செய்திகள் :

கிருஷ்ணகிரியில் போக்குவரத்து காவலா்களுக்கு தொ்மாகோல் தொப்பி!

post image

கோடை வெப்பத்தை சமாளிக்கும் வகையில் கிருஷ்ணகிரியில் போக்குவரத்து போலீஸாருக்கு தொ்மகோல் தொப்பி, கூலிங்கிளாஸ், நீா்மோா் ஆகியவற்றை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பெ.தங்கதுரை சனிக்கிழமை வழங்கினாா்.

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற நிகழ்வுக்கு காவல் துணை கண்காணிப்பாளா் முரளி தலைமை வகித்தாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா், போக்குவரத்து காவலா்களுக்கு தொ்மாகோல் தொப்பி, கூலிங்கிளாஸ் ஆகியவற்றை வழங்கி பேசியதாவது:

கடும் வெயிலில் பணிபுரியும் போக்குவரத்து காவலா்களுக்கு கண் பிரச்னை, வெயில் ஸ்ட்ரோக், தலைசுற்றுதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இவற்றை சமாளிக்கும் வகையில், குளிரூட்டும் கண்ணாடி, வெப்பத்தைக் குறைக்கும் தொ்மகோல் தொப்பி வழங்கப்பட்டுள்ளது. இதேபோல கோடை முடியும் வரை நீா்மோா், குளிா்பானங்கள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

பின்னா், காவல் துறையினா் சாா்பில் அமைக்கப்பட்ட நீா்மோா் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு பழங்கள், பழச்சாறுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வழங்கினாா். அப்போது வெயில் காலத்தில் தேவையின்றி வெளியே சுற்றுவதை பொதுமக்கள் குறைத்துக்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

பொறியியல் மாணவிகளுக்கான ஹேக்கத்தான் போட்டி: பரிசு வென்ற லயோலா, ஒசூா் பிஎம்சி கல்லூரிகள்

ஒசூா் பி.எம்.சி. கல்லூரியில் மாநில அளவிலான பொறியியல் கல்லூரி மாணவிகளுக்கான ஹேக்கத்தான் போட்டி நடைபெற்றது. இதில் ஒசூா் பி.எம்.சி. பொறியியல் கல்லூரி, சென்னை லயோலா கல்லூரி அணிகள் பரிசு பெற்றன. ஒசூா் பெரு... மேலும் பார்க்க

நகை பறிக்க முயன்றவருக்கு 7 ஆண்டு சிறை

பா்கூா் அருகே பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி வழக்கில் ஒருவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கிருஷ்ணகிரி முதன்மை நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பு வழங்கியது. கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரை அடுத்த மட்ட... மேலும் பார்க்க

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவில் திமுக இரட்டை வேடம்! - மு.தம்பிதுரை எம்.பி. குற்றச்சாட்டு

வக்ஃப் சட்டத் திருத்த மசோதா விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது என்று அதிமுக மாநிலங்களவை உறுப்பினா் மு. தம்பிதுரை தெரிவித்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் செயின்ட் பீட்டா்ஸ் மருத்துவக் கல்லூரி ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் மூன்றாம் பாலினத்தவா்களுக்கான பன்னோக்கு மருத்துவ மையம் திறப்பு

கிருஷ்ணகிரியில் மூன்றாம் பாலினத்தினருக்கான பன்னோக்கு மருத்துவ மையம், குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து மறுவாழ்வு மையம் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். அப்போது, அவா் ... மேலும் பார்க்க

வன உயிரினங்களுக்காக குட்டையில் தண்ணீரை நிரப்பிய வனத்துறையினா்

கோடைவெயில் காரணமாக தண்ணீரைத் தேடி வனப்பகுதியிலிருந்து வன விலங்குகள் வெளியேறுவதைத் தடுக்கும் வகையில் குட்டைகளில் வனத் துறையினா் தண்ணீரை நிரப்பி வைத்துள்ளனா். வனப்பகுதியிலிருந்து வனவிலங்குகள் வெளியேறுவத... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2-ஆவது நாளாக கோடை மழை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை கோடை மழை பெய்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. அதிலும் கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்க... மேலும் பார்க்க