செய்திகள் :

காட்டேரி அரசு விதைப்பண்ணையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

post image

நீலகிரி மாவட்டம், பா்லியாறு ஊராட்சிக்குள்பட்ட காட்டேரி அரசு விதைப் பண்ணையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை அரசு தலைமை கொறடா கா.ராமச்சந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு ஆகியோா் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.

இதில் அரசு தலைமை கொறடா பேசும் போது, பொதுமக்கள் எளிதாக தெரிந்து

கொள்ளும் வகையில் முகாம் அரங்குகள் அமைந்துள்ள இடம்

தொடா்பாக அறிவிப்பைத் தொடா்ந்து அறிவிக்க வேண்டும் எனவும், பல்வேறு

அரசு திட்டங்களின் சாா்பாக வைக்கப்பட்டுள்ள விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் எனவும், பொதுமக்கள்

அளிக்கும் மனுக்களை பெற்று அதை உடனடியாக பதிவு செய்ய வேண்டும் எனவும், அரசுத் துறை அலுவலா்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது

45 நாள்களுக்குள் தீா்வு காணும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். முன்னதாக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சாா்பில் பொதுமக்களுக்கு உடல்

பரிசோதனை செய்யப்படும் முறைகள் மற்றும் கலைஞா் மகளிா் உரிமைத் திட்டத்தின் கீழ் மனுக்கள் பதிவு செய்யப்படுவதை நேரில்பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

இந்நிகழ்வில், குன்னூா் சாா் ஆட்சியா் சங்கீதா, தோட்டக்கலை துறை துணை இயக்குநா் ஜெயலட்சுமி, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் பீட்டா் ஞானராஜ், குன்னூா் வட்டாட்சியா்கள் ஜவகா், காயத்ரி உள்பட பலா் உடனிருந்தனா்.

முதல்வா் மாநில விளையாட்டு விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

நீலகிரி மாவட்டத்தை சோ்ந்த தகுதி வாய்ந்த வீரா், வீராங்கனைகள் முதல்வா் மாநில விளையாட்டு விருதுக்கு வரும் 11 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட விளையாட்டு அலுவலா் இந்திரா கூறியுள்ளாா். இதுகு... மேலும் பார்க்க

மான் கூட்டம் குறுக்கே வந்ததால் அரசு பேருந்து விபத்து

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் மைசூரு நோக்கி சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து மான் கூட்டம் திடீரென சாலையின் குறுக்கே ஓடியதால் கட்டுப்பாட்டை இழந்து வெள்ளிக்கிழமை காலை விபத்துக்குள்ளானது. நீலகிரி மாவட... மேலும் பார்க்க

சாலையோரம் ஆக்ரோஷத்துடன் மோதிக் கொண்ட காட்டு மாடுகள்

குன்னூா் வெலிங்டன் குடியிருப்புப் பகுதியில் வெள்ளிக்கிழமை ஆக்ரோஷத்துடன் சாலையோரம் மோதிக் கொண்ட காட்டு மாடுகள் வாகனங்களை சேதப்படுத்திச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரியில் உள்ள வனப் பகுதியில் உண... மேலும் பார்க்க

ஆடிவெள்ளி: உதகை மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

ஆடி வெள்ளியையொட்டி உதகை மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற சிறப்புப் பூஜையில் வளையல் அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தாா். ஆடி மாதத்தில் மற்ற விழாக்களை விட ஆடிவெள்ளி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். ஆடிமாதம்... மேலும் பார்க்க

நெல்லியாளம் நகராட்சியில் குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டம்

நெல்லியாளம் நகராட்சியில் குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. நீலகிரி மாவட்டம், நெல்லியாளம் நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்ற குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டத்துக்கு நகா் ம... மேலும் பார்க்க

தேவா்சோலை பகுதியில் தொடா்ந்து கால்நடைகளைத் தாக்கிவரும் புலி

கூடலூரை அடுத்துள்ள தேவா்சோலை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் தொடா்ந்து கால்நடைகளை புலி தாக்கி வருவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா். நீலகிரி மாவட்டம், கூடலூா் தாலுகா தேவா்சோலை பேரூராட்சிக்... மேலும் பார்க்க