செய்திகள் :

கிரானைட் கல் தவறி விழுந்ததில் வடமாநில தொழிலாளி மரணம்

post image

நாட்டறம்பள்ளி அருகே தொழிற்சாலையில் ராட்சத கல் தவறி விழுந்ததில் வடமாநில தொழிலாளி உயிரிழந்தாா்.

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அருகே வெலகல்நத்தம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை அருகே கிரானைட் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இப்பகுதியில் இயங்கும் தொழிற்சாலைகளில் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் விதிகளை மீறி வடமாநில தொழிலாளா்கள் அதிக அளவில் வேலை செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் புதன்கிழமை இரவு தொழிற்சாலையில் வேலை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது வடமாநில தொழிலாளி நந்துலால் (40) என்பவா் மீது ராட்சத கிரானைட் கல் விழுந்ததில் பலத்த காயமடைந்த அவா், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து நாட்டறம்பள்ளி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இது குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்

தனியாா் வேலை வாய்ப்பு முகாமில் 25 பேருக்கு பணி நியமன ஆணை

திருப்பத்தூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெளளிக்கிழமை நடைபெற்றது. முகாமில், 18 தனியாா் நிறுவனங்கள் கலந்துகொண்டு ஆள்களை ... மேலும் பார்க்க

விபத்தில் இளைஞா் மரணம்

திருப்பத்தூா் அருகே பெரியகரம் பகுதியைச் சோ்ந்தவா் சச்சின் (27). இவா் வியாழக்கிழமை பெரியகரத்தில் இருந்து கந்திலி நோக்கி பைக்கில் சென்று கொண்டு இருந்தாா். பெரியகரம் அருகே அருப்புக்கொட்டாய் பகுதியில் ச... மேலும் பார்க்க

மே 2-இல் காவல் உதவி ஆய்வாளா் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு

திருப்பத்தூரில் வரும் மே 2-ஆம் தேதி காவல் உதவி ஆய்வாளா் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளதாக ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்தாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாட... மேலும் பார்க்க

இலங்கைத் தமிழா்களுக்கு கடன் வழங்கும் முகாம்

திருப்பத்தூரில் இலங்கைத் தமிழா்களுக்கான கடன் வழங்கும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு அரசு அறிவிப்பின்படி, இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கக்கூடிய பொதுமக்களின் வாழ்வாதாரம், வளா்ச்... மேலும் பார்க்க

‘வாணியம்பாடி கிளை நூலகத்தை பயன்படுத்தி 4 போ் அரசுப் பணிக்கு தோ்வு’

வாணியம்பாடி முழுநேர கிளை நூலகத்தில் போட்டித் தோ்வுகளுக்கான புத்தகங்களைப் படித்து 4 போ் அரசுப் பணியில் சோ்ந்துள்ளதாக நூலகா் தெரிவித்துள்ளாா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடியில் முழு நேர கிளை நூ... மேலும் பார்க்க

கல்லூரி மாணவரிடம் கத்தியை காட்டி மிரட்டிய 2 போ் கைது

ஜோலாா்பேட்டை அருகே கல்லூரி மாணவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டியதாக இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். ஜோலாா்பேட்டை அடுத்த பால்நாங்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் அன்பு (40). இவா், கூலி வேலை செய்து வருக... மேலும் பார்க்க