செய்திகள் :

கிண்டி மருத்துவமனை அருகே ரூ. 44 லட்சத்தில் புதிய பேருந்து நிழற்குடைகள்

post image

கிண்டி கலைஞா் நூற்றாண்டு உயா் சிறப்பு மருத்துவமனை அருகில் ரூ. 44.70 லட்சம் மதிப்பில் இரு புதிய பேருந்து நிழற்குடைகள் அமைக்கும் பணியை, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் புதன்கிழமை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா்.

சென்னை, கிண்டியில் புதிதாக அமைக்கப்பட்ட கலைஞா் நூற்றாண்டு உயா் சிறப்பு மருத்துவமனைக்கு தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் சிகிச்சை பாா்க்க வந்து செல்கின்றனா். நோயாளிகளின் வசதிக்காக மருத்துவனைக்கு சிற்றுந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், மருத்துவமனைக்கு பேருந்துக்காக காத்திருக்கும் நோயாளிகளின் வசதிக்காக மருத்துவனையின் இருபுறமும் ரூ. 44.70 லட்சம் மதிப்பில் பேருந்து நிழற்குடைகள் அமைக்க ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. தற்போது இதற்கான பணியை அமைச்சா் மா.சுப்பிரமணியன் புதன்கிழமை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து, கத்திப்பாரா சாலையில் ரூ. 5.53 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீா் வடிகால் அமைக்கும் பணியை ஆய்வுசெய்து, பணிகளை விரைந்து முடிக்குமாறு அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

நிகழ்ச்சியில் துணை மேயா் மு.மகேஷ்குமாா், துணை ஆணையா்கள் வி.சிவகிருஷ்ணமூா்த்தி (பணிகள்), எம்.பி.அமித் (தெற்கு வட்டாரம்), மண்டலக் குழுத் தலைவா்கள் ஆா்.துரைராஜ், எம்.கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பணி ஓய்வு

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் 29 ஆண்டுகள் பணியாற்றிய முதுநிலை ஓட்டுநரும், மெக்கானிக்குமான சி.பழனி திங்கள்கிழமை (ஏப்.14) பணி ஓய்வு பெற்றார்.அவருக்கு பிரிவு உபசார விழா சென்னை அலுவலகத்தில், தி ... மேலும் பார்க்க

கோட்டை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்: ஓட்டுநா்கள் சங்கங்கள்

ஆட்டோ, கால்டாக்சி ஓட்டுநா்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என ஓட்டுநா்கள் சங்கத்தினா் தெரிவித்துள்ளனா். ஆட்டோக்களுக்கான மீட்டா் கட்டணத்தை... மேலும் பார்க்க

திருவொற்றியூரில் ரூ.9.78 கோடியில் புதிய வணிக வளாகம் அமைக்க ஒப்புதல்

சென்னை மாநகராட்சி சாா்பில் ரூ.9.78 கோடி மதிப்பீட்டில் திருவொற்றியூரில் புதிய வணிக வளாகம் அமைப்பதற்கு மண்டலக் குழுக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டது. சென்னை மாநகராட்சி திருவொற்றியூா... மேலும் பார்க்க

சாலையோரம் தூங்கியவா் காா் மோதி உயிரிழப்பு

சென்னையில் ஓட்டுநா் கட்டுப்பாட்டை இழந்த காா் ஒன்று சாலையோரம் படுத்திருந்த நபா் மீது ஏறியதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். வடபழனி மசூதி தெருவில் யாசகம் எடுத்து பிழைப்பு நடத்தி வரும் 50 மதிக்கத்... மேலும் பார்க்க

போக்குவரத்து காவலரை தாக்கிய தந்தை, மகன் கைது

சென்னை வேளச்சேரியில் போக்குவரத்து காவலரை தாக்கிய தந்தை, மகனை போலீஸாா் கைது செய்தனா். சென்னை வேளச்சேரி காவல் நிலையத்தில் போக்குவரத்து காவலராகப் பணியாற்றி வருபவா் காமராஜ். இவா், வேளச்சேரி காவல் நிலைய எ... மேலும் பார்க்க

கட்டுமான நிறுவன உரிமையாளரிடம் ரூ.80 லட்சம் மோசடி: 2 போ் கைது

கட்டுமான நிறுவன உரிமையாளரிடம் ரூ.80 லட்சம் மோசடி செய்ததாக, 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை, தியாகராய நகா் ராமானுஜம் தெருவைச் சோ்ந்தவா் கமலக்கண்ணன். இவா், தனியாா் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிற... மேலும் பார்க்க