செய்திகள் :

பஹல்காம் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியது யார்?

post image

பஹல்காம் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர், ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்தவர் என்று சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வருகின்றன.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு இந்தியா மட்டுமின்றி, பல்வேறு நாடுகளின் அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர் ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த ஆதில் உசேன் தோக்கர் என்று சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வருகின்றன.

ஸ்ரீநகர் அருகே குர்ரே கிராமத்தைச் சேர்ந்த ஆதில் உசேன் தோக்கர், 2018 ஆம் ஆண்டில் மாணவர் விசா மூலம் பாகிஸ்தானுக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. பாகிஸ்தானில் பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் இணைந்து, ஆயுதப் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

பாகிஸ்தான் சென்றவுடன், குடும்பத்தினருடனான தொடர்பைத் துண்டித்ததாகவும், இவர் பாகிஸ்தான் செல்வதற்கு முன்னர் இருந்தே தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாகவும் கூறுகின்றனர்.

2018 முதல் பாகிஸ்தானில் இருந்த நிலையில், 2024-ல் இந்தியாவுக்குள் நுழைய முற்பட்டார். இதற்காக, அவருடன் சேர்ந்து ஒரு குழுவாக, கரடுமுரடான மலைப்பகுதியான பூஞ்ச்-ரஜோரி பகுதியிலிருந்து மூசா வழியாக இந்தியாவுக்குள் நுழைந்துள்ளனர்.

தாக்குதல் நடத்தப்பட்ட அனந்த்நாக் பகுதியில் தலைமறைவாக இருந்து வந்த பயங்கரவாதிகள், தாக்குதல் குறித்து திட்டம் தீட்டி வந்துள்ளனர். இந்த நிலையில்தான், சுற்றுலாத் தலங்கள் திறக்கப்படுவது அறிந்து, பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

பஹல்காம் தாக்குதலையடுத்து, பயங்கரவாதிகள் தங்கியிருந்ததாகக் கூறி, வெடிவைத்து தகர்க்கப்பட்ட வீட்டில் வெடிபொருள்கள் இருந்ததாக காவல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையும் படிக்க:பஹல்காம் தாக்குதல்: நடுநிலை விசாரணைக்கு பாகிஸ்தான் தயார்!

போப் பிரான்சிஸின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற முர்மு

புனித பீட்டா் சதுக்கத்தில் நடந்த போப் பிரான்சிஸின் இறுதிச்சடங்கில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சனிக்கிழமை கலந்து கொண்டார்.இதுகுறித்து குடியரசுத் தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், ... மேலும் பார்க்க

காஷ்மீரில் பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்

குப்வாராவில் பாதுகாப்புப் படையினர் நடத்திய சோதனையில் ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமையில் பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்றது. இந... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலில் பலியானவரின் பெயரில் பூங்கா! மேயர் அறிவிப்பு!

உத்தரப் பிரதேசத்தின் கான்பூர் மாவட்டத்திலுள்ள பூங்கா மற்றும் சதுக்கத்திற்கு பெஹல்காம் தாக்குதலில் பலியானவரின் பெயர் சூட்டப்படும் என அந்நகர மேயர் அறிவித்துள்ளார். பஹல்காமில் கடந்த ஏப்.22 ஆம் தேதியன்று ... மேலும் பார்க்க

கேரள தலைநகரிலுள்ள விடுதிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்திலுள்ள பல்வேறு விடுதிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்திலுள்ள பிரபல நட்சத்திர விடுதி உள்பட பல்வேறு விடுதிகளில் ஐ.ஈ.டி. எனப்படும் ... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: நடுநிலை விசாரணைக்கு பாகிஸ்தான் தயார்!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக நடுநிலையான விசாரணைக்கு தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் கூறியதாவது, பழிபோடும் விளையாட்டுக்கு பஹல்காம் தாக்கு... மேலும் பார்க்க

சிந்து நதிநீரை நிறுத்திவிடுவீர்கள்.. ஆனால் எங்கே தேக்கிவைப்பீர்கள்? அசாதுதீன் ஒவைசி கேள்வி

புது தில்லி: பாகிஸ்தானுக்குச் செல்லும் சிந்து நதிநீரை நிறுத்திவிடுவது நல்ல முடிவுதான், ஆனால், அந்த தண்ணீரை எங்கே தேக்கிவைப்பீர்கள் என்று அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி அசாதுதீன் ஒவ... மேலும் பார்க்க