செய்திகள் :

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்: பிரதமருக்கு 3 நாள்களுக்கு முன்பே தெரியுமாம்! -காங். விமர்சனம்

post image

புது தில்லி: ஜம்மு-காஷ்மீரில் தாக்குதல் நடத்தப்படலாம் என்பது பிரதமர் நரேந்திர மோடிக்கு முன்கூட்டியே தெரியும் என்கிற சந்தேகத்தை அவர் மீது எழுப்பியுள்ளார் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து உளவுத் துறையிடமிருந்து பிரதமருக்கு 3 நாள்களுக்கு முன்பே தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்டது என்று பகிரங்கமாக குற்றஞ்சாட்டியிருக்கிறது எதிர்க்கட்சியான காங்கிரஸ்.

இதனைத்தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி தாம் காஷ்மீருக்குச் செல்லவதாக ஏற்கெனவே திட்டமிட்டிருந்த பயணத்தையும் திட்டமிட்டே தவிர்த்துவிட்டார் என்ற தகவலும் ஊடகங்களில் வெளியாகியிருப்பதாகச் சுட்டிக்காட்டி விமர்சித்திருக்கிறார் கார்கே.

ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் இன்று(மே 6) செய்தியாளர்களுடன் பேசிய கார்கே, ‘காஷ்மீரின் நிலவரம் குறித்து உங்களுக்கு உரிய தகவல் முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டாலும், அதனைத்தொடர்ந்து நீங்கள் ஏன் உளவுத் துறை, காஷ்மீர் போலீஸ், பாதுகாப்புப்படை, எல்லைப் பாதுகாப்புப்படை ஆகியோருக்கு இந்த தகவலை தெரிவிக்கவில்லை? அங்குள்ள மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவில்லை?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் 19-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ஜம்மு-காஷ்மீருக்குச் செல்ல திட்டமிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குவாட் உச்சிமாநாட்டில் பங்கேற்க ஆஸி. பிரதமருக்கு அழைப்பு!

ஆஸ்திரேலியாவின் 32-வது பிரதமராக வரலாற்றுச் சிறப்புமிக்க முறையில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்தோணி அல்பானீஸுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார். அப்போது, இரு நாடுக... மேலும் பார்க்க

வக்ஃப் வாரியத்தின் புதிய கட்டடத்துக்கு முன்னாள் குடியரசுத் தலைவரின் பெயர் சூட்டப்படும்! முதல்வர் அறிவிப்பு!

மத்தியப் பிரதேசத்தில் புதியதாகக் கட்டப்பட்டுள்ள வக்ஃப் வாரியத்தின் கட்டடத்துக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பெயர் சூட்டப்படும் என அம்மாநில முதல்வர் மோகன் யாதவ் தெரிவித்துள்ளார். அம்மாந... மேலும் பார்க்க

விமானத்தில் தீ! தில்லியில் அவசரமாக தரையிறக்கம்: 425 பயணிகள் உயிர் தப்பினர்!

புது தில்லி: ரஷியாவின் மாஸ்கோ நகருக்கு பேங்க்காக் விமான நிலையத்திலிருந்து இன்று(மே 6) புறப்பட்ட விமானம் ஒன்று, தில்லி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்திய வான்வெளி வழியாக மாஸ்கோ சென்றுக... மேலும் பார்க்க

ஹிந்துக்களின் பாதுகாப்பை மமதா உறுதி செய்யவில்லை: பாஜக

மேற்கு வங்கத்தில் முதல்வர் மமதா பானர்ஜி ஆட்சியில் ஹிந்துக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படவில்லை என பாஜக விமர்சித்துள்ளது. மூர்ஷிதாபாத் பகுதியில் உண்மையாக பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளைச் சென்று அவர் ... மேலும் பார்க்க

கழிப்பறை அடைப்பால் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்!

கனடாவிலிருந்து தில்லி நோக்கி சென்றுக்கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தின் கழிப்பறை அடைக்கப்பட்டதினால் அவசரமாக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்டது. கனடாவின் டொராண்டோ நகரிலிருந்து தில்லி நோக்கி சுமார் 250 பயணி... மேலும் பார்க்க

பாக். எல்லையில் பதற்றம்: இந்திய விமானப்படை நாளைமுதல் போர் பயிற்சி!

புது தில்லி: பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானப்படை நாளைமுதல் போர் பயிற்சியில் ஈடுபடவுள்ளது.இது குறித்து இந்திய விமானப்படை அதிகாரிகள் இன்று(மே 6) தெரிவித்திருப்பதாவது: நாளையிலிருந்து இந்தியா - பாகிஸ்த... மேலும் பார்க்க