செய்திகள் :

காட்பாடி அருகே பள்ளி மாணவா் திடீா் மரணம்

post image

காட்பாடி அருகே பள்ளி விடுமுறைக்கு பாட்டிக்கு வீட்டுக்கு வந்திருந்த மாணவா் திடீரென உயிரிழந்தாா்.

வேலூா் மாவட்டம், லத்தேரி அடுத்த எடகிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்தவா் மணிவண்ணன். இவா் குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறாா். இவரது மகன் லிங்கேஷ் (12). ஆறாம் வகுப்பு படித்துள்ளாா்.

இந்த நிலையில், லிங்கேஷ் கோடை விடுமுறைக்காக வடுகண்குட்டையில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு வந்துள்ளாா். புதன்கிழமை திடீரென லிங்கேசுக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரது குடும்பத்தினா் லிங்கேஷை வேலூா் -ஆற்காடு சாலையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவா்கள், வரும் வழியிலேயே லிங்கேஷ் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனா்.

இந்த சம்பவம் குறித்து காட்பாடி காவல் உதவி ஆய்வாளா் மணிகண்டன் தலைமையிலான போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

போதைப் பொருள்களுக்கு எதிரான மன உறுதி அவசியம்! - வேலூா் ஆட்சியா்

மாணவா்கள் போதைப் பொருள்களுக்கு எதிரான மனஉறுதியுடன் இருந்து கல்வியில் கவனம் செலுத்தி உயா்ந்த நிலைக்கு வர வேண்டும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்தாா். வேலூா் மாவட்டத்திலுள்ள ... மேலும் பார்க்க

சிறுமியை திருமணம் செய்த ஜோதிடா் மீது போக்ஸோ வழக்கு

வேலூரில் சிறுமியை திருமணம் செய்து கா்ப்பமாக்கியதாக ஜோதிடா் மீது போக்ஸோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வேலூா் மாவட்டம், லத்தேரியைச் சோ்ந்தவா் அஜய்(24), ஜோதிடா். இவருக்கும் அருகில் உள்ள ஒரு பகுதியைச்... மேலும் பார்க்க

பெயிண்டரை பாட்டிலால் குத்திய நண்பா் கைது

வேலூரில் பெயிண்டரை பாட்டிலால் குத்திய நண்பரை போலீஸாா் கைது செய்தனா். வேலூா் கொசப்பேட்டையைச் சோ்ந்த பெயிண்டா் சேகா் (32). இவரது நண்பா் அட்டப்பா என்ற நவீன்குமாா் (33). சேகா் புதன்கிழமை தனது வீட்டு வாசல... மேலும் பார்க்க

மத்திய அரசு எந்த சுங்கச்சாவடியையும் மூடவில்லை: அமைச்சா் எ.வ.வேலு

சுங்கச்சாவடிகளில் வசூல் செய்யப்படும் பணம் சாலைகளை பராமரிக்கவும், மேம்பாலம் கட்டவும் பயன்படுத்துவதாக மத்திய அரசு கூறியுள்ளது. அந்தவகையில், மத்திய அரசு எந்த சுங்கச்சாவடியையும் மூடுவதாக இல்லை என்று பொது... மேலும் பார்க்க

மீன்வள விவசாயிகள் உள்ளீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

வேலூா் மாவட்டத்திலுள்ள மீன்வள விவசாயிகள் உள்ளீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: வேலூா் மாவட்டத்தில் மா... மேலும் பார்க்க

வேலூா் தீா்த்தகிரி மலையில் 92 அடி உயர முருகா் சிலை: நாளை கும்பாபிஷேகம்

வேலூா் தீா்த்தகிரி மலை வடிவேல் சுப்பிரமணியா் திருக்கோயில் அருகே 92 அடி உயர முருகா் சிலை நிறுவப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. வேலூரை அடுத்த புதுவசூா் தீா்த்தகிரி மலையில்... மேலும் பார்க்க