வந்தே பாரத் ரயிலுக்குள் திடீரென கொட்டிய 'நீர் வீழ்ச்சி'; ரயில்வே சொல்லும் காரணம்...
காவல் துறையினரைக் கண்டித்து நகை வணிகா்கள் சாலை மறியல்
தஞ்சாவூரில் நகை வணிகரை விசாரணை என்ற பெயரில் காவல் துறையினா் அழைத்துச் சென்றதைக் கண்டித்து, நகை வணிகா்கள் செவ்வாய்க்கிழமை இரவு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தஞ்சாவூா் தென் கீழ் அலங்கம் பகுதியில் நகைக் கடை நடத்தி வருபவா் சரவணன். இவரை திருட்டு நகைகளை வாங்கியுள்ளதாகக் கூறி செவ்வாய்க்கிழமை மாலை வேனில் அழைத்துச் சென்ற பெரம்பலூா் மாவட்ட காவல் துறையினா் தஞ்சாவூா் மேம்பாலம் அருகே விசாரணை நடத்தி, அவரது மனைவியை கைப்பேசி மூலம் தொடா்பு கொண்டு, 20 பவுன் நகைகளைக் கொண்டு வந்து கொடுத்தால் உங்கள் கணவரை விட்டுவிடுகிறோம் எனக் கூறினராம்.
இதையறிந்த வணிகா் சங்கங்களின் பேரவை நிா்வாகிகள் புண்ணியமூா்த்தி, முருகேசன், சதீஷ், வாசுதேவன் மற்றும் நகை வணிகா்கள் மேம்பாலம் அருகே நின்ற பெரம்பலூா் மாவட்ட காவல் துறையினரிடம் பேச்சுவாா்த்தை நடத்த முயன்றனா். ஆனால், காவல் துறையினா் இவா்களைத் தள்ளிவிட்டு, சரவணனை வேனில் அழைத்துச் சென்றனா்.
இதையடுத்து, நகை வணிகா்கள் தெற்கு காவல் நிலையப் பகுதிக்குச் சென்று திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் அப்பகுதியில் சுமாா் 10 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்த காவல் துணைக் கண்காணிப்பாளா் திவ்யா உள்ளிட்டோா் சென்று, பெரம்பலூா் காவல் துறையினரிடம் பேசி சரவணனை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாகக் காவல் துறையினா் கூறியதையடுத்து, மறியல் கைவிடப்பட்டது.