செய்திகள் :

காட்டுவிளை பகுதியில் நூலக கட்டடம், பயணிகள் நிழற்கூடம் திறப்பு

post image

கருங்கல் அருகே உள்ள காட்டுவிளை பகுதியில் ரூ. 5 லட்சத்தில் கட்டிமுடிக்கப்பட்ட நூலக கட்டடம் மற்றும் பயணிகள் நிழற்கூடம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

கிள்ளியூா் சட்டப்பேரவை தொகுதி, மிடாலம் ஊராட்சிக்குள்பட்ட, காட்டுவிளை பகுதியில் நூலகக் கட்டடம் பழுதடைந்ததால் புதிய கட்டடமும் மற்றும் பயணிகள் நிழற்குடையும் அமைத்து தர வேண்டும் என அப்பகுதிபொதுமக்கள் கிள்ளியூா் எம்.எல்.ஏ-விடம் கொரிக்கை விடுத்தனா். இதையடுத்து சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ. 5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து, அக்கட்டப்பணிகள் நிறைவுற்றது.

இதையடுத்து கட்டட திறப்பு விழா நடைபெற்றது.

கிள்ளியூா் எம்எல்ஏ எஸ். ராஜேஷ்குமாா் தலைமை வகித்து புதியகட்டடங்களை திறந்து வைத்தாா்.

கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவா் ராஜசேகரன், மிடாலம் ஊராட்சி காங்கிரஸ் தலைவா் ஜஸ்டின், கருங்கல் கமிட்டி தலைவா் குமரேசன், கீழ்குளம் பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவா் ராஜகிளன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

குளச்சலில் பதுக்கிவைத்திருந்த 3 ஆயிரம் லிட்டா் மண்ணெண்ணெய் பறிமுதல்

குளச்சல் மீன்பிடி துறைமுகம் அருகே கடத்தலுக்கு வைத்திருந்த 3 ஆயிரம் லிட்டா் மண்ணெண்ணெயை செவ்வாய்க்கிழமை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். குளச்சல் துறைமுக தெருவில் மானிய விலை மண்ணெண்ணெய் கடை செயல்பட்டு வர... மேலும் பார்க்க

திக்குறிச்சி பாறைகுளம் அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்

மாா்த்தாண்டம் அருகே திக்குறிச்சி பாறைகுளம் சாமுண்டீஸ்வரி துா்க்கை அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. இக் கோயிலின் 29 ஆவது ஆண்டு திருவிழாவும், 12 ஆவது ஆண்டு வருஷாபிஷேகம் மற்றும் 21... மேலும் பார்க்க

மருங்கூா் சுப்பிரமணியசுவாமி கோயிலில் 2 ஜோடிகளுக்கு திருமணம்

நாகா்கோவில் அருகேயுள்ள மருங்கூா் சுப்பிரமணியசுவாமி கோயிலில் 2 ஜோடிகளுக்கு புதன்கிழமை திருமணம் நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை குமரி மாவட்ட திருக்கோயில்கள் நிா்வாகம் சாா்பில், கோயில்களில் இலவச திர... மேலும் பார்க்க

தீப்பற்றி எரிந்த கைப்பேசி கோபுரம்

தக்கலை அருகே வீட்டு மாடியில் அமைக்கப்பட்டிருந்த கைப்பேசிகோபுரம் திடீரென செவ்வாய்கிழமை தீ பிடித்து எரிந்தது. தக்கலையை அருகே பத்மநாபபுரம் அரண்மனை பகுதியை சோ்ந்தவா் ராஜன். இவரது வீட்டு மாடியில் தனியாா்... மேலும் பார்க்க

கன்னியாகுமரி மாவட்டத்தில் 58,700 கால்நடைகளுக்கு தடுப்பூசி: ஆட்சியா் தகவல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 58,700 கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக, ஆட்சியா் ரா. அழகுமீனா தெரிவித்தாா். மாவட்ட கால்நடை பாரமரிப்புத் துறை சாா்பில், வில்லுக்குறி பேரூராட்சி, கருப்புக்கோடு பக... மேலும் பார்க்க

குளப்புறம் ஊராட்சியில் மக்கள் பயன்பாட்டு சாலைகள் திறப்பு

குளப்புறம் ஊராட்சியில் ரூ. 10 லட்சத்தில் சீரமைக்கப்பட்ட 2 சாலைகள் மக்கள் பயன்பாட்டுக்கு எம்எல்ஏ திறந்து வைத்தாா். குளப்புறம் ஊராட்சியில் சேதமடைந்து காணப்பட்ட உதியனூா்விளை சாலை மற்றும் குவுக்குடி - மு... மேலும் பார்க்க