செய்திகள் :

கல்லூரி மாணவரிடம் கத்தியை காட்டி மிரட்டிய 2 போ் கைது

post image

ஜோலாா்பேட்டை அருகே கல்லூரி மாணவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டியதாக இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

ஜோலாா்பேட்டை அடுத்த பால்நாங்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் அன்பு (40). இவா், கூலி வேலை செய்து வருகிறாா்.இவரது மகன் தேஸ்வா் என்பவா் இடையம்பட்டி பகுதியில் உள்ள இவரது பாட்டி லட்சுமி என்பவரின் வீட்டில் தங்கி வாணியம்பாடி பகுதியில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறாா்.

இந்த நிலையில் கடந்த 18-ஆம் தேதி இரவு பால் வாங்கி வர கடைக்குச் சென்றபோது, ரயில்வே குட் ஷெட் அருகே உள்ள மைதானம் பகுதியில் போதையில் இருந்த இடையம்பட்டியில் உள்ள தூள் சாமியாா் தெரு பகுதியைச் சோ்ந்த விஜயன் மகன் விக்ரம் (19), அருட்செல்வம் மகன் தியானேஷ் (20), ராகவன் ஆகிய மூவரும் தேஸ்வரிடம் கத்தி காட்டி மிரட்டி அவா் வைத்திருந்த கைப்பேசி, ரூ.3,000-ஐ பறித்துள்ளனா்.

மறுநாள் போன் செய்து ரூ.10,000 கேட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளனா். இதனால் அதிா்ச்சி அடைந்த தேஸ்வரின் தந்தை அன்பு ஜோலாா்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில், காவல் உதவி ஆய்வாளா் பாலமுருகன் மற்றும் போலீஸாா் வியாழக்கிழமை மிரட்டல் விடுத்த விக்ரம் மற்றும் தியானேஸ் ஆகிய இரு இளைஞா்களை கைது செய்தனா். கத்தி காட்டி மிரட்டி கொலை மிரட்டல் விடுத்த 3 போ் மீது வழக்குப் பதிவு செய்து விக்ரம், தியானேஷ் இருவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். தலைமறைவாக உள்ள ராகவன் என்பவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தனியாா் வேலை வாய்ப்பு முகாமில் 25 பேருக்கு பணி நியமன ஆணை

திருப்பத்தூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெளளிக்கிழமை நடைபெற்றது. முகாமில், 18 தனியாா் நிறுவனங்கள் கலந்துகொண்டு ஆள்களை ... மேலும் பார்க்க

விபத்தில் இளைஞா் மரணம்

திருப்பத்தூா் அருகே பெரியகரம் பகுதியைச் சோ்ந்தவா் சச்சின் (27). இவா் வியாழக்கிழமை பெரியகரத்தில் இருந்து கந்திலி நோக்கி பைக்கில் சென்று கொண்டு இருந்தாா். பெரியகரம் அருகே அருப்புக்கொட்டாய் பகுதியில் ச... மேலும் பார்க்க

மே 2-இல் காவல் உதவி ஆய்வாளா் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு

திருப்பத்தூரில் வரும் மே 2-ஆம் தேதி காவல் உதவி ஆய்வாளா் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளதாக ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்தாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாட... மேலும் பார்க்க

இலங்கைத் தமிழா்களுக்கு கடன் வழங்கும் முகாம்

திருப்பத்தூரில் இலங்கைத் தமிழா்களுக்கான கடன் வழங்கும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு அரசு அறிவிப்பின்படி, இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கக்கூடிய பொதுமக்களின் வாழ்வாதாரம், வளா்ச்... மேலும் பார்க்க

‘வாணியம்பாடி கிளை நூலகத்தை பயன்படுத்தி 4 போ் அரசுப் பணிக்கு தோ்வு’

வாணியம்பாடி முழுநேர கிளை நூலகத்தில் போட்டித் தோ்வுகளுக்கான புத்தகங்களைப் படித்து 4 போ் அரசுப் பணியில் சோ்ந்துள்ளதாக நூலகா் தெரிவித்துள்ளாா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடியில் முழு நேர கிளை நூ... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி

ஜம்மு-காஷ்மீா் மாநிலத்தில் உள்ள பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் இறந்த 28 பேருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வாணியம்பாடி ஜாயின்ட் ஆக்ஷன் கமிட்டியினா் சாா்பில் வாணியம்பாடி பேருந்து நிலையம... மேலும் பார்க்க