செய்திகள் :

காஷ்மீரில் பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்

post image

குப்வாராவில் பாதுகாப்புப் படையினர் நடத்திய சோதனையில் ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமையில் பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்றது. இந்தத் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு நாடு முழுவதும் மட்டுமின்றி, பல்வேறு நாட்டு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த தாக்குதலைத் தொடர்ந்து காஷ்மீர் முழுவதும் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் உளவுத்துறை தகவல்களின் பேரில், வடக்கு காஷ்மீர் மாவட்டத்தில் உள்ள முஷ்டகாபாத் மசிலின் வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நாக சைதன்யா 24-ஆவது படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

அப்போது பயங்கரவாதிகளின் மறைவிடம் வெற்றிகரமாக கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டதாக அவர் கூறினார். மேலும் ஐந்து ஏஅக-47 துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் அந்த இடத்திலிருந்து கைப்பற்றப்பட்டதாக அதிகாரி தெரிவித்தார். இதன்மூலம் பயங்கரவாதிகள் சதித்திட்டங்கள் முறியடிக்கப்பட்டுள்ளன.

ஹரியாணா: நெடுஞ்சாலையில் தூய்மைப் பணியாளர்கள் மீது வாகனம் மோதல்: 7 பேர் பலி

ஹரியாணாவில் நெடுஞ்சாலையில் தூய்மைப் பணியாளர்கள் மீது பிக்அப் வாகனம் மோதியதில் 7 பேர் பலியாகினர். ஹரியாணா மாநிலம், நுஹ் மாவட்டத்தில் உள்ள தில்லி-மும்பை விரைவுச் சாலையை 11 தூய்மைப் பணியாளர்கள் சனிக்கிழம... மேலும் பார்க்க

போப் பிரான்சிஸின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற முர்மு

புனித பீட்டா் சதுக்கத்தில் நடந்த போப் பிரான்சிஸின் இறுதிச்சடங்கில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சனிக்கிழமை கலந்து கொண்டார்.இதுகுறித்து குடியரசுத் தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், ... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலில் பலியானவரின் பெயரில் பூங்கா! மேயர் அறிவிப்பு!

உத்தரப் பிரதேசத்தின் கான்பூர் மாவட்டத்திலுள்ள பூங்கா மற்றும் சதுக்கத்திற்கு பெஹல்காம் தாக்குதலில் பலியானவரின் பெயர் சூட்டப்படும் என அந்நகர மேயர் அறிவித்துள்ளார். பஹல்காமில் கடந்த ஏப்.22 ஆம் தேதியன்று ... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியது யார்?

பஹல்காம் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர், ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்தவர் என்று சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வருகின்றன.ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக... மேலும் பார்க்க

கேரள தலைநகரிலுள்ள விடுதிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்திலுள்ள பல்வேறு விடுதிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்திலுள்ள பிரபல நட்சத்திர விடுதி உள்பட பல்வேறு விடுதிகளில் ஐ.ஈ.டி. எனப்படும் ... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: நடுநிலை விசாரணைக்கு பாகிஸ்தான் தயார்!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக நடுநிலையான விசாரணைக்கு தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் கூறியதாவது, பழிபோடும் விளையாட்டுக்கு பஹல்காம் தாக்கு... மேலும் பார்க்க