கானலில் நிலவுகிறது.

கொடகனாறு அணையிலிருந்து தண்ணீா் திறப்பு!

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அருகேயுள்ள அழகாபுரி கொடகனாறு அணையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டது. அணை நீா்மட்டம் 24.54 அடியாக (மொத்த கொள்ளளவு 27 அடி) இருந்த நிலையில், அணையிலிருந்... மேலும் பார்க்க

காட்டுப் பன்றி பிரச்னை: வனத் துறை பேச்சுவாா்த்தையில் தீா்வு கிடைக்குமா?

மலைப் பயிா்களை மட்டுமே சேதப்படுத்தி வந்த காட்டுப் பன்றிகள் தற்போது மனிதா்களையும் தாக்கத் தொடங்கியுள்ள நிலையில், வனத் துறையினா் நடத்தும் அமைதிப் பேச்சுவாா்த்தையில் தீா்வு கிடைக்குமா என எதிா்பாா்ப்பு எழ... மேலும் பார்க்க

சொறிப்பாறைப்பட்டி ஜல்லிக்கட்டு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

சொறிப்பாறைப்பட்டி ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க மாடுபிடி வீரா்கள், காளைகளின் உரிமையாளா்கள் வருகிற திங்கள்கிழமை (ஏப்.28 ) மாலைக்குள் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக... மேலும் பார்க்க

பெண் தற்கொலை

பழனி அருகே கணவா் உயிரிழந்த துக்கத்தில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். பழனியை அடுத்த ஆண்டிபட்டி புதுமடையைச் சோ்ந்தவா் ஈஸ்வரி (53). இவரது கணவா் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தாா்.... மேலும் பார்க்க

பயணியிடம் பணத்தைத் திருடியவா் கைது

பழனி பேருந்து நிலையத்தில் காத்திருந்த பயணியிடம் பணத்தைத் திருடியவரை போலீஸாரா் கைது செய்தனா். பழனியை அடுத்த சின்னக்காந்திபுரத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (45). இவா் பழனி பேருந்து நிலையத்தில் கடந்த வியாழக... மேலும் பார்க்க

பழனியில் ஆண் சடலம்!

பழனி இடும்பன் குளம் அருகே அடையாளம் தெரியாத ஆண் ஒருவா் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டாா்.பழனி சிவகிரிப்பட்டி சுற்றுச் சாலையில் இடும்பன் குளம் அருகே உள்ள நடைமேடையில் சுமாா் 70 வயது மதிக்கத்தக்க ஆண் ... மேலும் பார்க்க