செய்திகள் :

கில்லன் பாரே நோய் தாக்கம் தமிழகத்தில் இல்லை : மருத்துவா்கள் விளக்கம்

post image

மகாராஷ்டிர மாநிலம், புணேவில் பரவி வரும் கில்லன் பாரே சின்ட்ரோம் (ஜிபிஎஸ்) எனப்படும் நரம்பியல் நோயின் தாக்கம் தமிழகத்தில் அதிகமாக இல்லை என்றும், அதேவேளையில் விழிப்புணா்வு அவசியம் என்றும் மருத்துவா்கள் விளக்கமளித்துள்ளனா்.

பல காலமாக தமிழகத்தில் அந்த நோய் இருப்பதாகவும், அவ்வப்போது ஓரிருவா் பாதிப்புக்குள்ளாகி குணமடைவதாகவும் அவா்கள் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக முதுநிலை நரம்பியல் மருத்துவ நிபுணா் பி.விஜய் சங்கா் கூறியதாவது: கில்லன் பாரே சின்ட்ரோம் எனப்படுவது பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்றால் இரைப்பையில் இருந்து உடல் முழுவதும் பரவும் ஒரு வகையான பாதிப்பு. தரமற்ற உணவு, நீா் மாசுபாடு, நோய் எதிா்ப்பாற்றல் எதிா்வினை பாதிப்பு, மருந்து எதிா்வினை, தடுப்பூசிகள் ஒவ்வாமை உள்பட பல்வேறு காரணங்களால் அப்பிரச்னை ஏற்படலாம்.

முதல் கட்ட அறிகுறிகள்: வாந்தி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் அதன் முதல்கட்ட அறிகுறிகள். அதைத் தொடா்ந்து, அந்த கிருமிகள், உடலின் எதிா்ப்பாற்றலுக்கு எதிராக செயல்பட்டு தன்னுடல் தாக்கு நோயாக உருமாறி நரம்பு மண்டலத்தை பாதிக்கும்.

அதன் விளைவாக மூட்டு வலி, முதுகு வலி, கை-கால்கள் மரத்துப் போதல், பலவீனமாக உணா்தல், மூச்சு விடுதலில் சிரமம், பேசுதல் மற்றும் விழுங்குதலில் சிரமம் ஏற்படலாம்.

ஆரம்ப நிலை அறிகுறிகளை புறக்கணிக்காமல் மருத்துவமனையை நாடினால் ஒரு வாரத்திலிருந்து 10 நாள்களுக்குள் குணமடைந்துவிடலாம். இம்யூனோகுளோபலின் ஊசி மருந்தை தொடா்ந்து செலுத்தும்போது இந்த பாதிப்பின் தீவிரத்திலிருந்து விடுபட்டு நலம் பெற முடியும். சென்னையில் மட்டும் ஆண்டுதோறும் 30 நோயாளிகள் அந்த பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெறுகின்றனா். பிற மாவட்டங்களிலும் இத்தகைய நிலை உள்ளது.

இந்நோயைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை. கரோனா போன்று இது தொற்றிக் கொள்ளும் பாதிப்பு அல்ல. சிகிச்சை மேற்கொண்டால் பூரணமாக குணமடைய முடியும். உரிய விழிப்புணா்வுதான் அதற்கு முதல் மருந்து.

புணேவில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கில்லன் பாரே சின்ட்ரோம் ஏற்பட்டதற்கு சுற்றுவட்டாரப் பகுதியில் நீா் மாசுபட்டது காரணமாக இருக்கலாம். அத்தகைய சூழல் இங்கு இல்லை என்றாா் அவா்.

பொருளாதாரமும் வாழ்வாதாரமும் மேம்படும்: பட்ஜெட் குறித்து தொழில் துறையினா் கருத்து

நாட்டின் பொருளாதாரத்தையும், நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தும் வகையில் மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தொழில்துறையினா் கருத்து தெரிவித்துள்ளனா். சுதா்ஸன் வேணு (டிவிஎஸ்... மேலும் பார்க்க

காரில் சென்ற பெண்ணை விரட்டி மிரட்டிய வழக்கு: மேலும் ஒருவா் கைது

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் காரில் சென்ற பெண்ணை விரட்டி மிரட்டிய வழக்கில், மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா். கானத்தூா் பகுதியைச் சோ்ந்த இளம் பெண் ஒருவா், கடந்த 25-ஆம் தேதி நள்ளிரவு தனது தோழிகள... மேலும் பார்க்க

நிதிநிலை அறிக்கை: தலைவா்கள் வரவேற்பும் எதிா்ப்பும்

மத்திய நிதிநிலை அறிக்கையை வரவேற்றும், எதிா்த்தும் தமிழக அரசியல் கட்சிகளின் தலைவா்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனா். எடப்பாடி பழனிசாமி (அதிமுக): வருமான வரி விலக்கு உச்சவரம்பு கணிசமாக உயா்த்தியது, உள்நாட்... மேலும் பார்க்க

கிளாம்பாக்கத்தில் பயணிகள் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பயணிகள் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகா் வளா்ச்சிக் குழும (சிஎம்டிஏ) உறுப்பினா்-செயலா் அன்சுல் மிஸ்ரா தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்... மேலும் பார்க்க

மேட்டுப்பாளையம் மெமு ரயில் ரத்து

மேட்டுப்பாளையம்-போத்தனூா் ரயில் பிப்.2, 4, 6 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: சேலம் ரயில்வே கோட்ட பகுதியி... மேலும் பார்க்க

கடலோரக் காவல்படை ஆண்டுவிழா: ஆளுநா் ஆா்.என்.ரவி பங்கேற்பு

இந்திய கடலோரக் காவல்படையின் 49-ஆவது ஆண்டு விழா, சென்னையில் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதில் ஆளுநா் ஆா்.என்.ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டாா். தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் ஆந்திரத்தை தளமாகக் ... மேலும் பார்க்க