செய்திகள் :

மெலானியா பிறந்தநாளுக்கு பரிசு வாங்க நேரமில்லை.. எப்படி சமாளித்தார் டிரம்ப்?

post image

அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாகப் பதவியேற்றிருக்கும் டொனால்ட் டிரம்ப், தன்னுடைய மனைவி மெலானியா டிரம்ப் பிறந்தநாளை பரிசு வாங்க நேரமில்லாமல் எப்படி சமாளித்திருக்கிறார் என்பது பற்றி..

மெலானியா டிரம்ப் இன்று தனது 55வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அமெரிக்க அதிபராக இருக்கும் டிரம்ப் மிகப்பெரிய பரிசுகளைக் கொடுத்திருக்க முடியும் என்றாலும் பணிச்சுமை காரணமாக பரிசு வாங்க நேரமில்லாமல் இருந்துவிட்டார்.

தனது மனைவியின் பிறந்தநாளுக்கு பரிசுப்பொருள் வாங்க நேரமில்லாத நிலையிலும் அதனை ஈடுகட்ட சமயோஜிதமாக செயல்பட்டு ஒருவழியாகச் சமாளித்தும்விட்டார் டிரம்ப்.

ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில், வெள்ளிக்கிழமை, டொனால்ட் டிரம்ப் - மெலானியா தம்பதி இத்தாலி சென்றுவிட்டுத் திரும்பும்போது, அவருக்கு போயிங் விமானத்திலேயே இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார் டிரம்ப்.

இது குறித்து டொனால்ட் டிரம்ப் கூறுகையில், இன்று அவர் பிறந்தநாளில் பணியில் சிக்கிக்கொண்டார் என்று செய்தியாளர்களிடம் கூறி சிரித்தார்.

மேலும், அவருக்காக பரிசுப் பொருள்கள் வாங்குவதற்கு எனக்கு நேரமில்லாமல் போய்விட்டது, சற்று வேலையாக இருந்துவிட்டேன், எனவே, ஏர் ஃபோர்ஸ் ஒன் போயிங் விமானத்திலேயே இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்துவிட்டேன், அவரை இன்று போயிங் விமானத்தில் இரவு உணவுக்கு அழைத்துச் செல்கிறேன், ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் அவருக்கு இன்று இரவு உணவு என்று கூறியிருக்கிறார்.

வெள்ளிக்கிழமை, போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கில் பங்கேற்க ரோம் சென்ற டிரம்ப் தம்பதி, இத்தாலி தலைநகரில் இரவு உணவு சாப்பிடுவதைத் தவிர்த்துவிட்டு, இறுதி அஞ்சலி செலுத்தியதும் நேராக அமெரிக்கா திரும்பிவிட்டார்கள்.

இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராகியிருக்கும் டிரம்ப், வரி விதிப்பு, உக்ரைன், ஈரான், காஸா போர் என பல்வேறு பிரச்னைகளில் மூழ்கியிருக்கும் நிலையில், சொந்த நிகழ்ச்சிகளுக்கு நேரம் செலவிட முடியாமல் இருந்தாலும், ஒருவழியாக பிறந்தநாளைக் கொண்டாடி சமாளித்துவிட்டார்

ஈரான்: கொள்கலன் ஏற்றுமதி நிலையத்தில் வெடிவிபத்து; 115 பேர் காயம்

ஈரானில் கொள்கலன் ஏற்றுமதி வெடிவிபத்தில் 115 பேர் காயமடைந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.ஈரானில் உள்ள ராஜேய் ஏற்றுமதி நகரத்தில் கொள்கலன்களை ஏற்றுமதி செய்யும்போது, பயங்கர வெடி விபத்து ஏற்பட்டதாகத் தகவல் வ... மேலும் பார்க்க

ஒரே ஒரு மரப்பெட்டி ஏன்? போப்பின் சவப்பெட்டியில் என்னென்ன வைக்கப்படும்?

கத்தோலிக்க திருச்சபையின் தலைவா் போப் பிரான்சிஸுக்கான இறுதிச் சடங்கு இன்று மதியம் 1.30 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. முன்னதாக பொதுமக்கள் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த போப் பிரான்சிஸின் உட... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: நேபாளத்தில் பாகிஸ்தான் தூதரகம் முன்பு போராட்டம்!

பஹல்காம் தாக்குதலைக் கண்டித்து நேபாளத்திலுள்ள பாகிஸ்தான் தூதரகம் முன்பு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜம்மு - காஷ்மீரிலுள்ள பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்... மேலும் பார்க்க

போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கு: 2 லட்சம் பேர் பங்கேற்பு

வாடிகனில் மறைந்த போப் பிரான்சிஸ் (88) இறுதிச்சடங்கில் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களும், இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மக்களும் திரண்டுள்ளனர்.சனிக்கிழமை மதியம் 1.30 மணியள... மேலும் பார்க்க

மியான்மரில் புதிய நிலநடுக்கம் ஏற்படும் எனக் கூறிய டிக்டாக் ஜோசியக்காரர் கைது!

மியான்மர் நாட்டில் புதிய நிலநடுக்கம் ஏற்படும் எனக் கூறி விடியோ வெளியிட்ட டிக்டாக் ஜோசியக்காரர் கைது செய்யப்பட்டுள்ளார். மியான்மர் நாட்டில் கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தின... மேலும் பார்க்க

போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலியில் டிரம்ப்புக்கு அவமரியாதையா?

போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு மூன்றாவது இருக்கை அளிக்கப்பட்டது நெட்டிசன்களிடையே பேசுபொருளாகி உள்ளது.வாடிகன் நகரத்தின் தலைவரும் கத்தோலிக்க திருச்சபையின் தலைமை ... மேலும் பார்க்க