செய்திகள் :

`தமிழ்நாட்டு மண்ணில் நின்று பிரதமர் மோடி உத்தரவாதம் தர வேண்டும்!'- ஸ்டாலின் கோரிக்கை என்ன?

post image

நீலகிரி மாவட்டம், ஊட்டியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைத் திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின், ஊட்டியில் நடைபெற்ற அரசு விழாவில் தலைமையேற்று நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். அப்போது நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் குறித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், "நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு என்கிற பெயரில் மிகப்பெரிய சதியை ஒன்றிய அரசு நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. மக்கள்தொகையை முறையாக கட்டுப்படுத்தி வரும் தென்மாநிலங்களில் மக்கள் அடர்த்தி குறைவு என்கிற பெயரில் தொகுதி எண்ணிக்கையை குறைக்க இருக்கிறது. நாடாளுமன்றத்தில் தென்மாநிலங்களின் உரிமையைப் பறிக்கிறது இந்த ஒன்றிய அரசு.

முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாட்டின் குரலை நாடாளுமன்றத்தில் நெரிக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி அனைத்து கட்சிகளின் கூட்டத்தை நடத்தினேன். இது குறித்து பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறோம். விரைவில் நேரம் ஒதுக்குவார் என நம்புகிறோம். இன்றைக்கு ஊட்டியில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்க வேண்டிய காரணத்தால் பிரதமர் மோடியின் ராமேஸ்வரம் நிகழ்ச்சியில் என்னால் பங்கேற்க முடியவில்லை. ஆனால், தமிழ்நாடு வந்திருக்கும் பிரதமர் மோடி நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு என்கிற பெயரில் தமிழ்நாட்டின் குரலை நசுக்கும் சதி திட்டத்தை தொடர மாட்டோம் என தமிழ்நாட்டு மண்ணில் நின்று உத்தரவாதம் தர வேண்டும்‌ என கோரிக்கையாகக் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

'அதிமுகவினர் அண்ணன், தம்பி போல உள்ளோம்; இதனால்தான் செங்கோட்டையன் உள்ளே இருந்தார்' - ஓ.எஸ்.மணியன்

அதிமுகவினர் இன்று அவையில் இருந்து வெளிநடப்பு செய்தபோது, செங்கோட்டையன் மட்டும் அவையில் இருந்தது குறித்து முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் விளக்கம் அளித்திருக்கிறார். அந்த தியாகி யார்? என்ற பேட்ஜ் அணிந்த ... மேலும் பார்க்க

யார் அந்த தியாகி: "அவருக்கு பட்டம் கொடுத்த நீங்கதான் சொல்லணும்" - TASMAC வழக்கில் CM-க்கு EPS பதிலடி

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று (ஏப்ரல் 7) நடைபெற்ற கூட்டத்தில், டாஸ்மாக் வழக்கு தொடர்பாக `யார் அந்த தியாகி?' என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வியெழுப்பினார்.ஆனால், சட்டமன்றத்தில் தொடர... மேலும் பார்க்க

Congress : `அன்று’ விழுத் தொடங்கிய காங்கிரஸ் இன்னும் எழ முடியாமல் திணறுவது ஏன்? - விரிவான அலசல்!

`முன்னொரு காலத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் என்ற ஒரு கட்சி இருந்ததாகவும், அதைப் பல முக்கிய அரசியல் தலைவர்கள் வழிநடத்தியதாகவும் கேள்விப்பட்டிருக்கிறோம்' என மக்கள் பே... மேலும் பார்க்க

இபிஎஸ் OUT; செங்கோட்டையன் IN; `காலில் விழுந்த EPS' - `பொம்மை முதல்வர்' - சட்டசபையில் நடந்தது என்ன?

தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று (ஏப்ரல் 7) கூடியது. அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் குறித்து கவன ஈர்ப்பு நேரத்தில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச எழுந்ததும், சட்டப்பேரவை நேரலை ஒளிபரப... மேலும் பார்க்க

`அந்த தியாகி யார்?' - சட்டப்பேரவைக்கு பேட்ஜ் அணிந்து வந்த அதிமுக எம்.எல்.ஏ-க்கள்; காரணம் என்ன?

தமிழக அரசின் 2025-2026ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை கடந்த மாதம் 14-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். 15-ம் தேதி வேளாண்மை பட்ஜெட்டை வேளாண்மை துறை அமைச்சர் ... மேலும் பார்க்க