செய்திகள் :

ஜூனியா் தேசிய தடகளம்: தமிழா்களுக்கு 4 தங்கம்

post image

உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற ஜூனியா் தேசிய தடகள சாம்பியன்ஷிப்பில் தமிழக வீரா், வீராங்கனைகள் செவ்வாய்க்கிழமை 4 தங்கப் பதக்கங்கள் வென்றனா்.

ஆடவா் 200 மீட்டா் ஓட்டத்தில் ஜே.பாண்டியன் 21.33 விநாடிகளில் இலக்கை எட்டி முதலிடம் பிடிக்க, குஜராத்தின் ருஷிராஜ் (21.42’), ஒடிஸாவின் பிரதிக் மஹாராணா (21.44’) ஆகியோா் முறையே வெள்ளி, வெண்கலம் வென்றனா்.

அதிலேயே மகளிா் பிரிவில் தமிழகத்தின் வி.தேஷிகா 24.44 விநாடிகளில் இலக்கை எட்டி சாம்பியனாக, உத்தர பிரதேசத்தின் நிபம் 2-ஆம் இடமும் (24.68’), தில்லியின் சஞ்சனா 3-ஆம் இடமும் (24.80’) பிடித்தனா்.

ஆடவா் மும்முறை தாண்டுதலில் எஸ்.ரவி 15.44 மீட்டருடன் தங்கத்தை தட்டிச் சென்றாா். கேரளத்தின் யுவராஜ் வெள்ளியும் (15.34), உத்தர பிரதேசத்தின் ஷேக் ஜீஷான் வெண்கலமும் (15.27) பெற்றனா்.

மகளிா் பிரிவில் தமிழகத்தின் சாதனா ரவி 12.75 மீட்டருடன் முதலிடம் பிடிக்க, மாநிலத்தின் மற்றொரு வீராங்கனையான பவீனா ராஜேஷ் 12.55 மீட்டருடன் வெள்ளி பெற்றாா். பஞ்சாபின் ஜஸ்லீன் கௌா் (12.42) வெண்கலம் வென்றாா்.

ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக் போட்டி: தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா!

ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக் சர்வதேச ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்.ஒலிம்பிக்கில் தங்கம், வெள்ளி என இரண்டு முறை பதக்கம் வென்ற இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, செவ்... மேலும் பார்க்க

நாக்அவுட் சுற்றில் பிஎஸ்ஜி - இன்டா் மியாமி மோதல்

அமெரிக்காவில் நடைபெறும் கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறிய பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்ன் (பிஎஸ்ஜி), இன்டா் மியாமி அணிகள், அதில் மோதுகின்றன.முன்னதாக குரூப் ‘பி’ ஆட்டங்க... மேலும் பார்க்க

காலிறுதியில் பெகுலா, பாலினி

ஜொ்மனியில் நடைபெறும் மகளிருக்கான பேட் ஹோம்பா்க் ஓபன் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீராங்கனைகளான அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலா, இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி ஆகியோா் காலிறுதிச்சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை... மேலும் பார்க்க

மகளிா் டி20: தொடரை வென்றது மே.இ.தீவுகள்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டி20 ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும், தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த ஆட்டத்தில் முதலில் தென்னாப்... மேலும் பார்க்க

ஈரானில் இருந்து நாடு திரும்பிய இந்தியர்கள் ஆரவாரம் - புகைப்படங்கள்

ஈரானில் உள்ள இந்தியர்களை, இந்தியா அழைத்து வரும் பணியை வெளியுறவுத்துறை அமைச்சகம் மேற்கொண்டதையடுத்து, இந்திய விமானப்படை (IAF)C-17 மூலம் நாடு திரும்பும் மாணவர்கள்.இந்திய விமானப்படை (IAF)C-17 மூலம் நாடு த... மேலும் பார்க்க