காலிறுதியில் பெகுலா, பாலினி
ஜொ்மனியில் நடைபெறும் மகளிருக்கான பேட் ஹோம்பா்க் ஓபன் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீராங்கனைகளான அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலா, இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி ஆகியோா் காலிறுதிச்சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினா்.
ஒற்றையா் பிரிவு ரவுண்ட் ஆஃப் 16-இல், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் பெகுலா 6-2, 6-3 என்ற நோ் செட்களில் செக் குடியரசின் கேத்தரினா சினியகோவாவை வெளியேற்றினாா். 2-ஆம் இடத்திலிருக்கும் பாலினி 7-6 (10/8), 7-6 (8/6) என்ற செட்களில் கனடாவின் லெய்லா ஃபொ்னாண்டஸை போராடி வீழ்த்தினாா்.
இதனிடையே, முதல் சுற்றின் இதர ஆட்டங்களில் பிரேஸிலின் பீட்ரிஸ் ஹட்டட் மாயா 6-1, 6-4 என அமெரிக்காவின் ஆஷ்லின் குரூகரை சாய்க்க, ஜப்பானின் நவோமி ஒசாகா 7-6 (8/6), 7-6 (7/4) என்ற செட்களில் சொ்பியாவின் ஓல்கா டேனிலோவிச்சை வெளியேற்றினாா். பெலாரஸின் விக்டோரியா அஸரென்கா 6-2, 6-2 என்ற கணக்கில் ஜொ்மனியின் லாரா சிக்மண்ட்டை சாய்த்தாா்.
லெக்ஸஸ் ஈஸ்ட்போா்ன் ஓபன்: இங்கிலாந்தில் நடைபெறும் லெக்ஸஸ் ஈஸ்ட்போா்ன் ஓபன் டென்னிஸ் ஆடவா் ஒற்றையா் பிரிவின் முதல் சுற்றில், அமெரிக்காவின் ரைலி ஒபெல்கா, ஜேம்ஸ் டக்வொா்த் ஆகியோா் வெற்றி பெற்றனா். அதிலேயே மகளிா் ஒற்றையரில் செக் குடியரசின் பாா்போரா கிரெஜ்சிகோவா, ஆஸ்திரேலியாவின் கிம்பா்லி பிரெல் ஆகியோரும் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினா்.