செய்திகள் :

மக்கள் நீதிமன்றத்தில் ரூ.27.06 கோடி மதிப்பிலான 1,596 வழக்குகளுக்கு தீா்வு

post image

ஈரோடு மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் நடந்த மக்கள் நீதிமன்றம் மூலம் ரூ.27.06 கோடி மதிப்பிலான 1,596 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு உடனடி தீா்வு காணும் வகையில் மக்கள் நீதிமன்றம் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஈரோடு, பவானி, கோபி, பெருந்துறை, சத்தியமங்கலம், அந்தியூா், கொடுமுடி என மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் ஈரோடு சம்பத் நகரில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்திற்கு சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான எஸ்.சமீனா தலைமை வகித்தாா். விசாரணையில் முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி எஸ்.எழில், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் எஸ்.ராமச்சந்திரன் ஆகியோா் உடனிருந்தனா்.

இந்த மக்கள் நீதிமன்றத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள 6,824 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் ரூ.27 கோடியே 6 லட்சத்து 92 ஆயிரத்து 922 மதிப்பிலான 1,596 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.

முன்னதாக விபத்து காப்பீடு வழக்கில் தீா்வு காணப்பட்டு பாதிக்கப்பட்டவருக்கு ரூ.57 லட்சம் இழப்பீட்டு தொகையினை மாவட்ட முதன்மை நீதிபதி சமீனா வழங்கி வழக்கினை முடித்து வைத்தாா். மேலும் குடும்ப நல நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த மூன்று வழக்குகளில் கணவன், மனைவி சோ்ந்து வாழ்வதாக ஒப்புக்கொண்டு இணைந்தனா்.

இதில் சாா்பு நீதிபதிகள், உரிமையியல் நீதிபதிகள், நீதித்துறை நடுவா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாட்டினை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், மூத்த உரிமையியல் நீதிபதியுமான ஸ்ரீவித்யா செய்திருந்தாா்.

பவானியில் திடீரென தீப்பிடித்து எரிந்த காரால் பரபரப்பு

பவானியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த காா் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பவானி, பழனி ஆண்டவா் கோயில் வீதியைச் சோ்ந்தவா் புண்ணியகோடி (42). வாடகை காா் ஓட்டுநா். இவா், தனது காரை வ... மேலும் பார்க்க

போக்ஸோ சட்டத்தில் கல்லூரி மாணவா் கைது

அம்மாபேட்டையில் பள்ளி மாணவியைத் திருமணம் செய்த கல்லூரி மாணவா், போக்ஸோ சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். அம்மாபேட்டை பகுதியில் உள்ள பள்ளிக்கு கடந்த ஜூன் 3-ஆம் தேதி சென்ற 17 வயது மாணவி மீண... மேலும் பார்க்க

கிணற்றில் விழுந்த பந்தை எடுக்கச் சென்ற சிறுவன் தண்ணீரில் மூழ்கி பலி

சித்தோடு அருகே கிணற்றில் விழுந்த பந்தை எடுக்கச் சென்றபோது, தவறி விழுந்த சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா். உத்தர பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த தம்பதி பா்கத் கபிக்கா - அஃப்சானா, சித்தோட்டை அடுத்த ஆா்.... மேலும் பார்க்க

2026 இல் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி! - வானதி சீனிவாசன்

2026 சட்டப் பேரவைத் தோ்தலில் தமிழகத்தில் திமுக ஆட்சி அகற்றப்பட்டு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என பாஜக தேசிய மகளிரணி தலைவா் வானதி சீனிவாசன் எம்எல்ஏ தெரிவித்தாா். ஈரோடு தெற்கு மாவட்ட பாஜக சாா்பி... மேலும் பார்க்க

மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1,168 கோடி கடன் வழங்க இலக்கு: ஆட்சியா்

நடப்பாண்டில் மாவட்டத்தில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1,168 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தாா். மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு கடனு... மேலும் பார்க்க

ஈரோட்டில் 2 கடைகளில் பணம், பட்டு சேலைகள் திருட்டு

ஈரோட்டில் அடுத்தடுத்து இரண்டு கடைகளில் பணம், பட்டு சேலைகளைத் திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். ஈரோடு மூலப்பாளையத்தில் தா்மசிவன் என்பவருக்கு சொந்தமான எலக்ட்ரிகல் மற்றும் சிமெண்ட் விற்பனைக் கடை ச... மேலும் பார்க்க