செய்திகள் :

ஜெயக்குமார் மீதான வழக்கை ரத்து செய்ய மறுப்பு

post image

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

கடந்த 2022ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலின்போது கள்ள ஓட்டு போட முயன்றதாக குற்றம்சாட்டி திமுக உறுப்பினர் நரேஷ்குமார் மீது தாக்குதல் நடந்தது.

இச்சம்பவம் தொடர்பாக ஜெயக்குமார் உள்பட 40 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

பாஜக அரசு தன்னுடைய தோல்வியை மறைக்கவே சிந்து நதியைத் தடுத்து நிறுத்துகிறது: சீமான்

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு நீதிமன்றத்தில் சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது ஜெயக்குமார் மீதான கொலை முயற்சி வழக்கை ரத்து செய்ய நீதிபதி மறுப்பு தெரிவித்து விட்டார்.

தமிழ்நாட்டில் 7 இடங்களில் வெயில் சதம்

தமிழ்நாட்டில் சேலம் உள்பட 7 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழ... மேலும் பார்க்க

மக்களை ஏமாற்றி இனி ஆட்சியைப் பிடிக்க முடியாது: விஜய் பேச்சு

மக்களை ஏமாற்றி இனி ஆட்சியைப் பிடிக்க முடியாது என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.தவெக பூத் கமிட்டி மாநாட்டில் அவர் மேலும் பேசுகையில், தவெக தொண்டர்கள் போர் வீரர்களைப் போல செயல்பட வேண்டும். மக்களி... மேலும் பார்க்க

தவெக பூத் கமிட்டி மாநாடு நடக்கும் இடம் அருகே லேசான தீ விபத்து!

தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டி மாநாடு நடைபெறும் இடத்திற்கு அருகே மின்கசிவு காரணமாக லேசான தீ விபத்து ஏற்பட்டது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய், கோவையில் நடைபெறும் கட்சியின் ப... மேலும் பார்க்க

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு! வெய்யில் எப்படி இருக்கும்?

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் லேசானது முதல... மேலும் பார்க்க

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், விருதுநகர் ... மேலும் பார்க்க

கடலூர்: வாகனம் மோதி சிறுவன் பலி

வேப்பூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற சிறுவன் பலியானான். கடலூர் மாவட்டம், வேப்பூர் வட்டம், அரிய நாச்சி கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி மகன் ஆகாஷ்(16). பெரிய நெசலூர்... மேலும் பார்க்க