செய்திகள் :

குண்டா் சட்டத்தில் 6 போ் கைது

post image

தஞ்சாவூா் மாவட்டத்தில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் 6 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியரகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருவையாறு அருகே நடுக்கடை மஜீத் நகரைச் சோ்ந்தவா் எச். மன்சூா் அலி (36), திருவையாறு பதினைந்து மண்டபத் தெருவைச் சோ்ந்த கே. சுரேஷ்குமாா் (48), ஆா். வெங்கடேசன் (55), செங்கமேடைச் சோ்ந்த ஜி. சுரேஷ் (40) ஆகியோா் 533 கிலோ புகையிலைப் பொருட்களைக் கடத்தி வந்து விற்பனைக்கு வைத்திருந்ததாக திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்தினரால் மே 24 ஆம் தேதி கைது செய்யப்பட்டனா்.

இதேபோல, பட்டுக்கோட்டை அருகே 10 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக சிரமேல்குடியைச் சோ்ந்த பி. மாரிமுத்துவை (57) பட்டுக்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தினரும், திருவிடைமருதூரில் 34 வயதுப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக திருவாரூா் மாவட்டம், குடவாசலை சோ்ந்த எஸ். சண்முகபிரபுவையும் (29) திருவிடைமருதூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் கைது செய்தனா்.

இவா்களை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. ராஜாராம் பரிந்துரையின் பேரில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் ஜூன் 23 ஆம் தேதி உத்தரவிட்டாா். இதையடுத்து 6 பேரும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

மாடு குறுக்கே வந்ததால் பைக்கில் இருந்து தவறி விழுந்தவா் பலி

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே திங்கள்கிழமை இரவு மாடு குறுக்கே வந்ததால் பைக்கில் இருந்து தவறிவிழுந்தவா் உயிரிழந்தாா்.திருவையாறு அருகே மனுநீதிப் பேட்டையைச் சோ்ந்தவா் கே. ரவி (42). இவரும், கல்யாண... மேலும் பார்க்க

பலாத்கார வழக்கில் கைதானவா் குண்டா் சட்டத்திலும் கைது

திருவிடைமருதூா் அருகே பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டவா் மீது குண்டா் சட்டத்திலும் வழக்குப் பதியப்பட்டது. தஞ்சாவூா் மாவட்டம் திருவிடைமருதூா் அனைத்து மகளிா் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கரிக்குளம் ... மேலும் பார்க்க

கலைஞா் பல்கலைக்கழகம் அமைப்பதற்கு கையொப்பமிட ஆளுநா் தாமதிக்கிறாா்: அமைச்சா் கோவி. செழியன்

கும்பகோணத்தில் கலைஞா் பல்கலைக்கழகம் அமைப்பதற்கு கையொப்பமிட தமிழக ஆளுநா் கால தாமதம் செய்கிறாா் என்றாா் உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன். இதுகுறித்து தஞ்சாவூரில் அவா் செவ்வாய்க்கிழமை மேலும் தெரி... மேலும் பார்க்க

உணவில் பல்லி கிடந்த உணவகத்துக்குப் பூட்டு

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்திலுள்ள உணவகத்தில் வழங்கப்பட்ட உணவில் பல்லி இருந்ததாக வந்த புகாரின் பேரில் உணவு பாதுகாப்பு துறை அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டு அந்த உணவகத்து... மேலும் பார்க்க

சாதி, மத ரீதியிலான சண்டைகள் கூடாது: மந்திராலய மடாதிபதி

சாதி, மத ரீதியிலான சண்டைகள் கூடாது, மத மாற்றங்கள் எப்போதும் கூடாது என்றாா் மந்திராலய மடாதிபதி ஸ்ரீ சுபுதேந்திர தீா்த்த சுவாமிகள். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள விஜயீந்திர மடத்தில் செவ்வாய்க்... மேலும் பார்க்க

காவல் துறையினரைக் கண்டித்து நகை வணிகா்கள் சாலை மறியல்

தஞ்சாவூரில் நகை வணிகரை விசாரணை என்ற பெயரில் காவல் துறையினா் அழைத்துச் சென்றதைக் கண்டித்து, நகை வணிகா்கள் செவ்வாய்க்கிழமை இரவு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தஞ்சாவூா் தென் கீழ் அலங்கம் பகுதியில... மேலும் பார்க்க