செய்திகள் :

காணாமல்போன சபரிமலை கோயில் தங்க பீடங்கள்; உபயதாரர் உறவினர் வீட்டில் மீட்பு நடந்தது என்ன?

post image

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் கருவறையின் முன்பகுதியில் இருபுறமும் அமைந்துள்ள துவார பாலகர்கள் சிலைகளில் தங்க முலாம் பூசப்பட்ட கவசம் 2019-ம் ஆண்டு பொருத்தப்பட்டது. பெங்களூரைச் சேர்ந்த தொழில் அதிபர் உண்ணிகிருஷ்ணன் போற்றி என்பவர் உபயமாக வழங்கிய இந்த கவசங்களை சென்னை ஸ்மார்ட் கிரியேசன்ஸ் ஏஜென்ஸி தயாரித்து வழங்கியிருந்தது. இதற்கிடையே தங்க கவசங்களில் சில பராமரிப்பு பணிகள் இருப்பதாக இம்மாத தொடக்கத்தில் சென்னைக்கு கொண்டுசெல்லப்பட்டன. அதேசமயம் சபரிமலை ஸ்பெஷல் கமிஷனர் மற்றும் ஐகோர்ட்டின் அனுமதி இல்லாமல் தங்க கவசங்கள் பராமரிப்பு பணிக்காக சென்னைக்கு கொண்டுசெல்லப்பட்டதாக சரியான நடவடிக்கை இல்லை எனவும், அவற்றை திரும்ப கொண்டுவரவேண்டும் என சென்னை ஸ்மார்ட் கிரியேசன்ஸ் ஏஜென்ஸி மற்றும் உபயதாரரான உண்ணிகிருஷ்ணன் போற்றி ஆகியோருக்கு கேரளா ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. 2019-ம் ஆண்டு தங்க கவசங்கள் பொருத்தப்பட்ட சமயத்தில் 40 ஆண்டுகள்வரை வாரண்டி வழங்கப்பட்டிருந்த நிலையில், 6 ஆண்டுகளிலேயே தயாரிக்கப்பட்ட இடத்துக்கே கொண்டுசென்று பராமரிக்கவேண்டிய அவசியம் என்ன? எனவும் ஐகோர்ட் கேள்வி எழுபியிருந்தது. இதையடுத்து தங்க கவசங்கள் மீண்டும் சபரிமலைக்கு கொண்டுசெல்லப்பட்டன. விரைவில் அவை பழையபடி பொருத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே சுமார் 40 கிலோ எடை கொண்ட தங்க கவசங்களில் சுமார் 4 கிலோ எடை குறைவாக உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. துவார பாலகர்களின் பீடத்தில் பொருத்தப்பட்டிருந்த தங்க கவசம் காணாமல் போனதாகவும் தெரியவந்தது. அவை தேவசம் போர்டின் லாக்கர் அறையில் உள்ளதாக உண்ணிகிருஷ்ணன் போற்றி கூறியிருந்தார்.

மினி அந்தர்ஜனம், உண்ணிகிருஷ்ணன் போற்றி

துவார பாலகர்களின் பீடத்தில் இருந்த தங்க கவசங்களை கண்டுபிடிக்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டதைத் தொடர்ந்து தேவசம் விஜிலென்ஸ் லாக்கர் அறைகளில் சோதனை நடத்தியது. மேலும், அவற்றை உபயமாக வழங்கிய உண்ணிகிருஷ்ணன் போற்றியின் பெங்களூரில் உள்ள வீட்டிலும், திருவனந்தபுரத்தில் உள்ள வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. அதில் கிடைத்த தகவலின் அடிப்படையில் திருவனந்தபுரம் வெஞ்ஞாறமூடு பகுதியில் உள்ள உண்ணிகிருஷ்ணன் போற்றியின் சகோதரி மினி அந்தர்ஜனம் என்பவரின் வீட்டில் இருந்து மீட்கப்பட்டது.

சபரிமலை துவார பாலகர்கள்

அந்த பீடங்கள் 2021-ம் ஆண்டு முதல் உண்ணிகிருஷ்ணன் போற்றியின் உதவியாளரான வாசுதேவனின் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடத்த கேரள ஐகோர்ட் உத்தரவிட்டதைத் தொடர்ந்து தனதுவீட்டில் அவற்றை பாதுகாக்க முடியாது என வாசுதேவன் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவற்றை உண்ணிகிருஷ்ணன் தனது சகோதரி வீட்டுக்கு எடுத்துச் சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த 7-ம் தேதி துவார பாலகர்கள் சிலைகளின் தங்க கவசங்கள் எடுத்துச்செல்லப்பட்ட பின்னர் திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு உண்ணிகிருஷ்ணன் போற்றி ஒரு மெயில் அனுப்பியிருந்தார். அதில், துவார பாலகர்களுக்கு தான் செய்துகொடுத்த 2 பீடங்கள் லாக்கரில் உள்ளதாகவும். அவற்றை வழங்கினால் சரிசெய்து தரலாம் எனவும் உண்ணிகிருஷ்ணன் போற்றி கூறியிருந்தார். தேவசம்போர்டு லாக்கரில் பீடங்கள் இருப்பது எப்படி தெரியும் என கோர்ட் கேள்வி எழுப்பியபோது டைப்பிங் சமயத்தில் ஏற்பட்ட பிழை என கூறியுள்ளார் உண்ணிகிருஷ்ணன் போற்றி. இதை அடுத்தே அவர்மீது சந்தேகம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

திருச்சுழி: 1500 ஆண்டுகள் பழைமையான சிவாலயம்; புனரமைப்பு பணியின்போது தங்கத் தகடுகள் கண்டுபிடிப்பு

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே எஸ்.கல்விமடை கிராமத்தில் சுமார் 1500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஸ்ரீ திருநாகேஷ்வரமுடையார் சமேத திருநாகேஸ்வரி தாயார் திருக... மேலும் பார்க்க

`உற்சாக வாழ்வு பெற உடுமலை திருப்பதிக்கு வாங்க' திருவிளக்கு பூஜை ஸ்பெஷல்! அனுமதி இலவசம்

2025 அக்டோபர் -10-ம் தேதி வெள்ளிக்கிழமை உடுமலைப்பேட்டை ஶ்ரீவேங்கடேச பெருமாள் திருக்கோவிலில் மாலை 6 மணி அளவில் சக்தி விகடன் வழங்கும் திருவிளக்கு பூஜை நடைபெற இருக்கிறது. இதில் நீங்களும் கலந்து கொள்ளலாம்... மேலும் பார்க்க

தஞ்சை மாவட்டம், நாச்சியார்கோவில்: கலியுக அதிசயம் - கனம்கூடும் கல்கருடன், இன்றும் நடக்கும் அதிசயம்!

கருடசேவை உற்சவம்ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் மூர்த்தங்கள் வெறும் சிலைகள் அல்ல. அதில் அவரின் சாந்நித்தியம் நிறைந்திருக்கிறது என்பதை இறைவன் அவ்வப்போது அற்புதங்கள் மூலம் உணர்த்துவது வழக்கம். ... மேலும் பார்க்க

புரட்டாசி சனிக்கிழமை: ஈரோடு பெருமாள் மலை கோயிலில் குவிந்த பக்தர்கள்| Photo Album

ஈரோடு பெருமாள் மலை கோயில் ஈரோடு பெருமாள் மலை கோயில் ஈரோடு பெருமாள் மலை கோயில் ஈரோடு பெருமாள் மலை கோயில் ஈரோடு பெருமாள் மலை கோயில் ஈரோடு பெருமாள் மலை கோயில் ஈரோடு பெருமாள் மலை கோயில் ஈரோடு பெருமாள் மலை... மேலும் பார்க்க

தஞ்சை மாவட்டம், நந்திபுரவிண்ணகரம்: தோல் நோய் தீர நந்தியும், ஆழ்வாரும் பெருமாளை வழிபட்ட திருத்தலம்!

நந்திதேவர் சாபம் தீர்த்த தலம்ஒருமுறை, மகாவிஷ்ணுவைத் தரிசிக்க வைகுண்டத்துக்குச் சென்றார் நந்திதேவர். ஆனால், துவாரபாலகர்களான ஜயனும் விஜயனும் அவரைத் தடுக்க... அதையும் மீறி நந்திதேவர் உள்ளே செல்ல முயன்றார... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூர் டு திருப்பதி: ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை; பிரமோற்சவத்திற்குத் தயார்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்களைந்த மாலை திருப்பதியில் நடைபெற்று வரும் பிரமோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவையன்று பெருமாளுக்கு சாற்றப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு... மேலும் பார்க்க