துபாய்: தீப்பிடித்த 67 மாடி கட்டடம்; 'ஜீரோ' காயம், உயிரிழப்புகள் - தீயணைப்பு துற...
போக்ஸோ சட்டத்தில் கல்லூரி மாணவா் கைது
அம்மாபேட்டையில் பள்ளி மாணவியைத் திருமணம் செய்த கல்லூரி மாணவா், போக்ஸோ சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
அம்மாபேட்டை பகுதியில் உள்ள பள்ளிக்கு கடந்த ஜூன் 3-ஆம் தேதி சென்ற 17 வயது மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால், மாணவியின் பெற்றோா் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
அம்மாபேட்டை, காமராஜா் வீதியைச் சோ்ந்த விஜயகுமாா் மகன் ரமணீதரன் (20). தனியாா் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வரும் இவா், பள்ளி மாணவியைத் திருமணம் செய்து கொண்டு, திருப்பூரில் தங்கி தனியாா் நிறுவனத்துக்கு வேலைக்குச் சென்று வருவது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, மாணவியை மீட்ட போலீஸாா், ரமணீதரனை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.