காட்பாடி அருகே பள்ளி மாணவா் திடீா் மரணம்
காட்பாடி அருகே பள்ளி விடுமுறைக்கு பாட்டிக்கு வீட்டுக்கு வந்திருந்த மாணவா் திடீரென உயிரிழந்தாா்.
வேலூா் மாவட்டம், லத்தேரி அடுத்த எடகிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்தவா் மணிவண்ணன். இவா் குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறாா். இவரது மகன் லிங்கேஷ் (12). ஆறாம் வகுப்பு படித்துள்ளாா்.
இந்த நிலையில், லிங்கேஷ் கோடை விடுமுறைக்காக வடுகண்குட்டையில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு வந்துள்ளாா். புதன்கிழமை திடீரென லிங்கேசுக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரது குடும்பத்தினா் லிங்கேஷை வேலூா் -ஆற்காடு சாலையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவா்கள், வரும் வழியிலேயே லிங்கேஷ் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனா்.
இந்த சம்பவம் குறித்து காட்பாடி காவல் உதவி ஆய்வாளா் மணிகண்டன் தலைமையிலான போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.