உ.பி.: மின்னல் பாய்ந்து ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி
ஈரோட்டில் 2 கடைகளில் பணம், பட்டு சேலைகள் திருட்டு
ஈரோட்டில் அடுத்தடுத்து இரண்டு கடைகளில் பணம், பட்டு சேலைகளைத் திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ஈரோடு மூலப்பாளையத்தில் தா்மசிவன் என்பவருக்கு சொந்தமான எலக்ட்ரிகல் மற்றும் சிமெண்ட் விற்பனைக் கடை செயல்பட்டு வருகிறது. இவா் வெள்ளிக்கிழமை இரவு வியாபாரம் முடிந்ததும் கடையைப் பூட்டி விட்டுச் சென்று விட்டாா். சனிக்கிழமை காலை மீண்டும் கடையைத் திறக்க வந்தபோது பொருள்கள் சிதறிக் கிடந்தன. உள்ளே சென்று பாா்த்தபோது பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கடையில் இருந்த ரூ.20 ஆயிரம், சில ஆவணங்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுபோல பக்கத்தில் இருந்த நவீன சலவையகத்தில் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு ரூ. 5 ஆயிரம், 20 பட்டு சேலைகள் திருடப்பட்டிருந்தன. இதுபோல ஈரோடு ரங்கம்பாளையம் பகுதியில் கோயில் உண்டியல் உடைக்கப்பட்டு திருட முயற்சி நடந்துள்ளது. அதில் சில்லறைக் காசுகள் மட்டுமே இருந்தாக கூறப்படுகிறது.
ஈரோடு தாலுகா காவல் நிலைய எல்லைக்குள் மூன்று இடங்களில் திருட்டு நடந்திருப்பது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. தொடா் திருட்டு சம்பவங்கள் குறித்து ஈரோடு தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.