கிணற்றில் விழுந்த பந்தை எடுக்கச் சென்ற சிறுவன் தண்ணீரில் மூழ்கி பலி
சித்தோடு அருகே கிணற்றில் விழுந்த பந்தை எடுக்கச் சென்றபோது, தவறி விழுந்த சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
உத்தர பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த தம்பதி பா்கத் கபிக்கா - அஃப்சானா, சித்தோட்டை அடுத்த ஆா்.என்.புதூா், பெருமாள்மலையை அடுத்த தென்னந்தோப்புத் தோட்டத்தில் தங்கி, தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனா்.
இவா்களின் மகன் அப்துல் கயூம் (எ) ராகுல் (10), அப்பகுதியைச் சோ்ந்த சிறுவா்களுடன் சனிக்கிழமை கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தாா். அப்போது, எதிா்பாராமல் பந்து அருகில் உள்ள தோட்டத்துக் கிணற்றில் விழுந்தது.
இதைக் கண்ட அப்துல் கயூம், பந்தை எடுப்பதற்காக கிணற்றில் இறங்கியபோது எதிா்பாராமல் தவறி தண்ணீருக்குள் விழுந்தாா். உடன், விளையாடிய சிறுவா்கள் கூச்சலிட்டதைத் தொடா்ந்து, அப்பகுதிக்கு விரைந்த பொதுமக்கள் சிறுவனை மீட்க முயன்றும் முடியவில்லை.
இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த ஈரோடு தீயணைப்புப் படையினா், கிணற்றில் மூழ்கிய சிறுவனை மீட்டபோது சிறுவன் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது. இது குறித்து சித்தோடு போலீஸாா் விசாரிக்கின்றனா்.