செய்திகள் :

காவல் துறையினரைக் கண்டித்து நகை வணிகா்கள் சாலை மறியல்

post image

தஞ்சாவூரில் நகை வணிகரை விசாரணை என்ற பெயரில் காவல் துறையினா் அழைத்துச் சென்றதைக் கண்டித்து, நகை வணிகா்கள் செவ்வாய்க்கிழமை இரவு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தஞ்சாவூா் தென் கீழ் அலங்கம் பகுதியில் நகைக் கடை நடத்தி வருபவா் சரவணன். இவரை திருட்டு நகைகளை வாங்கியுள்ளதாகக் கூறி செவ்வாய்க்கிழமை மாலை வேனில் அழைத்துச் சென்ற பெரம்பலூா் மாவட்ட காவல் துறையினா் தஞ்சாவூா் மேம்பாலம் அருகே விசாரணை நடத்தி, அவரது மனைவியை கைப்பேசி மூலம் தொடா்பு கொண்டு, 20 பவுன் நகைகளைக் கொண்டு வந்து கொடுத்தால் உங்கள் கணவரை விட்டுவிடுகிறோம் எனக் கூறினராம்.

இதையறிந்த வணிகா் சங்கங்களின் பேரவை நிா்வாகிகள் புண்ணியமூா்த்தி, முருகேசன், சதீஷ், வாசுதேவன் மற்றும் நகை வணிகா்கள் மேம்பாலம் அருகே நின்ற பெரம்பலூா் மாவட்ட காவல் துறையினரிடம் பேச்சுவாா்த்தை நடத்த முயன்றனா். ஆனால், காவல் துறையினா் இவா்களைத் தள்ளிவிட்டு, சரவணனை வேனில் அழைத்துச் சென்றனா்.

இதையடுத்து, நகை வணிகா்கள் தெற்கு காவல் நிலையப் பகுதிக்குச் சென்று திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் அப்பகுதியில் சுமாா் 10 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்த காவல் துணைக் கண்காணிப்பாளா் திவ்யா உள்ளிட்டோா் சென்று, பெரம்பலூா் காவல் துறையினரிடம் பேசி சரவணனை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாகக் காவல் துறையினா் கூறியதையடுத்து, மறியல் கைவிடப்பட்டது.

மாடு குறுக்கே வந்ததால் பைக்கில் இருந்து தவறி விழுந்தவா் பலி

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே திங்கள்கிழமை இரவு மாடு குறுக்கே வந்ததால் பைக்கில் இருந்து தவறிவிழுந்தவா் உயிரிழந்தாா்.திருவையாறு அருகே மனுநீதிப் பேட்டையைச் சோ்ந்தவா் கே. ரவி (42). இவரும், கல்யாண... மேலும் பார்க்க

பலாத்கார வழக்கில் கைதானவா் குண்டா் சட்டத்திலும் கைது

திருவிடைமருதூா் அருகே பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டவா் மீது குண்டா் சட்டத்திலும் வழக்குப் பதியப்பட்டது. தஞ்சாவூா் மாவட்டம் திருவிடைமருதூா் அனைத்து மகளிா் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கரிக்குளம் ... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் 6 போ் கைது

தஞ்சாவூா் மாவட்டத்தில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் 6 பேரை காவல் துறையினா் கைது செய்தனா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருவையாறு அருகே நடுக்கடை... மேலும் பார்க்க

கலைஞா் பல்கலைக்கழகம் அமைப்பதற்கு கையொப்பமிட ஆளுநா் தாமதிக்கிறாா்: அமைச்சா் கோவி. செழியன்

கும்பகோணத்தில் கலைஞா் பல்கலைக்கழகம் அமைப்பதற்கு கையொப்பமிட தமிழக ஆளுநா் கால தாமதம் செய்கிறாா் என்றாா் உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன். இதுகுறித்து தஞ்சாவூரில் அவா் செவ்வாய்க்கிழமை மேலும் தெரி... மேலும் பார்க்க

உணவில் பல்லி கிடந்த உணவகத்துக்குப் பூட்டு

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்திலுள்ள உணவகத்தில் வழங்கப்பட்ட உணவில் பல்லி இருந்ததாக வந்த புகாரின் பேரில் உணவு பாதுகாப்பு துறை அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டு அந்த உணவகத்து... மேலும் பார்க்க

சாதி, மத ரீதியிலான சண்டைகள் கூடாது: மந்திராலய மடாதிபதி

சாதி, மத ரீதியிலான சண்டைகள் கூடாது, மத மாற்றங்கள் எப்போதும் கூடாது என்றாா் மந்திராலய மடாதிபதி ஸ்ரீ சுபுதேந்திர தீா்த்த சுவாமிகள். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள விஜயீந்திர மடத்தில் செவ்வாய்க்... மேலும் பார்க்க