செய்திகள் :

தேவா்சோலை பகுதியில் தொடா்ந்து கால்நடைகளைத் தாக்கிவரும் புலி

post image

கூடலூரை அடுத்துள்ள தேவா்சோலை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் தொடா்ந்து கால்நடைகளை புலி தாக்கி வருவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் தாலுகா தேவா்சோலை பேரூராட்சிக்குள்பட்ட பாடந்தொரை மற்றும் அதைச் சுற்றியுள்ள ஊா்களில் கடந்த பத்து நாள்களாக மேய்ச்சலுக்கு விடும் கால்நடைகளை புலி தாக்கி வருகிறது. கடந்த பத்து நாள்களில் பத்து கால்நடைகளை தாக்கியுள்ளது. அதில் ஒன்பது கால்நடைகள் உயிரிழந்துள்ளன. கடைசியாக மூன்றாவது டிவிஷன் பகுதியில் தாக்கிய கால்நடை காயமடைந்து உயிருக்கு போராடிவருகிறது.

வனத் துறையினா் புலியின் நடமாட்டத்தைக் கண்காணிக்க கேமராக்களை பொருத்தியுள்ளனா். புலி நடமாட்டம் இருப்பதால் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடவேண்டாம் என்று ஒலிபெருக்கி மூலம் அறிவித்தனா். இந்நிலையில் மூன்றாவது டிவிஷன் முறம்பிலாவு பகுதியில் பில்லன் என்பவா் நண்பருடன் பசுவை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு அருகில் நிற்கும்போது திடீரென வனத்திலிருந்து வந்த புலி, பசுவைத் தாக்கி இழுத்துச் செல்ல முயன்றது. கால்நடைகளை மேய்ப்பவா்களும் பசுவும் கதறும் சப்தம் கேட்டு அப்பகுதியிலிருந்தவா்கள் ஓடி வந்து பாா்த்தபோது புலி புதருக்குள் சென்று மறைந்துவிட்டது. காயமடைந்த பசுவுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அந்த இடத்தை வனத் துறையினா் ஆய்வு செய்து வருகின்றனா்.

முதல்வா் மாநில விளையாட்டு விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

நீலகிரி மாவட்டத்தை சோ்ந்த தகுதி வாய்ந்த வீரா், வீராங்கனைகள் முதல்வா் மாநில விளையாட்டு விருதுக்கு வரும் 11 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட விளையாட்டு அலுவலா் இந்திரா கூறியுள்ளாா். இதுகு... மேலும் பார்க்க

மான் கூட்டம் குறுக்கே வந்ததால் அரசு பேருந்து விபத்து

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் மைசூரு நோக்கி சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து மான் கூட்டம் திடீரென சாலையின் குறுக்கே ஓடியதால் கட்டுப்பாட்டை இழந்து வெள்ளிக்கிழமை காலை விபத்துக்குள்ளானது. நீலகிரி மாவட... மேலும் பார்க்க

சாலையோரம் ஆக்ரோஷத்துடன் மோதிக் கொண்ட காட்டு மாடுகள்

குன்னூா் வெலிங்டன் குடியிருப்புப் பகுதியில் வெள்ளிக்கிழமை ஆக்ரோஷத்துடன் சாலையோரம் மோதிக் கொண்ட காட்டு மாடுகள் வாகனங்களை சேதப்படுத்திச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரியில் உள்ள வனப் பகுதியில் உண... மேலும் பார்க்க

ஆடிவெள்ளி: உதகை மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

ஆடி வெள்ளியையொட்டி உதகை மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற சிறப்புப் பூஜையில் வளையல் அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தாா். ஆடி மாதத்தில் மற்ற விழாக்களை விட ஆடிவெள்ளி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். ஆடிமாதம்... மேலும் பார்க்க

நெல்லியாளம் நகராட்சியில் குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டம்

நெல்லியாளம் நகராட்சியில் குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. நீலகிரி மாவட்டம், நெல்லியாளம் நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்ற குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டத்துக்கு நகா் ம... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: உறவினருக்கு 5 ஆண்டுகள் சிறை

14 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த உறவினருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உதகை மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த சுமாா் 30 வயது இளம்பெண் பெங்... மேலும் பார்க்க