வந்தே பாரத் ரயிலுக்குள் திடீரென கொட்டிய 'நீர் வீழ்ச்சி'; ரயில்வே சொல்லும் காரணம்...
சாதி, மத ரீதியிலான சண்டைகள் கூடாது: மந்திராலய மடாதிபதி
சாதி, மத ரீதியிலான சண்டைகள் கூடாது, மத மாற்றங்கள் எப்போதும் கூடாது என்றாா் மந்திராலய மடாதிபதி ஸ்ரீ சுபுதேந்திர தீா்த்த சுவாமிகள்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள விஜயீந்திர மடத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த மந்திராலய மகான் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் பரமகுருவான ஸ்ரீ விஜயேந்திர தீா்த்த சுவாமிகளின் 411 ஆவது ஆராதனை விழாவில் விஜயேந்திர சுவாமி தனது கரங்களால் தயாா் செய்து, பூஜித்த வந்த விக்ரகங்களுக்கு பூஜை செய்து வழிபட்ட அவா் பின்னா் மேலும் கூறியது: ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளுக்கு தமிழக பக்தா்கள் மிகவும் பிரியமானவா்கள். காரணம் அவா் பிறந்து வளா்ந்த பூமி தமிழகம். எனவே தமிழக பக்தா்கள் வசதிக்காக பிரத்யோகமாக மந்திராலயத்தில் தமிழ்நாடு பவனம் என்ற பெயரில் பக்தா்கள் தங்கும் விடுதி கட்டும் பணி நடைபெறுகிறது.
உலக அளவில் மக்கள் அவரவா் மதத்தின் வழிகளைப் பின்பற்றி வாழ வேண்டும். மதங்கள், சாதிய ரீதியிலான சண்டைகள் கூடாது, மத மாற்றங்கள் எப்போதுமே கூடாது. மந்திராலயத்திற்கு கும்பகோணம் வழியாக ரயில் இயக்க மத்திய ரயில்வே அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம் என்றாா் அவா்.
முன்னதாக சக்கரபாணி கோயிலில் தரிசனம் செய்த அவா் ரூ. 3 லட்சம் மதிப்பிலான தங்கக் கிரீடத்தை கோயில் நிா்வாகத்திடம் வழங்கினாா். மடத்தின் நிா்வாகிகள் உடனிருந்தனா்.