செய்திகள் :

பஹல்காம் தாக்குதலில் பலியானவரின் பெயரில் பூங்கா! மேயர் அறிவிப்பு!

post image

உத்தரப் பிரதேசத்தின் கான்பூர் மாவட்டத்திலுள்ள பூங்கா மற்றும் சதுக்கத்திற்கு பெஹல்காம் தாக்குதலில் பலியானவரின் பெயர் சூட்டப்படும் என அந்நகர மேயர் அறிவித்துள்ளார்.

பஹல்காமில் கடந்த ஏப்.22 ஆம் தேதியன்று சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் பலியானார்கள். இந்தத் தாக்குதலில் கான்பூரைச் சேர்ந்த சுபம் திவிவேதி (வயது 31) எனும் நபர் அவரது மனைவி ஐஷான்யாவின் கண்முன்னே சுட்டுக்கொல்லப்பட்டார்.

மேலும், பலியான சுபம் மற்றும் அவரது மனைவியான ஐஷான்யா ஆகியோருக்கு கடந்த பிப்.12 ஆம் தேதி அன்றுதான் திருமணமானதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கான்பூரின் ஷியாம் நகரிலுள்ள ஒரு பூங்கா மற்றும் சத்துக்கத்திற்கு சுபமின் பெயர் சூட்டப்படும் என கான்பூர் நகர் மேயர் பிரமிலா பாண்டே இன்று (ஏப்.26) தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், கான்பூர் நகராட்சி ஷியாம் நகரிலுள்ள பூங்கா மற்றும் சதுக்கத்திற்கு, பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்ட சுபம் திவிவேதியின் பெயரைச் சூட்ட முடிவு செய்துள்ளதாகக் கூறியுள்ளார்.

இத்துடன், சுபமின் மனைவியான அஷான்யா விருப்பப்பட்டால் அவருக்கு நகராட்சியில் வேலை வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

முன்னதாக, பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, நேற்று (ஏப்.25) கான்பூர் மேயர் பிரமிலா பாண்டே தலைமையில் பாஜக நிர்வாகிகள் இணைந்து நகராட்சி அலுவலத்திலிருந்து மொதிஜீல் எனும் பகுதி வரை பேரணியாகச் சென்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:பஹல்காம் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியது யார்?

போப் பிரான்சிஸின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற முர்மு

புனித பீட்டா் சதுக்கத்தில் நடந்த போப் பிரான்சிஸின் இறுதிச்சடங்கில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சனிக்கிழமை கலந்து கொண்டார்.இதுகுறித்து குடியரசுத் தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், ... மேலும் பார்க்க

காஷ்மீரில் பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்

குப்வாராவில் பாதுகாப்புப் படையினர் நடத்திய சோதனையில் ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமையில் பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்றது. இந... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியது யார்?

பஹல்காம் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர், ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்தவர் என்று சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வருகின்றன.ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக... மேலும் பார்க்க

கேரள தலைநகரிலுள்ள விடுதிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்திலுள்ள பல்வேறு விடுதிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்திலுள்ள பிரபல நட்சத்திர விடுதி உள்பட பல்வேறு விடுதிகளில் ஐ.ஈ.டி. எனப்படும் ... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: நடுநிலை விசாரணைக்கு பாகிஸ்தான் தயார்!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக நடுநிலையான விசாரணைக்கு தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் கூறியதாவது, பழிபோடும் விளையாட்டுக்கு பஹல்காம் தாக்கு... மேலும் பார்க்க

சிந்து நதிநீரை நிறுத்திவிடுவீர்கள்.. ஆனால் எங்கே தேக்கிவைப்பீர்கள்? அசாதுதீன் ஒவைசி கேள்வி

புது தில்லி: பாகிஸ்தானுக்குச் செல்லும் சிந்து நதிநீரை நிறுத்திவிடுவது நல்ல முடிவுதான், ஆனால், அந்த தண்ணீரை எங்கே தேக்கிவைப்பீர்கள் என்று அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி அசாதுதீன் ஒவ... மேலும் பார்க்க