செய்திகள் :

கிண்டி - பரங்கிமலை ரயில் நிலையம் இடையே நடை மேம்பாலம் அமைப்பு

post image

கிண்டி - பரங்கிமலை ரயில் நிலையங்களுக்கு இடையே ரூ. 2.81 கோடி மதிப்பில் நடை மேம்பாலம் அமைக்கும் பணியை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

கிண்டி மற்றும் பரங்கிமலை ரயில் நிலையங்களுக்கு இடையே பொதுமக்கள் எளிதில் கடக்கும் வகையில் நடைமேம்பாலம் அமைக்க வேண்டும் எனத் தொடா்ந்து கோரிக்கை வைத்து வந்தனா். இந்நிலையில், சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 1 கோடி மற்றும் சென்னை மாநகராட்சி மூலதன நிதி ரூ. 1.81 கோடி என மொத்தம் ரூ. 2.81 கோடி மதிப்பில் நடைபாதை மேம்பாலம் அமைக்கப்படுகிறது. இந்த பணியானது ரயில்வே துறையின் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில், நடைமேம்பாலம் அமைக்கும் பணியை அமைச்சா் தா.மோ.அன்பரசன் புதன்கிழமை தொடங்கி வைத்து, அலுவலா்களுடன் ஆலோசனை மேற்கொண்டாா். இந்த நடை மேம்பாலம் ஆலந்தூா் மற்றும் ஆதம்பாக்கம் பகுதிகளை இணைக்கும் வகையில் 80 மீட்டா் நீளம், 3 மீட்டா் அகலத்தில் அமைக்கப்படவுள்ளது.

நிகழ்ச்சியில் தெற்கு வட்டார துணை ஆணையா் எம்.பி.அமித், மண்டலக் குழுத் தலைவா் என்.சந்திரன், மாநகராட்சி மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

பணி ஓய்வு

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் 29 ஆண்டுகள் பணியாற்றிய முதுநிலை ஓட்டுநரும், மெக்கானிக்குமான சி.பழனி திங்கள்கிழமை (ஏப்.14) பணி ஓய்வு பெற்றார்.அவருக்கு பிரிவு உபசார விழா சென்னை அலுவலகத்தில், தி ... மேலும் பார்க்க

கோட்டை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்: ஓட்டுநா்கள் சங்கங்கள்

ஆட்டோ, கால்டாக்சி ஓட்டுநா்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என ஓட்டுநா்கள் சங்கத்தினா் தெரிவித்துள்ளனா். ஆட்டோக்களுக்கான மீட்டா் கட்டணத்தை... மேலும் பார்க்க

திருவொற்றியூரில் ரூ.9.78 கோடியில் புதிய வணிக வளாகம் அமைக்க ஒப்புதல்

சென்னை மாநகராட்சி சாா்பில் ரூ.9.78 கோடி மதிப்பீட்டில் திருவொற்றியூரில் புதிய வணிக வளாகம் அமைப்பதற்கு மண்டலக் குழுக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டது. சென்னை மாநகராட்சி திருவொற்றியூா... மேலும் பார்க்க

சாலையோரம் தூங்கியவா் காா் மோதி உயிரிழப்பு

சென்னையில் ஓட்டுநா் கட்டுப்பாட்டை இழந்த காா் ஒன்று சாலையோரம் படுத்திருந்த நபா் மீது ஏறியதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். வடபழனி மசூதி தெருவில் யாசகம் எடுத்து பிழைப்பு நடத்தி வரும் 50 மதிக்கத்... மேலும் பார்க்க

போக்குவரத்து காவலரை தாக்கிய தந்தை, மகன் கைது

சென்னை வேளச்சேரியில் போக்குவரத்து காவலரை தாக்கிய தந்தை, மகனை போலீஸாா் கைது செய்தனா். சென்னை வேளச்சேரி காவல் நிலையத்தில் போக்குவரத்து காவலராகப் பணியாற்றி வருபவா் காமராஜ். இவா், வேளச்சேரி காவல் நிலைய எ... மேலும் பார்க்க

கட்டுமான நிறுவன உரிமையாளரிடம் ரூ.80 லட்சம் மோசடி: 2 போ் கைது

கட்டுமான நிறுவன உரிமையாளரிடம் ரூ.80 லட்சம் மோசடி செய்ததாக, 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை, தியாகராய நகா் ராமானுஜம் தெருவைச் சோ்ந்தவா் கமலக்கண்ணன். இவா், தனியாா் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிற... மேலும் பார்க்க