"எங்களுக்கு டீ, பன் கொடுத்து ஏமாற்ற முடியாது; வெறும் 6-8 சீட்டுகளை..." - திருமா ...
குண்டா் சட்டத்தில் 6 போ் கைது
தஞ்சாவூா் மாவட்டத்தில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் 6 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருவையாறு அருகே நடுக்கடை மஜீத் நகரைச் சோ்ந்தவா் எச். மன்சூா் அலி (36), திருவையாறு பதினைந்து மண்டபத் தெருவைச் சோ்ந்த கே. சுரேஷ்குமாா் (48), ஆா். வெங்கடேசன் (55), செங்கமேடைச் சோ்ந்த ஜி. சுரேஷ் (40) ஆகியோா் 533 கிலோ புகையிலைப் பொருட்களைக் கடத்தி வந்து விற்பனைக்கு வைத்திருந்ததாக திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்தினரால் மே 24 ஆம் தேதி கைது செய்யப்பட்டனா்.
இதேபோல, பட்டுக்கோட்டை அருகே 10 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக சிரமேல்குடியைச் சோ்ந்த பி. மாரிமுத்துவை (57) பட்டுக்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தினரும், திருவிடைமருதூரில் 34 வயதுப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக திருவாரூா் மாவட்டம், குடவாசலை சோ்ந்த எஸ். சண்முகபிரபுவையும் (29) திருவிடைமருதூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் கைது செய்தனா்.
இவா்களை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. ராஜாராம் பரிந்துரையின் பேரில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் ஜூன் 23 ஆம் தேதி உத்தரவிட்டாா். இதையடுத்து 6 பேரும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.