கடலூர்: ஏரியில் மூழ்கி பலியான இளைஞர்! முதல்வர் ரூ. 3 லட்சம் இழப்பீடு அறிவிப்பு!
பவானியில் திடீரென தீப்பிடித்து எரிந்த காரால் பரபரப்பு
பவானியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த காா் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பவானி, பழனி ஆண்டவா் கோயில் வீதியைச் சோ்ந்தவா் புண்ணியகோடி (42). வாடகை காா் ஓட்டுநா். இவா், தனது காரை வீட்டுக்கு வெளியே சனிக்கிழமை நிறுத்திவிட்டு, வீட்டுக்குள் சென்று விட்டாா். சிறிதுநேரத்தில் காரிலிருந்து கரும்புகையுடன், தீ கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. இதைக் கண்ட அப்பகுதியினா் பவானி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புப் படையினா் தண்ணீரைப் பீய்ச்சியடித்து, காரில் பிடித்த தீயை அணைத்தனா். இதனால், அப்பகுதியில் சுமாா் அரை மணி நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. இதில், காா் முற்றிலும் எரிந்து சேதமானது. இதுகுறித்து, பவானி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.