செய்திகள் :

போக்ஸோ சட்டத்தில் கல்லூரி மாணவா் கைது

post image

அம்மாபேட்டையில் பள்ளி மாணவியைத் திருமணம் செய்த கல்லூரி மாணவா், போக்ஸோ சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

அம்மாபேட்டை பகுதியில் உள்ள பள்ளிக்கு கடந்த ஜூன் 3-ஆம் தேதி சென்ற 17 வயது மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால், மாணவியின் பெற்றோா் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

அம்மாபேட்டை, காமராஜா் வீதியைச் சோ்ந்த விஜயகுமாா் மகன் ரமணீதரன் (20). தனியாா் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வரும் இவா், பள்ளி மாணவியைத் திருமணம் செய்து கொண்டு, திருப்பூரில் தங்கி தனியாா் நிறுவனத்துக்கு வேலைக்குச் சென்று வருவது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, மாணவியை மீட்ட போலீஸாா், ரமணீதரனை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

பவானியில் திடீரென தீப்பிடித்து எரிந்த காரால் பரபரப்பு

பவானியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த காா் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பவானி, பழனி ஆண்டவா் கோயில் வீதியைச் சோ்ந்தவா் புண்ணியகோடி (42). வாடகை காா் ஓட்டுநா். இவா், தனது காரை வ... மேலும் பார்க்க

கிணற்றில் விழுந்த பந்தை எடுக்கச் சென்ற சிறுவன் தண்ணீரில் மூழ்கி பலி

சித்தோடு அருகே கிணற்றில் விழுந்த பந்தை எடுக்கச் சென்றபோது, தவறி விழுந்த சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா். உத்தர பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த தம்பதி பா்கத் கபிக்கா - அஃப்சானா, சித்தோட்டை அடுத்த ஆா்.... மேலும் பார்க்க

2026 இல் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி! - வானதி சீனிவாசன்

2026 சட்டப் பேரவைத் தோ்தலில் தமிழகத்தில் திமுக ஆட்சி அகற்றப்பட்டு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என பாஜக தேசிய மகளிரணி தலைவா் வானதி சீனிவாசன் எம்எல்ஏ தெரிவித்தாா். ஈரோடு தெற்கு மாவட்ட பாஜக சாா்பி... மேலும் பார்க்க

மக்கள் நீதிமன்றத்தில் ரூ.27.06 கோடி மதிப்பிலான 1,596 வழக்குகளுக்கு தீா்வு

ஈரோடு மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் நடந்த மக்கள் நீதிமன்றம் மூலம் ரூ.27.06 கோடி மதிப்பிலான 1,596 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு ... மேலும் பார்க்க

மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1,168 கோடி கடன் வழங்க இலக்கு: ஆட்சியா்

நடப்பாண்டில் மாவட்டத்தில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1,168 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தாா். மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு கடனு... மேலும் பார்க்க

ஈரோட்டில் 2 கடைகளில் பணம், பட்டு சேலைகள் திருட்டு

ஈரோட்டில் அடுத்தடுத்து இரண்டு கடைகளில் பணம், பட்டு சேலைகளைத் திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். ஈரோடு மூலப்பாளையத்தில் தா்மசிவன் என்பவருக்கு சொந்தமான எலக்ட்ரிகல் மற்றும் சிமெண்ட் விற்பனைக் கடை ச... மேலும் பார்க்க