செய்திகள் :

பஹல்காம் தாக்குதல்: பயங்கரவாதிகளைப் போராளிகள் எனக் குறிப்பிட்ட அமெரிக்க ஊடகம்

post image

நியூயார்க் டைம்ஸ் செய்தி ஊடகத்தில் பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்களை போராளிகள் என்று குறிப்பிட்டிருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமையில் பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்றது. இந்தத் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு நாடு முழுவதும் மட்டுமின்றி, பல்வேறு நாட்டு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில், பஹல்காம் தாக்குதலைக் குறிப்பிட்டு செய்தி வெளியிட்ட சர்வதேச செய்தி நிறுவனமான நியூயார்க் டைம்ஸ், தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை `போராளிகள்’ என்று குறிப்பிட்டது. நியூயார்க் டைம்ஸ் செய்தி நிறுவனத்தின் இந்தச் செயலுக்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் கூறியதாவது, இது போராளிகளின் தாக்குதல் அல்ல; இது ஒரு தீவிரவாதத் தாக்குதலே. உங்கள் தவறை நாங்களே சரி செய்து விடுகிறோம். இந்தியாவாக இருந்தாலும் சரி, இஸ்ரேலாக இருந்தாலும் சரி. தீவிரவாதம் என்றால் தீவிரவாதம்தான். தீவிரவாதம் என்ற விஷயத்தில் மட்டும் உண்மையில் இருந்து நியூயார்க் டைம்ஸ் விலகி விடுகிறது என்று தெரிவித்தது.

போராளி என்பதற்கும் தீவிரவாதி என்பதற்கு பெரிய வித்தியாசம் உள்ளது. போராளிகள் என்பது அரசியல் அல்லது ஒரு சமூக மாற்றத்துக்காக கடுமையாகப் போராடும் கிளர்ச்சியாளர்களைக் குறிக்கும்.

ஆனால், தீவிரவாதிகள் என்பது நாட்டுக்கே அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடியவர்கள். அவர்கள் வெளிநாடுகளில் இருந்து ஊடுருவி, தீவிரவாதத்தை ஏற்படுத்துவார்கள். இவர்கள் ஆயுதம் ஏந்தி, வன்முறையில் ஈடுபடுவதுடன், அப்பாவி மக்களையும் தாக்குவர்.

இதையும் படிக்க:'சிந்து நதியில் தண்ணீர் வராவிட்டால் இந்தியர்களின் ரத்தம் ஓடும்' - பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர்!

கேரள தலைநகரிலுள்ள விடுதிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்திலுள்ள பல்வேறு விடுதிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்திலுள்ள பிரபல நட்சத்திர விடுதி உள்பட பல்வேறு விடுதிகளில் ஐ.ஈ.டி. எனப்படும் ... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: நடுநிலை விசாரணைக்கு பாகிஸ்தான் தயார்!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக நடுநிலையான விசாரணைக்கு தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் கூறியதாவது, பழிபோடும் விளையாட்டுக்கு பஹல்காம் தாக்கு... மேலும் பார்க்க

சிந்து நதிநீரை நிறுத்திவிடுவீர்கள்.. ஆனால் எங்கே தேக்கிவைப்பீர்கள்? அசாதுதீன் ஒவைசி கேள்வி

புது தில்லி: பாகிஸ்தானுக்குச் செல்லும் சிந்து நதிநீரை நிறுத்திவிடுவது நல்ல முடிவுதான், ஆனால், அந்த தண்ணீரை எங்கே தேக்கிவைப்பீர்கள் என்று அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி அசாதுதீன் ஒவ... மேலும் பார்க்க

காஷ்மீரில் குண்டுவெடிப்பில் தகர்க்கப்பட்ட பயங்கரவாதிகளின் வீடுகள்: விடியோ வெளியீடு!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீரில் லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாதிகள் இருவரின் வீடுகளில் பாதுகாப்புப் படையினா் சோதனை மேற்கொண்டபோது, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் வ... மேலும் பார்க்க

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்: நட்டா

ஜம்மு-காஷ்மீரில் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்குக் காரணமானவர்களுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்கும் என பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்தார். இன்று காலை நட்டா ஸ்ரீமந்த் தகாதுஷேத் கணபதிக்க... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீர்: லஷ்கர் பயங்கரவாதிகள் 3 பேரின் வீடுகள் இடிப்பு!

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த 3 பயங்கரவாதிகளின் வீடுகள் இடிக்கப்பட்டுள்ளது.ஜம்மு - காஷ்மீரின் மூன்று மாவட்டங்களில் லஷ்கர்-இ-தொய்பா எனும் பயங்கரவாத அமைப்பில் செயல்பட்டு... மேலும் பார்க்க