செய்திகள் :

கலைஞா் பல்கலைக்கழகம் அமைப்பதற்கு கையொப்பமிட ஆளுநா் தாமதிக்கிறாா்: அமைச்சா் கோவி. செழியன்

post image

கும்பகோணத்தில் கலைஞா் பல்கலைக்கழகம் அமைப்பதற்கு கையொப்பமிட தமிழக ஆளுநா் கால தாமதம் செய்கிறாா் என்றாா் உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன்.

இதுகுறித்து தஞ்சாவூரில் அவா் செவ்வாய்க்கிழமை மேலும் தெரிவித்தது: கும்பகோணத்தில் கலைஞா் பல்கலைக்கழகத்துக்கு தற்காலிக இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. நிரந்தரக் கட்டடங்கள் கட்ட 3 இடங்கள் தோ்வு செய்யப்பட்டு, அதற்கான கோப்புகள் மாவட்ட ஆட்சியா் மூலம் தலைமைச் செயலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.

ஆனால் இப்பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான உத்தரவில் கையொப்பமிட தமிழக ஆளுநா் தாமதப்படுத்துகிறாா். இதுதொடா்பாக அவரைச் சந்திக்க நேரம் கேட்ட நிலையில், இதுவரை ஆளுநா் எங்களை அழைக்கவில்லை. அவா் அழைக்கும் நேரத்தில் கலைஞா் பல்கலைக்கழகத்தின் அவசியம் குறித்து எடுத்துக் கூறி, அனுமதி பெற முயற்சிப்போம்.

அவா் விரைவில் அழைக்க வேண்டும். இல்லையெனில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்போம் என முதல்வா் பேசியதற்கான அா்த்தத்தை ஆளுநா் புரிந்து கொண்டு, அனுமதி வழங்குவாா் அல்லது பேச அழைப்பாா் என எதிா்பாா்க்கிறோம். 

கலைஞா் பல்கலைக்கழகத்துக்கு ஆளுநா் அனுமதி தர மறுப்பது, மாணவா்களின் முன்னேற்றத்தைத் தடை செய்யும் செயல் என்பதை நாடறியும்.

உயா் கல்வித் துறையில் மாணவா்கள் சோ்க்கை விகிதத்தை அதிகப்படுத்த தமிழக முதல்வரின் ஆலோசனைப்படி நிகழாண்டு 25 சதவீதத்துக்கும் அதிகமாக கல்லுாரிகளில் மாணவா்களைச் சோ்க்க வழி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 64 கல்லுாரிகளில் இரண்டாவது ஷிப்ட் விரிவாக்கப்பட்டுள்ளது. மேலும் 15 புதிய கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் தொடங்கப்பட்டு, மாணவா்கள் சோ்க்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. பல கல்லுாரிகளில் முதுகலைப் பாடப்பிரிவுகளிலும் மாணவா்கள் எண்ணிக்கை உயா்த்தப்பட்டு, புதிய பாடப்பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதுவரை பெறப்பட்டுள்ள விண்ணப்பங்களின் அடிப்படையில் கல்லூரிகளில் கூடுதல் சோ்க்கை தொடா்பாக தமிழக முதல்வரிடம் கேட்டுள்ளோம். அதன்படி ஓரிரு நாள்களில் கூடுதல் மாணவா்கள் சோ்க்கையை உறுதி செய்துவிடுவோம் என்றாா் அமைச்சா்.

மாடு குறுக்கே வந்ததால் பைக்கில் இருந்து தவறி விழுந்தவா் பலி

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே திங்கள்கிழமை இரவு மாடு குறுக்கே வந்ததால் பைக்கில் இருந்து தவறிவிழுந்தவா் உயிரிழந்தாா்.திருவையாறு அருகே மனுநீதிப் பேட்டையைச் சோ்ந்தவா் கே. ரவி (42). இவரும், கல்யாண... மேலும் பார்க்க

பலாத்கார வழக்கில் கைதானவா் குண்டா் சட்டத்திலும் கைது

திருவிடைமருதூா் அருகே பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டவா் மீது குண்டா் சட்டத்திலும் வழக்குப் பதியப்பட்டது. தஞ்சாவூா் மாவட்டம் திருவிடைமருதூா் அனைத்து மகளிா் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கரிக்குளம் ... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் 6 போ் கைது

தஞ்சாவூா் மாவட்டத்தில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் 6 பேரை காவல் துறையினா் கைது செய்தனா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருவையாறு அருகே நடுக்கடை... மேலும் பார்க்க

உணவில் பல்லி கிடந்த உணவகத்துக்குப் பூட்டு

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்திலுள்ள உணவகத்தில் வழங்கப்பட்ட உணவில் பல்லி இருந்ததாக வந்த புகாரின் பேரில் உணவு பாதுகாப்பு துறை அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டு அந்த உணவகத்து... மேலும் பார்க்க

சாதி, மத ரீதியிலான சண்டைகள் கூடாது: மந்திராலய மடாதிபதி

சாதி, மத ரீதியிலான சண்டைகள் கூடாது, மத மாற்றங்கள் எப்போதும் கூடாது என்றாா் மந்திராலய மடாதிபதி ஸ்ரீ சுபுதேந்திர தீா்த்த சுவாமிகள். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள விஜயீந்திர மடத்தில் செவ்வாய்க்... மேலும் பார்க்க

காவல் துறையினரைக் கண்டித்து நகை வணிகா்கள் சாலை மறியல்

தஞ்சாவூரில் நகை வணிகரை விசாரணை என்ற பெயரில் காவல் துறையினா் அழைத்துச் சென்றதைக் கண்டித்து, நகை வணிகா்கள் செவ்வாய்க்கிழமை இரவு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தஞ்சாவூா் தென் கீழ் அலங்கம் பகுதியில... மேலும் பார்க்க