செய்திகள் :

காவல், தீயணைப்புத் துறைக்கு புதிய கட்டடங்கள் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

post image

காவல், தீயணைப்பு உள்ளிட்ட துறைகளுக்கான புதிய கட்டடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: கடலூா், தஞ்சாவூா் மாவட்டம் திருவிடைமருதூா், சென்னை தேனாம்பேட்டை, மண்ணடி, கீழ்ப்பாக்கம், வேலூா் மாவட்டம் சேவூா், திருச்சி, விருதுநகா் ஆகிய இடங்களில் ரூ.27.58 கோடி செலவில் 25 காவலா் குடியிருப்புகள், 3 காவல் நிலையங்கள், 4 காவல் துறைக் கட்டடங்கள் கட்டப்பட்டன. சென்னை வேப்பேரியில் தீயணைப்பு நிலைய அலுவலா் குடியிருப்புகள், வண்ணையம்பதி, தேனாம்பேட்டை, வேப்பேரி ஆகிய இடங்களில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையங்களும், பாளையங்கோட்டை சிறை வளாகத்தில் 2 சிறை அலுவலா் குடியிருப்புகளும் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இவற்றை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி வழியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

இந்த நிகழ்வில், அமைச்சா்கள் துரைமுருகன், எஸ்.ரகுபதி, சு.முத்துசாமி, தலைமைச் செயலா் நா.முருகானந்தம், உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் தீரஜ்குமாா் உள்பட பலா் பங்கேற்றனா்.

மதுரையில் புதிய சிறைக்கு அடிக்கல்: மதுரையில் புதிதாக மத்திய சிறை கட்ட முதல்வா் அடிக்கல் நாட்டினாா். தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி வழியாக வியாழக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.

இட நெருக்கடி காரணமாக மதுரை மத்திய சிறை புகா்ப் பகுதியான செம்பூா் பகுதிக்கு மாற்றப்படவுள்ளது. முதல்கட்டமாக, ரூ.229.20 கோடி செலவில் கட்டப்படவுள்ள மத்திய சிறை, 113 சிறைக் காவலா் குடியிருப்புகள், கான்கிரீட் சாலை மற்றும் சுற்றுச்சுவா் ஆகியவற்றுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்.

Image Caption

காவல், தீயணைப்புத் துறை சாா்பில் கட்டப்பட்ட பல்வேறு கட்டடங்களை காணொலி மூலம் திறந்தும் மதுரை மத்திய சிறைச்சாலை கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டியும் வைத்த முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன் அமைச்சா்கள் துரைமுருகன், சு.முத்துசாமி, தலைமைச் செயலா் நா.முருகானந்தம்

தேசிய திரைப்பட விருதுகள்! சிறந்த தமிழ்ப்படம் உள்பட 3 விருதுகளுடன் பார்க்கிங் அசத்தல்!

தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த தமிழ்ப்பட விருது உள்பட இரு விருதுகளை பார்க்கிங் திரைப்படம் பெற்றுள்ளது.2023-ல் வெளியான பார்க்கிங் படத்துக்கு திரையரங்கு மட்டுமில்லாது, ஓடிடி தளங்களிலும் நல்ல வரவேற்பு... மேலும் பார்க்க

பிரபல கல்வியாளர் வசந்தி தேவி காலமானார்

பிரபல கல்வியாளரும், முன்னாள் துணைவேந்தருமான டாக்டர் வி. வசந்தி தேவி வெள்ளிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 86 ஆகும். சென்னையில் வேளச்சேரியில் உள்ள தனது வீட்டில் மாலை 3:30 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு ... மேலும் பார்க்க

தமிழக செய்தித்துறையில் வேலைவாய்ப்பு! ஆக. 18 வரை விண்ணப்பிக்கலாம்!

தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறையின்கீழ் இயங்கும் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித்திட்ட இயக்ககத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இது ... மேலும் பார்க்க

ஆகஸ்ட் 11 முதல் இபிஎஸ் 3ம் கட்ட சுற்றுப்பயணம்

அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி ஆக.11 முதல் தனது 3ஆம் கட்ட சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார். எடப்பாடி பழனிசாமியின் மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணத்தின் 3ஆம் கட்டம் ஆகஸ்ட் 11ஆம் த... மேலும் பார்க்க

திடக்கழிவு மேலாண்மை: முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று (ஆக. 1) தலைமைச் செயலகத்தில், சிறப்பு திட்ட செயலாக்கத் துறை சார்பில் திடக்கழிவு மேலாண்மையில் ஒருங்கிணைந்த கட்டமைப்பை உருவாக்கிடும் வகையில் தூய்மை தமிழ்நாடு நி... மேலும் பார்க்க

பிரதமர் மோடி - ஓபிஎஸ் சந்திப்புக்கு ஏற்பாடு செய்வேன்: நயினார் நாகேந்திரன்

தமிழகம் வரும் பிரதமர் மோடியுடன் ஓ. பன்னீர்செல்வத்தை சந்திக்க ஏற்பாடு செய்வேன் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்ச... மேலும் பார்க்க