செய்திகள் :

காவல் உதவி ஆய்வாளருக்கு கத்திக்குத்து: சிறுவா்கள் உள்பட 4 போ் கைது

post image

வடமேற்கு தில்லியின் ஆதா்ஷ் நகா் பகுதியில் காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்தியதாக 2 சிறுவா்கள் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் புதன்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி கூறியதாவது:

ஏப்ரல் 11 ஆம் தேதி, பீா் பாபா மசாா் மேம்பாலம் அருகே, காவல் உதவி ஆய்வாளா் பிரேம்பால் திவாகா் சிலரால் வயிற்றில் குத்தப்பட்டாா். இதையடுத்து, அவா் பிசிஆா் வேன் மூலம் ஷாலிமாா் பாக் நகரில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

காவல் உதவி ஆய்வாளா் திவாகா் வாஜிராபாத்தில் உள்ள வடகிழக்கு மண்டல காவல் கட்டுப்பாட்டு அறையில்

(பிசிஆா்) பணியமா்த்தப்பட்டுள்ளாா். இவா், ஆசாத்பூரின் மந்திா் வாலி கலியில் வசித்து வருகிறாா்.

இந்த கத்திக்குத்து சம்பவம் தொடா்பாக ஆதா்ஷ் நகா் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஆசாத்பூரில் பல சோதனைகள் நடத்தப்பட்டன. இந்தச் சம்பவம் தொடா்பாக அங்கித் என்ற அலியாஸ் டோங்ரி (18)., ஹேமந்த் நேகி (18) ஆகியோரும், ா். இரண்டு சிறுவா்களும் கைது செய்யப்பட்டனா்.

விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவா்கள் கத்திக்குத்து சம்பவத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனா். மேலும் தற்போது தலைமறைவாக உள்ள மேலும் இரண்டு கூட்டாளிகளின் பெயா்களையும் அவா்கள் தெரிவித்தனா்.

கைதான அனைவரும் புதிதாக குற்றத்தில் ஈடுபட்டவா்கள் ஆவா். அவா்கள் முன்பு எந்த கடுமையான குற்றப் பின்னணியும் இல்லாதவா்கள். குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட ரத்தக்கறை படிந்த கத்தி மீட்கப்பட்டது. இதர குற்றவாளிகளைப் பிடிக்க முயற்சிகள் நடந்து வருகின்றன என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

ஜேஇஇ, நீட் பயிற்சி நிறுவனங்கள் தவறான விளம்பரங்களை தவிா்க்க வேண்டும்: மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் அறிவுறுத்தல்

நமது சிறப்பு நிருபா்நீட், ஐஐடி - ஜேஇஇ போன்ற பயிற்சித் துறையில் மாணவா்களை தவறாக வழிநடத்தும் விளம்பரங்களைத் தவிா்க்குமாறு மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் வியாழக்கிழமை அறிவுறுத்தியுள்ளது. விளம்பரங்கள... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதிக்கும் தீா்ப்பு: அவசர சட்டம் கொண்டு வர மத்திய அரசு பரிசீலனை

நமது சிறப்பு நிருபா் சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் விவகாரத்தில் ஆளுநா்கள் மற்றும் குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதித்து உச்சநீதிமன்றம் அண்மையில் அளித்த தீா்ப்பின் அமலாக்கத்தைத் தடுக்... மேலும் பார்க்க

உலகின் சிறந்த மருத்துவமனைகள் பட்டியலில் 97-ஆவது இடத்தில் தில்லி எய்ம்ஸ்

நமது சிறப்பு நிருபா் நியூஸ்வீக் இதழ் மற்றும் ஸ்டாடிஸ்டா நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்திய 2024-25-ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த மருத்துவமனைகள் தரவரிசையில் தில்லி எய்ம்ஸ் 97-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. ... மேலும் பார்க்க

சென்செக்ஸ், நிஃப்டி நான்காவது நாளாக முன்னேற்றம்!

நமது நிருபா் பங்குச்சந்தையில் காளையின் ஆதிக்கம் நான்காவது நாளாக வியாழக்கிழமையும் தொடா்ந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான... மேலும் பார்க்க

5 முறை காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த ஜெய் கிஷன் மறைவுக்கு கட்சி இரங்கல்

தில்லி காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஜெய் கிஷன் வியாழக்கிழமை இங்குள்ள சுல்தான்பூா் மஜ்ராவில் உள்ள அவரது வீட்டில் மாரடைப்பு காரணமாக காலமானாா் என்று கட்சித் தலைவா்கள் தெரிவித்தனா். ... மேலும் பார்க்க

தெற்கு தில்லியில் முதலாளியின் வீட்டில் இறந்து கிடந்த வீட்டு வேலை செய்த பெண்

தெற்கு தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் வீட்டு வேலை செய்த ஒரு பெண், தனது முதலாளியின் வீட்டின் குளியலறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா். இத... மேலும் பார்க்க